LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

10 கோடி ஏழைகள் பயன்பெறும் ' ஆயுஷ்மான் பாரத்' இலவச மருத்துவ சிகிச்சை! பிரதமர் தொடங்கி வைத்தார்!

நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பத்தை  சேர்ந்த 50 கோடி பேர் சிகிச்சை பெறும் வகையில் 'ஆயுஷ்மான் பாரத்' எனும்  திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

 ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா அபியான்’  என்ற பெயரிலும் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களும், நகர்புறத்தை சேர்ந்த 2.33 கோடி குடும்பங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

சமூக பொருளாதார  கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த திட்டத்தில் 10.36  கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏழு வகையான பிரிவு அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். 

நகர்ப்புறங்களில் 11 வகையாக இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 வகையில் துப்புரவு தொழிலாளர்கள், பிச்சை எடுப்போர், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சித்தாள்கள், கூலித்தொழிலாளர்கள், தினக்கூலிகள்,  காவலாளிகள், தலைச் சுமை தொழிலாளர்கள் போன்ற குறைந்த வருவாய்ப் பிரிவினர் இணைக்கப்பட்டு உள்ளனர். ஒரு குடும்பத்தில் எத்தனை பேர்  இருந்தாலும் அத்தனை பேரும் அதில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இத்திட்டத்தின் மூலம் 1,354 வகையான மருத்துவ சிகிச்சை பெறலாம். இதில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துவிட்டன. 
இந்த திட்டத்தை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

 

by Mani Bharathi   on 24 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.