|
|||||
கோயில்களில் திருக்குறள், தேவாரம்,திருவாசகம் வகுப்புகள் நடைபெறும், சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு |
|||||
கோயில்களில் திருக்குறள்,தேவாரம்,திருவாசகம் வகுப்புகள் நடைபெறும் சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் (31, ஆகஸ்ட் 2021) பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பல முக்கிய அறிவிப்புகளை கூறினார். *அயல்நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கென்று தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும். *தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். *தமிழ் மொழியின் இலக்கியத் திறனை பள்ளி மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ள திறனறி தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். *கோயில்களில் தேவாரம்,திருவாசகம், திவ்விய பிரபந்தம் ஆகியவை மற்றும் திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும். *தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்படும் (புலவர் செ.இராசு, சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர் சங்கர வள்ளிநாயகம் ஆகியோருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்படவுள்ளன. *சங்க இலக்கிய வாழ்வியலை வெளிப்படுத்தும் ஓவியங்கள் coffee மேசை புத்தகமாக வெளியாகும். *குடியிருப்புகள்,வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படும் *தமிழறிஞர்கள் எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். |
|||||
by R.Gnanajothi on 01 Sep 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|