சதுரங்கத்தில் உலகின் முன்னணி வீரரை வீழ்த்திய தமிழக இளம் வீரர்
உலகிலேயே முன்னணி வீரரான மேக்னஸ் கார்ல்சனை ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் இணையவழி சதுரங்கப் போட்டியில் வீழ்த்தி வெற்றி வாகை சூடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா.17 வயதுடைய பிரக்ஞானந்தா சென்னைப் பகுதியைச் சேர்ந்தவர்.இவருடைய சாதனைகள் சதுரங்கத்தில் தொடர்ந்து நீண்டு கொண்டு வருகின்றன. 2013-இல் எட்டு வயது பிரிவில் மாஸ்டரானவர்.
2016ஆம் ஆண்டிற்கான உலகின் இளைய சதுரங்க மாஸ்டராக தேர்வானவர். தற்போது உலகில் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் என்ற இணையம் வழியான அதிவிரைவு நகர்த்துதல்கள் கொண்ட சதுரங்கப் போட்டியில் உலகின் முதல் வீரரான கார்ல்சனை வென்றுள்ளார். 39 நகர்வுகளில் வெற்றியை கைப்பற்றியுள்ளார் பிரக்ஞானந்தா. இவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
|