|
|||||
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு 1-ந் தேதி முதல் அமல்- மத்திய அரசு அறிவிப்பு! |
|||||
மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு முறை வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் கடந்த 9ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு முறை வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். மத்திய அரசு வேலைவாய்ப்புகள் அல்லது அதற்கு பிறகு அறிவிக்கப்படும் வேலை வாய்ப்புகளில் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது. இதன்படி ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடு முறையின் கீழ் இடம்பெறாத ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள எஸ்சி, எஸ்டி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இடஒதுக்கீடு பெற தகுதி பெற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்கள் வருமானம் மற்றும் சொத்து தொடர்பான தேவையான ஆவணங்களை தாசில்தார் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியிடம் சமர்ப்பித்து அவரிடம் இருந்து சான்றிதழ் பெற்றால் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. |
|||||
by Mani Bharathi on 25 Jan 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|