LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருமந்திரம்

பிரார்த்தனைப் பத்து

 

கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் 
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள் 
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான் 
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே. 485 
அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே 
முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் 
கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க 
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. 486 
அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த 
இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே 
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார் 
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 487 
வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால் 
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே 
தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல் 
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே. 488 
மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே 
காவி சேருங் கயற்கண்ணான் பங்கா உன்றன் கருணையினால் 
பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந் 
தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே. 489 
அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும் 
புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே 
பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாய் பிரிவில்லா 
மறவா நினையா அளவில்லா மாளா இன்ப மாகடலே. 490 
கடலே அனைய ஆனந்தக் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண 
இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன் 
உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன் 
சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே. 491 
துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்து 
திணியார் மூங்கிற் சிந்தையேன் நின்று தேய்நின்றேன் 
அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத் 
தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே. 492 
தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம் 
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ 
சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா 
பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே. 493 
மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா 
நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே 
ஊனே புகுந்த உனையுணர்ந்த உருகிப் பெருகும் உள்ளத்தைக் 
கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடிவதே. 494 
கூடிக்கூடி உன்னடியார் குளிப்பார் சிரிப்பார் களிப்பாரா 
வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ 
ஊடி ஊடி உநடியாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு 
ஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே. 495 

 

கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் 

புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள் 

உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான் 

அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே. 485 

 

அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே 

முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் 

கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க 

உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. 486 

 

அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த 

இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே 

மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார் 

வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 487 

 

வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால் 

ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே 

தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல் 

வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே. 488 

 

மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே 

காவி சேருங் கயற்கண்ணான் பங்கா உன்றன் கருணையினால் 

பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந் 

தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே. 489 

 

அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும் 

புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே 

பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாய் பிரிவில்லா 

மறவா நினையா அளவில்லா மாளா இன்ப மாகடலே. 490 

 

கடலே அனைய ஆனந்தக் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண 

இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன் 

உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன் 

சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே. 491 

 

துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்து 

திணியார் மூங்கிற் சிந்தையேன் நின்று தேய்நின்றேன் 

அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத் 

தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே. 492 

 

தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம் 

ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ 

சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா 

பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே. 493 

 

மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா 

நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே 

ஊனே புகுந்த உனையுணர்ந்த உருகிப் பெருகும் உள்ளத்தைக் 

கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடிவதே. 494 

 

கூடிக்கூடி உன்னடியார் குளிப்பார் சிரிப்பார் களிப்பாரா 

வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ 

ஊடி ஊடி உநடியாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு 

ஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே. 495 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.