தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனப்படும் கன மழை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி ஓமன் நோக்கி நகர்ந்து விடும். புயல் சின்னம் ஓமன் வளைகுடாவுக்கு நகர்வதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அக்டோபர் 8-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யும். குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய, தென்கிழக்கு அரபிக் கடல்பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|