கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இசை ரசிகர்களை தனது மென்மையான குரலால் மயங்க வைத்தவர் பி. சுசீலா. 1950ம் ஆண்டு சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் துவங்கினார்.
தொடர்ந்து ஆலயமணியின் ஓசை (பாலும் பழமும்), முத்தான முத்தல்லவோ (நெஞ்சில் ஓர் ஆலயம்), பருவம் எனது (ஆயிரத்தில் ஒருவன்), சிட்டுக் குருவி (புதியபறவை), மன்னவனே அழலாமா... போன்ற இவரின் குரலில் ஒலித்த பாடல்கள்.. இன்றைய இளைஞர்களை கூட மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அளவுக்கு பிரபலம்.
ஐந்துமுறை சிறந்த பாடகி விருது, பத்ம பூஷன் , கலைமாமணி விருது என பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான சுசீலா இப்போது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார், அதிகமான தனிக்குரல் பாடியவர் என கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற அவருடைய சாதனைக்கு கின்னஸ் அங்கீகாரம் அளித்துள்ளது. 1960 முதல் இன்றுவரை பி. சுசீலா 17, 695 பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
|