மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரம் முதன்முறை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த சட்டமன்ற உறுப்பினர்.
மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் முறை மாற்றப்பட வேண்டும் என்பது பலரால் நீண்ட நாள் முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஆகும்.
தற்போது தமிழகத்தில் முதன்முறையாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது தொகுதியில் மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளார்.
இதுகுறித்து தனது கீச்சக(twitter)பக்கத்தில்,தங்கள் தேர்தல் அறிக்கையில் மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றுவதை ஒழிப்போம் என்று கூறி இருப்பதை குறிப்பிட்டு, அதன்படி இயந்திரம் கொண்டு மனிதக் கழிவுகளை அகற்றும் முறை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதுபோன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இம்முறை அறிமுகமாகமாவதோடு மட்டுமல்லாமல், நடைமுறைக்கு முழுவதும் வரவேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாகும்.
|