தமிழர் தமிழில் கையெழுத்திட வேண்டும், நடிகர் ஆரி அர்ஜுனன்
தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவதில் பெருமைப்படுகிறேன் என நடிகர் ஆரி அர்ஜுனன் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் பலர் தமிழ் மொழியில் கையெழுத்துப் போடவில்லை என்பது அதிர்ச்சியான உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆரி அர்ஜுனன் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் தமிழில் கையெழுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார். சமூகத்திற்கு நன்மை செய்யும் நோக்கத்தோடு இப்பணியில் ஈடுபட்டு இருப்பதாக கூறினார். வரும் ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வரை தமிழ் வளர்ச்சி தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் ஆரி தெரிவித்திருக்கிறார்.
|