LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு

 

தமிழக ரயில்வே திட்டங்களுக்கென மத்திய நிதிநிலை அறிக்கையில்  ரூ. 6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மதுரை ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு பணி ரூ.413 கோடியில் நடக்கிறது. இதுவரை கிழக்கு நுழைவாயில் பகுதியில் பல அடுக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனக் காப்பகங்கள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ரயில் பாதைக்கு மேல்புறம் பயணிகள் வசதிகளுக்கான அரங்கு அமைக்க அடித்தளமிடும் பணி நடக்கிறது
 
கிழக்கு நுழைவாயில் பகுதியில் முகப்பு கட்டிடம் கட்டுதல், பயணிகளுக்குத் தொந்தரவு இன்றி பார்சல்களை கையாளும் தனி நடை மேம்பாலம், ரயில் நிலையம்- பெரியார் பேருந்து நிலையம் இணைக்கும் சுரங்கப்பாதை பணிகளும் தீவிரமாக நடக்கின்றன.
 
ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் ரூ. 113 கோடியில் மறுசீரமைப்பு நடக்கிறது. பார்சல் ஆபீஸ் கட்டுமானம், ரயில் நிலைய நுழைவு வளைவு அருகே இருந்த வணிக வளாகக் கட்டிடம், பயணிகள் தங்கும் அறைகளாக மாற்றியது, வடக்குப் பகுதியில் ரயில் நிலைய கட்டிடம், ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் பயணிகள் சென்று வரத் தனிப் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவுற்றன.
 
கிழக்குப் பகுதியில் ரயில் நிலைய கட்டிடம், ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளுக்குத் தனிப்பாதை , நடைமேடை மேம்பாட்டு மற்றும் உப்பு நீரைக் குடி நீராக்கும் அமைப்பு போன்ற பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
அம்பாசமுத்திரம், திண்டுக்கல், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, பழனி, பரமக்குடி, புதுக்கோட்டை, ராஜபாளையம், ராமநாதபுரம், சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தி அமிர்த பாரத் ரயில் நிலையங்களாக மாற்றும் பணிகளும் தொடர்ந்து நடக்கின்றன.
 
மத்திய நிதிநிலை அறிக்கையில்: மேற்கண்ட பணிகள், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 10 ஆண்டுக்கு முன்பு இருந்த நிதி ஒதுக்கீட்டைக் காட்டிலும் 7.5 மடங்கு அதிகம். தமிழகத்தில் 2014-ல் இருந்து 1303 கிலோ மீட்டர் நீளத்துக்குப் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த இலங்கை நாட்டிலுள்ள ரயில் பாதை அளவுக்கு நிகரானது. தமிழகத்தில் மொத்த ரயில் பாதைகளில் 94 சதவீதப் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 
 
மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

 

by hemavathi   on 04 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா? சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?
தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத்  தமிழக அரசு திட்டம் இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத் தமிழக அரசு திட்டம்
நிதிநிலை அறிக்கை இலச்சினையில்  ரூ  - தமிழக அரசு அதிரடி நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூ - தமிழக அரசு அதிரடி
6  முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது
மார்ச் 13-ல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்க்கூடல் மற்றும் 'உலக மொழிகளில் திருக்குறள்' நூல் வெளியீட்டு விழா மார்ச் 13-ல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்க்கூடல் மற்றும் 'உலக மொழிகளில் திருக்குறள்' நூல் வெளியீட்டு விழா
பாலியல் புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்கள் பணி நீக்கம்- சான்றிதழ்களை  ரத்து செய்யும் பணி தீவிரம் பாலியல் புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்கள் பணி நீக்கம்- சான்றிதழ்களை ரத்து செய்யும் பணி தீவிரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.