LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தமிழர்கள் உலகமெங்கும் சாதிக்கிறார்கள் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு

 

மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. ஆனால் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் மும்மொழிக் கொள்கை கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் மட்டுமே தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்க முடியும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.


இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தித் திணிப்பை ஏற்க முடியாது எனவும் கருத்து தெரிவித்து வந்தன. பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றும் ஆந்திர மாநில முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


மேலும் தமிழக அரசையும் பாராட்டியுள்ளார்  சந்திரபாபு நாயுடு. தமிழ்நாட்டிலிருந்து பலரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்று மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் பலர் தமிழர்கள்தான். கூகுள் நிறுவன தலைமை அதிகாரி கூட ஒரு தமிழர்தான்.


ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு பயிற்சி பெற டெல்லி வருபவர்களில் அந்திமானோர் தமிழர்கள்தான். பொதுவாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்றால் அது தமிழ்நாடுதான் என்ற நிலை உள்ளது. தமிழர்கள் உலகம் முழுவதும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்" எனப் புகழ்ந்துள்ளார் சந்திரபாபு நாயுடு. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை உள்ளபோதே தமிழர்கள் சாதித்துக் காட்டுகிறார்கள் எனவும் பாராட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு.


"ஒருவருடன் தொடர்பு கொள்ள மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழியில் தான் கிடைக்கும். தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகிறார்கள்" என்று கூறிய சந்திரபாபு நாயுடு, மொழி என்பது வேறு.. எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம் என்றும் தான் 10 மொழிகளைப் படிக்க ஊக்குவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

by hemavathi   on 07 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சாதி வாரிக்கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக  தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உயர்வு சாதி வாரிக்கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உயர்வு
போலி கடவுச்சீட்டு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10 லட்சம் அபராதம் - வருகிறது புதிய குடியுரிமைச் சட்டம் போலி கடவுச்சீட்டு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10 லட்சம் அபராதம் - வருகிறது புதிய குடியுரிமைச் சட்டம்
ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது
இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது  EPFO 3.0 இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது EPFO 3.0
இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது  EPFO 3.0 இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது EPFO 3.0
கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர்  கடிதம் கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் கடிதம்
அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்  - சந்திரபாபு நாயுடு அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.