|
||||||||
தாலப்பருவம் |
||||||||
411 செய்ய கனகம் வெள்வயிரஞ் சிறந்த கமல ராகமொளி
திகழு நீலம் வயிடூயஞ் செறிய வொன்றன் மேலொன்றா
வைய முறைவைத் துறவடுக்கி யவிரைம் பூதத் தடுக்கென்ன
வமைத்த திருமா ளிகைமேலா லாடுந் துவசத் தருநுனையி
லெய்ய விவர்நீ ருண்டுபசந் தெழுந்த முகில்கோப் புண்டுசைவ
ரிடங்கா பாலர் கொடிமிடைதற் கேதி யாதென் றிருங்கடல்சூழ்
வைய மதிக்கப் பொலிகுடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ.
(1)
412 விண்ட மலர்க்கா வகத்துதய வீபத் தினைக்கண் டிளமந்தி
விழையுஞ் செந்தேத் தடையென்ன விரைந்து கடுவ னவற்பற்றக்
கண்ட புலவர் குரங்கியெனக் கரைபே ரலவற் கிரட்டலுறக்
கரைவா மெனவக் கடுவனுமாக் கவியென் பெயர்க்குத் தகவுணர்ந்து
கொண்ட பயத்தின் விடுத்திலச்சை கூர்ந்து தனது குலம்புரந்த
குனிவிற் புயத்தோன் செயனினைந்தக் கோலப்பிணவை யெழுகாதன்
மண்ட வணைக்குஞ் செழுங்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ.
(2)
413 உன்னும் வடுக னொருகோளுண் டுமிழ்ந்தா னிதுபல் கோள்களுமுண்
டுமிழா நிற்கு மெனவற்றை யுட்கொண் டுடனே புறந்தோற்றி
மின்னும் பொழிலி னடுப்பொலியும் வியனீர்த் தடத்துக் கமலமுதல்
வீவரர் மதுவுங் குலைத்தருவின் விடப மதுவும் பெருகவெகி
னென்னும் பறவை படிந்துமிசை யெழுங்கால் வழிதேன் விழைந்தொழுங்கி
னெய்து மளிவெண் படமுமதற் கிட்ட கரிய கயிறுமென
மன்னு மழகார் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ.
(3)
414 ஆய்ந்த பொறிவண் டடைகிடக்கு மங்கட் பொழிலின் மடமாதர்க்
கணியா டவரோ ராவியகத் தகத்தா மரைத்தேம் புனலுங்கோட்
டேய்ந்த தருப்பூ மதுப்புனலு மேனைத் தருப்பூப் பொழிதரவீழ்ந்
தியைந்து பாய்தேம் புனலுங்கண் டிந்நீர் முந்நீ ரெனக்கூறத்
தோய்ந்த முகிலைக் காட்டுகெனத் தூவெள் ளனம்வீழ்ந் துருப்பாசி
தொடர வெழல்கண் டிதுவென்னத் தோலா மகிழ்விற் றலைசிறந்து
வாய்ந்த நலங்கூர் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ.
(4)
415 பழுத்து விழுந்த நறியசுவைப் பாகற் கனிமே லொருதென்னம்
பழமூக் கூழ்த்து விழுந்தமரப் பசுந்தேன் பொழிந்து மலரிறைத்துக்
கொழுத்து வரிவண் டிசைபாடக் கொண்ட கனியின் பெரும்பொறையாற்
குலவு மெதிரே பலசாகை குரங்கல் கும்பத் துதிதொருமா
வழுத்து வடுப்பூண் முடிமுக்க ணமலற் காட்டி யருச்சித்தாங்
கறைந்து நிவேதித் தெதிர்வணங்கு மன்பர் நிகர்த்த் லறிந்தமரர்
வழுத்து மலியுந் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
வளன்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ.
