LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கோடை வெயிலின் அளவு 113 டிகிரியை தொடும் : வானிலை மையம் அதிர்ச்சி தகவல் !!

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் அளவு 113 டிகிரி வரை இருக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழக மக்களை பரவலாக வெயில் தற்போது வாட்டி எடுத்து வருக்கிறது. அக்னி நட்சத்திரம் வருகின்ற மே 4 ஆம் தேதிதான் தொடங்குகிறது. ஆனால், அதற்குள்ளாகவே திருச்சி, வேலூர், மதுரை, சேலம், தருமபுரி, பாளையங்கோட்டை போன்ற ஊர்களில் வெயலின் அளவு 100 டிகிரியை தாண்டிவிட்டது.


இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, 


வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த ஆண்டு வெயிலின் அளவு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. 


அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் 100 டிகிரியை வெயில் தாண்டி விட்டது. காற்றில் ஈரப்பதம் குறைந்த காரணத்தால் அனல்காற்று பயங்கரமாக வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது.


சென்னையில் 2003 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி உச்சக்கட்ட வெயில் அளவாக 113 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் 113 டிகிரி வரை வெப்பம் வாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இடியுடன் கூடிய கோடை மழை சில பகுதிகளில் மட்டுமே எதிர்பார்க்க முடியும். கடற்கரையோர பகுதிகளில் மாலை 6 மணிக்கு பிறகுதான் ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசும்.


பகலில் அதிக வெப்பம் நிலவுவதால் மாலை, இரவு நேரங்களிலும் புழுக்கம் அதிகமாகவே இருக்கும். மே மாதம் முடிய வெப்பத்தின் அளவு குறைய வாய்ப்பு இல்லை. 


இந்தியாவில் அதிக பட்சமாக குஜராத்தில் 112 டிகிரி வரை இப்போது வெப்பம் பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

by Swathi   on 30 Apr 2014  0 Comments
Tags: Tamilnadu Temperature   Kodai Veyil   113 Degree Celsius   தமிழக வெப்பநிலை   தமிழ்நாடு வெப்பநிலை   கோடை வெயில்   கோடை  
 தொடர்புடையவை-Related Articles
கோடை வெயிலின் அளவு 113 டிகிரியை தொடும் : வானிலை மையம் அதிர்ச்சி தகவல் !! கோடை வெயிலின் அளவு 113 டிகிரியை தொடும் : வானிலை மையம் அதிர்ச்சி தகவல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.