LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குடிமைப்பணித் தேர்வில் தமிழக இளைஞர்கள் சாதனை!-நம்பிக்கையூட்டும் நான் முதல்வன் திட்டம்!

2016-க்கு பிறகு மத்தியக் குடிமைப்பணித் தேர்வில் தமிழக இளைஞர்களின்  எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. 2021-ல், மட்டும் 27 தமிழர்கள் மட்டுமே மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார்கள்.

இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு தமிழக அரசு, 2022-ம் ஆண்டு  நான் முதல்வன் திட்டத்தை உருவாக்கியது. சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின்கீழ் செயல்படும் இந்தத் திட்டத்தின் குடிமைப்பணி பிரிவுக்காக முதல்வர் 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இதன்மூலம் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வின்மூலம் 10 மாதங்களுக்குத் தலா 7,500 ரூபாயும், பிரதானத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தலா 25,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, (2023-2024) 47 தமிழக மாணவர்கள் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றார்கள். முந்தைய ஆண்டுகளைவிடக் கிட்டத்தட்ட இது 30 சதவிகிதம் அதிகம். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 57 மாணவர்களில் 50 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்கள். அவர்களில் 18 பேர் ‘நான் முதல்வன்’ உறைவிடப் பயிற்சித் திட்டத்தால் பயன் பெற்றவர்கள்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன், தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 23-ஆவது இடத்தையும் பிடித்திருக்கின்றார். மோனிகா, அகில இந்திய அளவில் 39-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். குடிமைப்பணி முதல்நிலை மற்றும் பிரதானத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்காக புதுடெல்லி செல்ல வேண்டும். அப்படிச் செல்கின்ற தமிழக மாணவர்களின் பயிற்சி மற்றும் பயணச் செலவிற்காகத் தலா 50,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டம் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது! 

2016-க்கு பிறகு மத்தியக் குடிமைப்பணித் தேர்வில் தமிழக இளைஞர்களின்  எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. 2021-ல்மட்டும் 27 தமிழர்கள் மட்டுமே மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார்கள்.

இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு தமிழக அரசு, 2013-ம் ஆண்டு  நான் முதல்வன் திட்டத்தை உருவாக்கியது. சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின்கீழ் செயல்படும் இந்தத் திட்டத்தின் குடிமைப்பணி பிரிவுக்காக முதல்வர் 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து கொடுத்தார்இதன்மூலம் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வின்மூலம் 10 மாதங்களுக்குத் தலா 7,500 ரூபாயும்பிரதானத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தலா 25,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, (2023-2024) 47 தமிழக மாணவர்கள் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றார்கள்முந்தைய ஆண்டுகளைவிடக் கிட்டத்தட்ட இது 30 சதவிகிதம் அதிகம்அதன் தொடர்ச்சியாகஇந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 57 மாணவர்களில் 50 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்கள்அவர்களில் 18 பேர் ‘நான் முதல்வன்’ உறைவிடப் பயிற்சித் திட்டத்தால் பயன் பெற்றவர்கள்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன், தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும்அகில இந்திய அளவில் 23-ஆவது இடத்தையும் பிடித்திருக்கின்றார்மோனிகா, அகில இந்திய அளவில் 39-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். குடிமைப்பணி முதல்நிலை மற்றும் பிரதானத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்காக புதுடெல்லி செல்ல வேண்டும்அப்படிச் செல்கின்ற தமிழக மாணவர்களின் பயிற்சி மற்றும் பயணச் செலவிற்காகத் தலா 50,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


நான் முதல்வன் திட்டம் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது! 

by hemavathi   on 30 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.