(5)
வேறு
416 குமிழ்மல ருங்குளிர் முல்லையுமிந்திர கோபமும் வாமானுங்
கூங்குயி லுந்நின் கூறம ருலகு குலாம்பொரு ளெனவளையா
லிமிழ்கலி மாமறை யைம்புல னுளதென லித்தொகை யாலுணர்வா
னியல்பி னமைந்துப லுலகு மவாவ வியைந்த தெனத்தோற்ற
வமிழ்து பொருஞ்சுவை யஞ்சுனை நீர்நிலை யான்ற சுறத்தலைநன்
காய கழைச்சிலை தாங்கி விளங்கிடு மம்போ ருகமுடையாய்
தமிழ்தெரி யுங்குட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ
சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ
(6)
417 விண்டலர் செவ்விய தாமரை கொல்லோ வெண்டா மரைகொல்லோ
விரவுதல் பெற்றொளிர் தாமரை கொல்லோ வேறெது வாமென்று
தொண்ட ருளங்கொடு பன்முறை யாய்ந்துந் துணிவு பெறாமையினாற்
றொகுபொது விற்பைந் தாமரை யென்றே சொற்றனர் களிதூங்க
முண்டக வதனக் கலைமக ளுங்கடன் முற்படு திருமகளு
முரணுத லின்றி வசித்திடு மாறொளிர் முகதா மரையுடையாய்
தண்டமிழ் தெரிகுட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ
சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ (7)
418 அருமறை முழுமையு மாயதன் முதனடு வந்த முரைப்பதுமா
யத்தகு மறையின் வரம்பு கடந்த வதீதமு மாயுளநெக்
குருகுதல் கொண்டு விடாது நினைப்பவ ருள்ளவிர் தீபமுமா
யுற்றடி போற்றி வணங்குந ரெய்ப்புத வத்தகு நிதியமுமாய்த்
திருகுத லின்றி யுரைப்பவர் நாவிற் றீன்சுவை யமுதமுமாய்த்
திகழ்தரு பொற்கொடி யேயள வில்லாத் தெய்வத் திருமணமே
தருதமிழ் தெரிகுட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ
சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ (8)
வேறு
419 சிந்தனை யொன்ற நினைந்துக வர்ந்திடு தேனே வானாடர்
தெண்டிரை யின்க ணடைந்தனர் கொண்டது தேறா வாறாக
வந்தரு ளுன்செ யலின்றலை நின்றகண் மானே யாநேய
மண்டலி ருந்த வரண்டர்ப ணிந்தெழு வாழ்வே சூழ்பேறே
கந்தம ளைந்த கருங்குழன் முன்பல காணா நாணாவா
கண்டலன் மங்கை முனங்கையர் கும்பிடு காலாய் மேலாய
சந்தம லிந்த குடந்தையி ளங்கிளி தாலோ தாலேலோ
சங்களை யுங்கை மடங்களை மங்களை தாலோ தாலேலோ. (9)
வேறு
420 மணந்த வார்குழல் வெண்பிறை சூடுமை தாலோ தாலேலோ
வடிந்த காதிரு செங்கதிர் சேர்பரை தாலோ தாலேலோ
தணந்த காமியர் தந்துணை யாமளி தாலோ தாலேலோ
தவஞ்செ யாவெனை யுந்தனி யாள்கொடி தாலோ தாலேலோ
நிணந்த யோகியர் சிந்தைய றாவொளி தாலோ தாலேலோ
நிவந்த வாருயி ருய்ந்திட மேவனை தாலோ தாலேலோ
குணந்த வாதவர் பங்களை மாநிதி தாலோ தாலேலோ
குடந்தை வாழ்வெனு மங்கள நாயகி தாலோ தாலேலோ. (10)
411 செய்ய கனகம் வெள்வயிரஞ் சிறந்த கமல ராகமொளி திகழு நீலம் வயிடூயஞ் செறிய வொன்றன் மேலொன்றா வைய முறைவைத் துறவடுக்கி யவிரைம் பூதத் தடுக்கென்ன வமைத்த திருமா ளிகைமேலா லாடுந் துவசத் தருநுனையி லெய்ய விவர்நீ ருண்டுபசந் தெழுந்த முகில்கோப் புண்டுசைவ ரிடங்கா பாலர் கொடிமிடைதற் கேதி யாதென் றிருங்கடல்சூழ் வைய மதிக்கப் பொலிகுடந்தை வாழ்வே தாலோ தாலேலோ வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. (1)
412 விண்ட மலர்க்கா வகத்துதய வீபத் தினைக்கண் டிளமந்தி விழையுஞ் செந்தேத் தடையென்ன விரைந்து கடுவ னவற்பற்றக் கண்ட புலவர் குரங்கியெனக் கரைபே ரலவற் கிரட்டலுறக் கரைவா மெனவக் கடுவனுமாக் கவியென் பெயர்க்குத் தகவுணர்ந்து கொண்ட பயத்தின் விடுத்திலச்சை கூர்ந்து தனது குலம்புரந்த குனிவிற் புயத்தோன் செயனினைந்தக் கோலப்பிணவை யெழுகாதன் மண்ட வணைக்குஞ் செழுங்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. (2)
