நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த தெண்டுல்கர் 3 இன்னிங்சிலும் தொடர்ந்து கிளீன்போல்டு முறையில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதைத்தொடர்ந்து தெண்டுல்கர் ஓய்வு பெறுவதற்கு இது சரியான தருணம் என்று முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சித்தனர். ஆனால் தெண்டுல்கர் தற்போது ஒய்வு பெரும் எண்ணத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னால் வீரர்கள் சிலர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், முன்னாள் கேப்டன் கபில்தேவும், ஹர்பஜனும் சச்சினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரது ஓய்வு குறித்து விவாதிப்பது தவறான விஷயமாகும் என்றும், அவர் விருப்பபட்டு மகிழ்ச்சியுடன் தான் ஒய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
|