LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வெளிநாடுகளில் வேலை செய்து தாயகத்துக்குப் பணம் அனுப்பும் இந்தியர்களில் தமிழர்களுக்கு மூன்றாமிடம்

வெளிநாடுகளில் வேலை பார்த்து தாயகத்துக்குப் பணம் அனுப்பும் இந்தியர்களில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், கேரளாவைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.


வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள், தாய்நாட்டுக்குப் பணம் அனுப்புவது பற்றிய புள்ளி விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த 2010- 11ம் நிதி ஆண்டில், தாய் நாட்டுக்கு இந்தியர்கள் அனுப்பிய பணத்தின் மதிப்பு 4.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.


இந்த நிதியானது, 2023-24ம் நிதி ஆண்டில் 9.88 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த 2020-21ம் நிதி ஆண்டில் இந்தியாவுக்கு வந்த மொத்த வெளிநாட்டு நிதியில், கேரள மாநிலத்தவர்களின் பங்கு 10.2 சதவீதமாக இருந்தது. கோவிட் தொற்று காரணமாக, வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் நிறையப் பேர் தாய்நாடு திரும்பி வந்த நிலையில் பணவரவு குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் கேரள மாநிலத்தின் வெளிநாட்டுப் பல வரவு சதவீதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.


2023-24ம் நிதி ஆண்டில், தாய் நாட்டுக்குப் பணம் அனுப்பிய கேரள மாநிலத்தவர்களின் பங்கு 19.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. தாய்நாட்டுக்குப் பணம் அனுப்பும் இந்தியர்களில் முதலிடத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தவர் உள்ளனர். மொத்த வெளிநாட்டுப் பணவரவில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பங்கு 20.5 சதவீதம் ஆகும்.


கேரளா 19.7 சதவீதம் பணவரவுடன் இரண்டாம் இடம், தமிழகம் 10.4 சதவீதம் பண வரவுடன் மூன்றாம் இடம், தெலுங்கானா 8.1 சதவீதத்துடன் நான்காம் இடம், கர்நாடகா 7.7 சதவீதம் பண வரவுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளன.
அதேபோல, எந்தெந்த நாடுகளிலிருந்து இப்படி வேலை பார்க்கும் இந்தியர்கள் பணம்


அனுப்புகின்றனர், மொத்தப் பணவரவில் அது எத்தனை சதவீதம் என்ற விபரத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பணவரவில், 27.7 சதவீதம் அமெரிக்காவிலிருந்தும், 19.2 சதவீதம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்தும், 10.8 சதவீதம் பிரிட்டனிலிருந்தும் பண வரவு இருக்கிறது.


by hemavathi   on 29 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
10 ஆண்டுகளில்  17 கோடி பேரை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திய இந்தியா 10 ஆண்டுகளில் 17 கோடி பேரை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திய இந்தியா
பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்  என்னென்ன? பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள் என்னென்ன?
பயணிகள் விமானப் போக்குவரத்தில் சீனாவை மிஞ்சும் இந்தியா பயணிகள் விமானப் போக்குவரத்தில் சீனாவை மிஞ்சும் இந்தியா
இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் எலான் மஸ்க் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்
அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா
இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம்  இந்தியா வருகிறார் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்
டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.