பத்ம விருது பெறும் சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் ஏழு தமிழர்கள் இரு தமிழ் வம்சாவளியினரும் பத்ம விருது பட்டியலில் இடம்பிடிப்பு
சிற்பி என்ற சிறப்புப் பெயரோடு அழைக்கப்படும் பொ. பாலசுப்ரமணியம் அவர்கள் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார். இவர் கோயம்புத்தூர் பொள்ளாச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர் என்ற பன்முகம் கொண்ட கவிஞர் சிற்பி சாகித்திய அகாதமியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இவரது 'ஒரு கிராமத்து நதி' சாகித்திய அகாதமி விருது பெற்றது. கவிதை நூல்கள், உரைநடை நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் பல படைப்புகளையும் தந்துள்ளார் கவிஞர் சிற்பி.
மேலும் பல்லேஷ் பஜந்திரி (இசைக்கலைஞர்) எஸ்.தாமோதரன் (சமூகசேவை), சௌகார் ஜானகி (நடிகை),முத்துக்கண்ணம்மாள் (சதுர் நடனக் கலைஞர்) ஏ.கே.சி நடராஜன் (கிளாரினெட் கலைஞர்) வீராச்சாமி சேஷய்யா (மருத்துவம்) ஆகியோரும் பத்மஸ்ரீ விருது 2022 பெறுகின்றனர்.
மகாராஷ்டிராவில் வசிக்கும் நடராஜன் சந்திரசேகரன் அவர்கள் வணிகப் பிரிவில் பத்ம பூஷன் விருதும், அமெரிக்காவில் வசிக்கும் பிரபல கூகுள் பணித்தளத்தில் இயங்கும் சுந்தர் பிச்சை அவர்கள் பத்ம பூஷன் விருதும் பெறுகின்றனர்.
|