LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் தமிழ் நாளேடுகள் விநியோகம் !!

தமிழர் பண்பாட்டு நடுவத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்தில், பயணிகளுக்கு தமிழ் நாளேடுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

 

சென்னை விமான நிலையத்தை தமிழ்படுத்தும் பொருட்டு, பல்வேறு கோரிக்கைகளை தமிழர் பண்பாட்டு நடுவம் சென்னை விமான நிலைய இயக்குனரிடம் முன்வைத்தது. இந்த கோரிக்கைகளை பரிசீலித்த சென்னை விமான நிலைய நிர்வாகம், தமிழக பயணிகள் வசதிக்காக பயணிகள் அனைவருக்கும் தமிழ் நாளேடுகள் கிடைக்கும்படி செய்தது.  இதனால் பயணிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் ஆர்வமாக தமிழ் நாளேடுகளை எடுத்துச் செல்கின்றனர். தமிழ் நாளிதழ்கள் கிடைக்கும்படி செய்த சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு நம் வாழ்த்துகள். 

 

அதே போல் சென்னை விமான நிலையத்தின் உள்ளும் புறமும் இருக்கும் கடைகள் அனைத்தும் தமிழ்ப் பெயர் பலகையை தாங்கி நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை விமான நிலையம் ஏற்றுள்ளது. அதற்கான உத்தரவை இப்போது வணிகர்களிடம் பிறப்பித்து உள்ளது. மேலும் விமானத்தின் உள்ளே கொடுக்கப்படும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அறிவுப்புகளும் தமிழில் இருக்க வேண்டும், தமிழ் பேசும் விமான பணிப்பெண்களை கட்டாயம் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் சென்னை விமான நிலைய நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றும் என தமிழர் பண்பாட்டு நடுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.   

by Swathi   on 03 Feb 2014  0 Comments
Tags: Chennai Airport   Tamil News Paper   Airport Tamil   Chennai Airport   தமிழ் நாளேடுகள்   சென்னை விமான நிலையம்   தமிழ் நாளேடுகள் வினியோகம்  
 தொடர்புடையவை-Related Articles
பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் தமிழ் நாளேடுகள் விநியோகம் !! பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் தமிழ் நாளேடுகள் விநியோகம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.