LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

பாடப்புத்தக விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு!

பிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டி (தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) பாடப்புத்தகங்களை பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்து உள்ளது. 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் சுமார் 18 ஆயிரம் பள்ளிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த பள்ளிகளில் தனியார் பதிப்பகங்கள் அச்சிட்டு விற்கும் புத்தகங்களே பாடப்புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  அந்த புத்தகங்களுக்காக சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து,  சென்னையைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், என்சிஇஆர்டி புத்தகங்களை சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடமாக நடத்த சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கண்ட பள்ளிகள் பின்பற்றவில்லை என்ற புகார் இப்போது எழுந்துள்ளது. 

அதனால், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த பள்ளிகள் முன்வர வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகத்தின் தரப்பில் எடுத்த நடவடிக்கை குறித்து  தெரியவில்லை. மேலும், நீதிமன்றத்தில் இருந்து சிபிஎஸ்இக்கு இதுவரை எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று சிபிஎஸ்இ மறுத்து உள்ளது. இதனால், கல்வியாளர்கள் பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர். 

இதற்கிடையே மொத்தம் உள்ள 18 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன என்று தெரிவித்துள்ளன. 

உண்மையில் தனியார் பதிப்பகத்தார் அச்சிட்டு விற்கும் புத்தகங்களையே அந்த பள்ளிகள் வாங்குவதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. 


மத்திய அரசின் உத்தரவின்படி சிபிஎஸ்இ பள்ளிகளுக்

காக என்சிஇஆர்டி அதிக அளவில் பாடப்புத்தகங்களை அச்சிட்டு குவித்து வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றை எத்தனை பள்ளிகள் வாங்கின என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இதனால் எந்த புத்தகத்தைப் பின்பற்றுவது என்ற குழப்பம் நீடிக்கிறது.

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.