413 உன்னும் வடுக னொருகோளுண் டுமிழ்ந்தா னிதுபல் கோள்களுமுண் டுமிழா நிற்கு மெனவற்றை யுட்கொண் டுடனே புறந்தோற்றி மின்னும் பொழிலி னடுப்பொலியும் வியனீர்த் தடத்துக் கமலமுதல் வீவரர் மதுவுங் குலைத்தருவின் விடப மதுவும் பெருகவெகி னென்னும் பறவை படிந்துமிசை யெழுங்கால் வழிதேன் விழைந்தொழுங்கி னெய்து மளிவெண் படமுமதற் கிட்ட கரிய கயிறுமென மன்னு மழகார் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. (3)
414 ஆய்ந்த பொறிவண் டடைகிடக்கு மங்கட் பொழிலின் மடமாதர்க் கணியா டவரோ ராவியகத் தகத்தா மரைத்தேம் புனலுங்கோட் டேய்ந்த தருப்பூ மதுப்புனலு மேனைத் தருப்பூப் பொழிதரவீழ்ந் தியைந்து பாய்தேம் புனலுங்கண் டிந்நீர் முந்நீ ரெனக்கூறத் தோய்ந்த முகிலைக் காட்டுகெனத் தூவெள் ளனம்வீழ்ந் துருப்பாசி தொடர வெழல்கண் டிதுவென்னத் தோலா மகிழ்விற் றலைசிறந்து வாய்ந்த நலங்கூர் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. (4)
415 பழுத்து விழுந்த நறியசுவைப் பாகற் கனிமே லொருதென்னம் பழமூக் கூழ்த்து விழுந்தமரப் பசுந்தேன் பொழிந்து மலரிறைத்துக் கொழுத்து வரிவண் டிசைபாடக் கொண்ட கனியின் பெரும்பொறையாற் குலவு மெதிரே பலசாகை குரங்கல் கும்பத் துதிதொருமா வழுத்து வடுப்பூண் முடிமுக்க ணமலற் காட்டி யருச்சித்தாங் கறைந்து நிவேதித் தெதிர்வணங்கு மன்பர் நிகர்த்த் லறிந்தமரர் வழுத்து மலியுந் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ வளன்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. (5)
வேறு 416 குமிழ்மல ருங்குளிர் முல்லையுமிந்திர கோபமும் வாமானுங் கூங்குயி லுந்நின் கூறம ருலகு குலாம்பொரு ளெனவளையா லிமிழ்கலி மாமறை யைம்புல னுளதென லித்தொகை யாலுணர்வா னியல்பி னமைந்துப லுலகு மவாவ வியைந்த தெனத்தோற்ற வமிழ்து பொருஞ்சுவை யஞ்சுனை நீர்நிலை யான்ற சுறத்தலைநன் காய கழைச்சிலை தாங்கி விளங்கிடு மம்போ ருகமுடையாய் தமிழ்தெரி யுங்குட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ (6)
417 விண்டலர் செவ்விய தாமரை கொல்லோ வெண்டா மரைகொல்லோ விரவுதல் பெற்றொளிர் தாமரை கொல்லோ வேறெது வாமென்று தொண்ட ருளங்கொடு பன்முறை யாய்ந்துந் துணிவு பெறாமையினாற் றொகுபொது விற்பைந் தாமரை யென்றே சொற்றனர் களிதூங்க முண்டக வதனக் கலைமக ளுங்கடன் முற்படு திருமகளு முரணுத லின்றி வசித்திடு மாறொளிர் முகதா மரையுடையாய் தண்டமிழ் தெரிகுட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ (7)
418 அருமறை முழுமையு மாயதன் முதனடு வந்த முரைப்பதுமா யத்தகு மறையின் வரம்பு கடந்த வதீதமு மாயுளநெக் குருகுதல் கொண்டு விடாது நினைப்பவ ருள்ளவிர் தீபமுமா யுற்றடி போற்றி வணங்குந ரெய்ப்புத வத்தகு நிதியமுமாய்த் திருகுத லின்றி யுரைப்பவர் நாவிற் றீன்சுவை யமுதமுமாய்த் திகழ்தரு பொற்கொடி யேயள வில்லாத் தெய்வத் திருமணமே தருதமிழ் தெரிகுட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ (8)
வேறு 419 சிந்தனை யொன்ற நினைந்துக வர்ந்திடு தேனே வானாடர் தெண்டிரை யின்க ணடைந்தனர் கொண்டது தேறா வாறாக வந்தரு ளுன்செ யலின்றலை நின்றகண் மானே யாநேய மண்டலி ருந்த வரண்டர்ப ணிந்தெழு வாழ்வே சூழ்பேறே கந்தம ளைந்த கருங்குழன் முன்பல காணா நாணாவா கண்டலன் மங்கை முனங்கையர் கும்பிடு காலாய் மேலாய சந்தம லிந்த குடந்தையி ளங்கிளி தாலோ தாலேலோ சங்களை யுங்கை மடங்களை மங்களை தாலோ தாலேலோ. (9)
வேறு 420 மணந்த வார்குழல் வெண்பிறை சூடுமை தாலோ தாலேலோ வடிந்த காதிரு செங்கதிர் சேர்பரை தாலோ தாலேலோ தணந்த காமியர் தந்துணை யாமளி தாலோ தாலேலோ தவஞ்செ யாவெனை யுந்தனி யாள்கொடி தாலோ தாலேலோ நிணந்த யோகியர் சிந்தைய றாவொளி தாலோ தாலேலோ நிவந்த வாருயி ருய்ந்திட மேவனை தாலோ தாலேலோ குணந்த வாதவர் பங்களை மாநிதி தாலோ தாலேலோ குடந்தை வாழ்வெனு மங்கள நாயகி தாலோ தாலேலோ. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|