LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

என்றும் வாழட்டும் இம்மனிதநேயம்...மனதை நெகிழ வைக்கும் போலந்து நிகழ்வு

என்றும் வாழட்டும் இம்மனித நேயம்... நெகிழ வைக்கும் போலந்து நிகழ்வு

ஆகஸ்ட் 19 உலக மனிதநேய தினம்,இத்தினத்தினையொட்டி மனிதநேயத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த நிகழ்வு போலந்து நாட்டில் நடைபெற்றுள்ளது. உள்ளம் தொடும் அவ்வுன்னத மனிதநேய நிகழ்வின் விவரம் இதோ...

மரியா ஆண்ட்ரேஜிக்  என்ற போலந்து வீராங்கனை ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.தன் மதிப்புமிக்க பதக்கத்தினை எட்டு மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஏலம் அறிவித்து அக் குழந்தையின் உயிரைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் பின்னர் நடைபெற்ற சம்பவமே அனைவரின் கவனத்தையும் இந்நிகழ்வை நோக்கி திருப்பியுள்ளது.ஏலம் விட்டு பெறப்பட்ட தொகை குழந்தையின் அறுவை சிகிச்சைக்கானது என்று அறிந்த ஸ்ப்கா என்ற நிறுவனம் பணத்தையும் கொடுத்துவிட்டு பதக்கத்தையும் அவரிடமே திரும்பக் கொடுத்து உள்ளது.

மிலோசெக் மலிசா எட்டு மாத சிறுமி. இக்குழந்தைக்கு கடுமையான இதய நோய் இருந்துள்ளது. எனவே அறுவை சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இல்லையெனில் குழந்தை பிழைக்காது என்ற நிலையில் அதன் பெற்றோர் இணையவழி நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இச்சிக்கலான சிகிச்சை செய்யப்பட முடியாத நிலையில் அமெரிக்காவின் stanford  பல்கலைக் கழக மருத்துவ மையத்தில் இதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்துள்ளது.

ஆனால் அதற்கான செலவு அதிகமாக இருந்திருக்கிறது. (1.5 மில்லியன் போலந்து ஸ்லோட்டி) நிலைமை மோசமாக பெற்றோர் தங்கள் இணைய வழி இடுகையைப் புதுப்பித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மரியா ஆண்ட்ரேஜிக் தனது வெள்ளிப் பதக்கத்தினை ஏலம் அறிவித்து அதில் கிடைக்கும் தொகையை குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அளிக்க முடிவு எடுத்துள்ளார்.
அவர் தனது முகநூல் பக்கத்தில்"முடிவு செய்ய எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. நான் செய்யும் நிதி திரட்டல் சரியானது என்று எனக்குத் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.

25 வயதான இந்தப் பெண் 2016 ரியோ ஒலிம்பிக்கில் 2 சென்டி மீட்டர் தூரத்தில் தனது வெற்றியை தவறவிட்டவர்.2018 இல் எலும்பு புற்றுநோய் இவருக்கு ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் கனவு தகர்ந்த போதும் ஹீமோதெரபி இல்லாத அறுவை சிகிச்சையால் சிறிது சிறிதாக குணம் அடைந்துள்ளார்.

இவரது பதக்கத்தினை ஸ்ப்கா போல்ஸ்கா என்ற போலந்து  நிறுவனம் 1,25,000 டாலரில் ஏலத்தில் பெற்றுள்ளது. பின்னர் அந்நிறுவனம் அத்தொகையையும் பணத்தையும் அவரிடமே திரும்பக் கொடுத்துள்ளது."திருமதி. மரியா செய்த அழகான மற்றும் மிகவும் உன்னதமான செய்கையால் நாங்கள் நெகிந்தோம். போக்கியோவின் வெள்ளிப்பதக்கம் அவரிடமே இருக்க வேண்டும். எங்களால் பங்களிக்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று அந்நிறுவனம் முகநூலில் பதிவிட்டு உள்ளது.

இம் மனிதநேய நிகழ்வு உலக மக்கள் மனதினை நெகழ்ச்சி அடைய வைத்துள்ளது. மனிதன் வாழ காற்று, நீர்,உணவோடு மனிதநேயமும் மிக அவசியம் என்று தானே கூற வேண்டும்.

by R.Gnanajothi   on 21 Aug 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.