LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- இந்திய சாதனைத் தமிழர்கள்

உலகக்கோப்பை போட்டிக்கான தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட அணியில் தமிழக வீரர்

 

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே  ஜூன் 11 முதல் 15-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.

மிகப்பெரிய இறுதிப்போட்டிக்குத் தயாராக இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், இரண்டு அணிகளும் அவர்களுடைய இறுதிப்போட்டிக்கான ஸ்குவாடை அறிவித்துள்ளன.

தென்னாப்பிரிக்கா அறிவித்திருக்கும் 2025  அணியில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சேனுரான் முத்துசாமி என்ற சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரும் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் இறுதிப்போட்டிக்கான அணியில் இடம்பிடித்திருக்கும் இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சேனுரான் முத்துசாமி, தென்னாப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

31 வயதாகும் சேனுரானின் குடும்பம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் சேனுரான் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர், இருப்பினும் அவர் இரண்டு முறை தமிழகத்திற்கு வருகைபுரிந்து தனது தொலைதூர உறவினர்களைச் சந்தித்துள்ளார். அவர்கள் இன்னும் நாகப்பட்டினத்தில் வசித்துவருகின்றனர்.

2013 முதல் தென்னாப்பிரிக்காவிற்காக முதல் தர கிரிக்கெட்டை விளையாடிவரும் சேனுரான், பந்துவீச்சில் 262 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 9 சதங்களுடன் 30 அரைச்சதங்களையும் அடித்து 5111 ரன்களை குவித்துள்ளார்.

தன்னுடைய அபாரமான ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திய சேனுரான் முத்துசாமிக்கு 2019-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சர்வதேச அறிமுகம் கிடைத்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற சேனுரான், தன்னுடைய
முதல் விக்கெட்டாக விராட் கோலியை வெளியேற்றிச் சிறந்த தொடக்கத்தைப் பெற்றார்.

அதற்குப்பிறகு தென்னாப்பிரிக்கா அணியில் பெரிதாக இடம்பிடிக்காத சேனுரான், சமீபத்திய தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்ததன் மூலம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம்பிடித்துள்ளார்.

மிகப்பெரிய இறுதிப்போட்டியில் இடம்பிடித்ததன் மூலம் கவனம்பெற்றுள்ளார் சேனுரான் முத்துசாமி. தென்னாப்பிரிக்காவின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான கேசவ் மகாராஜ்ஜுன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1998-ல் நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் டிரோபியை வென்றதற்குப்பிறகு 27 வருடங்களாகக் கோப்பையே வெல்லாமல் இருந்துவரும் தென்னாப்பிரிக்கா அணி, WTC இறுதிப்போட்டியை வெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். 

 

 

by hemavathi   on 15 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மக்களை வசீகரித்த கோகுல் சாண்டல்  பவுடர்  - கும்பகோணம் டி.எஸ்.ஆர் அன் கோவின் கதை மக்களை வசீகரித்த கோகுல் சாண்டல் பவுடர் - கும்பகோணம் டி.எஸ்.ஆர் அன் கோவின் கதை
பெருங்கவிக்கோ வா மு. சேதுராமன் மறைந்தார்.. எமது அஞ்சலி.. பெருங்கவிக்கோ வா மு. சேதுராமன் மறைந்தார்.. எமது அஞ்சலி..
இந்திய பார் கவுன்சில் தலைவராக மீண்டும் தமிழர் தேர்வு இந்திய பார் கவுன்சில் தலைவராக மீண்டும் தமிழர் தேர்வு
முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ  காலமானார் முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ காலமானார்
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரலட்சுமிக்கு விஞ்ஞானி விருது மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரலட்சுமிக்கு விஞ்ஞானி விருது
கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்த சங்கரி  தேர்வு கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்த சங்கரி தேர்வு
தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப்  புகழ் வணக்கம்  - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப் புகழ் வணக்கம் - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
ஏரிகளைச் சீரமைத்து வரும் இளைஞர் நிமல் ராகவனுக்கு முதலமைச்சர் பாராட்டு ஏரிகளைச் சீரமைத்து வரும் இளைஞர் நிமல் ராகவனுக்கு முதலமைச்சர் பாராட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.