|
|||||
கோயில் நிலத்தில் குடியிருப்பரருக்கு புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம் |
|||||
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டின்கீழ் தமிழகம் முழுவதும் 44,121 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 33,665 மனைகளும்,22,600 கட்டிடங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை 1 லட்சத்து 23,729 குத்தகைதாரர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவை அனைத்துக்கும் 3 ஆண்டுக்கு ஒருமுறை வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். கடைசியாக, கடந்த 2016-ம் ஆண்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிர்ணயம் தொடர்பான நோட்டீஸ் ஒரு ஆண்டுக்கு பிறகே வாடகைதாரர்களுக்கு சென்று சேர்ந்துள்ளது . இதனால், வாடகை தாரர்கள் வாடகையை செலுத்துவதிலும் தாமதம் செய்துள்ளனர் . இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வாடகை பாக்கியை வசூல் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாடகை பாக்கியை நீண்டகாலமாக செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்வதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் .
நியாய வாடகை நிர்ணயம் செய்வது குறித்த முன்மொழிவுடன் நியாய வாடகை குறித்து வாடகைதாரர்களுக்கு அனுப்பிய அறிவிப்பு கடிதம் மற்றும் நிராகரிக்கப்பட்டதற்கான கடிதம் இணைக்கப்பட வேண்டும். தயார் செய்யப்பட்ட நியாய வாடகை கணக்கீட்டை உதவி கோட்ட பொறியாளருக்கு சமர்பித்து அதில் அவரின் மேலொப்பத்துடனும் மாவட்ட பதிவாளர் மேலொப்பத்துடனும் இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும்படி செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 17 Feb 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|