LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பன்னாட்டு தமிழ்த் தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த எழுமின் முதல்நாள் மாநாடு

எழுமின் மூன்றாவது உலகத் தமிழ் தொழில்முனைவோர் , திறனாளர்கள் மாநாடு நவம்பர் 14,15,16 ஆகிய மூன்று நாட்களுக்கு மிகச்சிறப்பாக நடந்துவருகிறது.

வியாழன் அன்று தொடங்கிய இம்மாநாடு பல்வேறு நாடுகளிலிருந்து பல தொழில் சார்ந்த ஆளுமைகளை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

முதல்நாள் மாநாடு மேள-நாதஸ்வரம் இசைக்க, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் , அரங்க வளாகம் முழுக்க தமிழ் கலாச்சாரத்தை போற்றும் கண்கவர் வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் எழுமின் அமைப்பின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகத் கஸ்பார் அவர்கள் கிறித்தவ மகளிர் கல்லூரி முனைவர்.லிலியன் ஜாஸ்பர் அவர்களை அறிமுகப்படுத்தி வரவேற்புரை நிகழ்த்த அழைத்தார், கல்லூரி முதல்வர் அவர்கள் வரவேற்புரை க்குப் பிறகு, ஹரியானா மாநில முன்னாள் தலைமைச் செயலர் , ஓய்வுபெற்ற திரு.தேவசகாயம் இ ஆ ப அவர்கள் உரையாற்றினார், அடுத்து பேச வந்த ஒரிசா மாநில முன்னாள் தலைமைச் செயலர் ஆர்.பாலகிருஷ்ணன் இ ஆ ப அவர்கள் "சிந்துவெளி முதல் கீழடிவரை, துணைக்கடப் பெருவெளியில் காலம் வளர்த்த வணிகத் தமிழ் " என்ற தலைப்பில் மிகச்சிறப்பானதோர் கருத்தியல் உரையை வழங்கினார்.

அடுத்து பேசிய ஆற்காடு நவாப் அரச பரம்பரையை சார்ந்த முனைவர்.முகமது ஆசிப் அலி அவர்கள் தமிழின் பெருமையையும், மத நம்பிக்கைகளைத்தாண்டி தமிழால் ஒன்றிணைவது குறித்து பேசினார்.

ஒருங்கிணைந்த மருத்துவம் குறித்து உரையாற்றிய சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள், தமிழ் வணிக சமூகம் தமிழரின் மருத்துவ அறிவியலை வளர்த்தெடுக்க முன்வரவேண்டும் என்று குறிப்பிட்டு , அதில் உள்ள வாய்ப்புகள் குறித்து மிகத்தெளிவாக பேசினார். அவரது உரையில் தமிழகம் தழுவிய அளவில் மருத்துவம் எப்படி தமிழர்களுக்கும், இந்த உலக மாந்தர்களுக்கு பயன்படும் என்று சிறப்பாக பேசினார். அவரைத் தொடர்ந்து டாக்டர் சக்திவேல் உரையாற்றினார்.

காலை இணையமர்வுகளுக்கு முன்பு இறுதி உரையாற்றிய அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் எழுமின் குடும்பமாக நாம் ஒருவரை ஒருவர் எப்படி அறிமுகப்படுத்திக்கொண்டு தொழிலில் முன்னேருவது, வேலை செய்யும் தமிழ்ச்சமூகம் , வேலை கொடுக்கும் சமூகமாக மாறுவது எவ்வளவு அவசியம் என்றும் அதற்கு எழுமின் எப்படி திட்டமிடுகிறது என்பது குறித்தும் குறிப்பிட்டு பேசினார்.

காலை இணையமர்வுகளாக , திரு.மோகன் குமாரமங்கலம் அவர்கள் தலைமையில் முதலீடு குறித்த தலைப்பும், மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் தலைமையில் சித்த -ஆயுர்வேதத்தை எப்படி உலகளாவிய அளவில் முதலீடு செய்து கொண்டுசெல்வது என்ற தலைப்பில் ஒரு இணையமர்வும், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் உற்பத்தி என்பதை திரு.கிருஷ்ணன் கோபிநாத் அவர்கள் தலைமையில் ஒரு அமரவும் நடைபெற்றது.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் வாய்ப்புகள் குறித்த இணையமர்வு திரு.ஆல்பிர்ட் பெர்ச்மென் தலைமையிலும், 21வது நூற்றாண்டு கல்வியும், வேலைவாய்ப்பும் என்ற தலைப்பில் முனைவர்.லிலியன் ஜாஸ்பர் அவர்கள் தலைமையிலும் , மாணவர்களின் தகுதியை வளர்க்கும் வாய்ப்புகள் குறித்த அமர்வை முனைவர் ராஜன் பாபு , அதிக மன அழுத்தம் உள்ள மேற்கல்வியிலிருந்து மாணவர்களுக்கு நல்ல சூழலை ஏற்படுத்துவது குறித்து கல்வியாளர்களின் கருத்துரையாடலும் நடந்தது.

மேலும் மதிய உணவுக்குப்பிறகு பல்வேறு தலைப்புகளில் மூன்று வெவ்வேறு அரங்குகளில் பல பயனுள்ள தலைப்புகளில் இணையமர்வுகள் நடந்தன.

மாலையில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தமிழ்நாடு அரசின் பல தொழில் உதவிகள் , திட்டங்கள் குறித்து மிகச்சிறப்பாக உரையாற்றினார். எழுமின் சேவையை பாராட்டிப்பேசிய அமைச்சர், உரிய உதவிகளை தமிழக அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.

மாணவிகளின் சிறப்பான கலை நிகழ்ச்சிகளுடன் , பல்வேறு சுவர்களுடன் கூடிய உணவுடன் முதல்நாள் நிகழ்வு இனிதே நடந்தது..

நிகழ்ச்சியின் நேரலைகளை www.fb.com/ValaiTamil லும் , பதிவு செய்யப்பட்ட முழு காணொளிகளை www.YouTube.Com/ValaiTamilTV -லும் பகிரப்படுகிறது.

அரங்கத்திற்கு வெளியில் பல்வேறு தமிழ் தொழில்கள் தங்கள் கடைகளை அமைத்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அரங்க வளாகத்திலிருந்து வலைத்தமிழ் நிருபர் : அ .சுரேஷ்

by Swathi   on 15 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.