|
|||||
கண்ணாமூச்சி |
|||||
சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் விளையாடும் விளையாட்டு. ஒரு சிறுவனின் கண்ணை மற்றொருவன் பொத்த பிறர் ஒளிந்து கொள்ள ஒளிந்திருப்பவர்களில் ஒருவரைக் கண்டறிவது விளையாட்டு. கண்ணைப்பொத்தியிருப்பவனோடு கீழ்க்கண்டவாறு உரையாடல் நடைபெற்று முடிந்த பிறகு கண்ணைத்திறந்துவிடவேண்டும். உரையாடல்: கண்ணாமூச்சி காதடைப்பு உங்க வீட்டுல என்னா சோறு? நெல்லு சோறு ஈ உழுந்துதா, எறும்பு உழுந்துதா? எறும்பு உழுந்துது எடுத்துட்டு சாப்பிட்டியா, எடுக்காம சாப்பிட்டியா? எடுத்துட்டு சாப்பிட்டேன் காட்டுக்கு போயி ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு கரடி எல்லாம் புடிச்சிகிட்டு வா...
|
|||||
by Swathi on 06 Nov 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|