|
|||||
என்றும் வாழட்டும் இம்மனிதநேயம்...மனதை நெகிழ வைக்கும் போலந்து நிகழ்வு |
|||||
என்றும் வாழட்டும் இம்மனித நேயம்... நெகிழ வைக்கும் போலந்து நிகழ்வு ஆகஸ்ட் 19 உலக மனிதநேய தினம்,இத்தினத்தினையொட்டி மனிதநேயத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த நிகழ்வு போலந்து நாட்டில் நடைபெற்றுள்ளது. உள்ளம் தொடும் அவ்வுன்னத மனிதநேய நிகழ்வின் விவரம் இதோ... மரியா ஆண்ட்ரேஜிக் என்ற போலந்து வீராங்கனை ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.தன் மதிப்புமிக்க பதக்கத்தினை எட்டு மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஏலம் அறிவித்து அக் குழந்தையின் உயிரைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர் நடைபெற்ற சம்பவமே அனைவரின் கவனத்தையும் இந்நிகழ்வை நோக்கி திருப்பியுள்ளது.ஏலம் விட்டு பெறப்பட்ட தொகை குழந்தையின் அறுவை சிகிச்சைக்கானது என்று அறிந்த ஸ்ப்கா என்ற நிறுவனம் பணத்தையும் கொடுத்துவிட்டு பதக்கத்தையும் அவரிடமே திரும்பக் கொடுத்து உள்ளது. மிலோசெக் மலிசா எட்டு மாத சிறுமி. இக்குழந்தைக்கு கடுமையான இதய நோய் இருந்துள்ளது. எனவே அறுவை சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இல்லையெனில் குழந்தை பிழைக்காது என்ற நிலையில் அதன் பெற்றோர் இணையவழி நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இச்சிக்கலான சிகிச்சை செய்யப்பட முடியாத நிலையில் அமெரிக்காவின் stanford பல்கலைக் கழக மருத்துவ மையத்தில் இதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்துள்ளது. ஆனால் அதற்கான செலவு அதிகமாக இருந்திருக்கிறது. (1.5 மில்லியன் போலந்து ஸ்லோட்டி) நிலைமை மோசமாக பெற்றோர் தங்கள் இணைய வழி இடுகையைப் புதுப்பித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மரியா ஆண்ட்ரேஜிக் தனது வெள்ளிப் பதக்கத்தினை ஏலம் அறிவித்து அதில் கிடைக்கும் தொகையை குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அளிக்க முடிவு எடுத்துள்ளார். 25 வயதான இந்தப் பெண் 2016 ரியோ ஒலிம்பிக்கில் 2 சென்டி மீட்டர் தூரத்தில் தனது வெற்றியை தவறவிட்டவர்.2018 இல் எலும்பு புற்றுநோய் இவருக்கு ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் கனவு தகர்ந்த போதும் ஹீமோதெரபி இல்லாத அறுவை சிகிச்சையால் சிறிது சிறிதாக குணம் அடைந்துள்ளார். இவரது பதக்கத்தினை ஸ்ப்கா போல்ஸ்கா என்ற போலந்து நிறுவனம் 1,25,000 டாலரில் ஏலத்தில் பெற்றுள்ளது. பின்னர் அந்நிறுவனம் அத்தொகையையும் பணத்தையும் அவரிடமே திரும்பக் கொடுத்துள்ளது."திருமதி. மரியா செய்த அழகான மற்றும் மிகவும் உன்னதமான செய்கையால் நாங்கள் நெகிந்தோம். போக்கியோவின் வெள்ளிப்பதக்கம் அவரிடமே இருக்க வேண்டும். எங்களால் பங்களிக்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று அந்நிறுவனம் முகநூலில் பதிவிட்டு உள்ளது. இம் மனிதநேய நிகழ்வு உலக மக்கள் மனதினை நெகழ்ச்சி அடைய வைத்துள்ளது. மனிதன் வாழ காற்று, நீர்,உணவோடு மனிதநேயமும் மிக அவசியம் என்று தானே கூற வேண்டும். |
|||||
by R.Gnanajothi on 21 Aug 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|