LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

தாலப்பருவம்

 

411 செய்ய கனகம் வெள்வயிரஞ் சிறந்த கமல ராகமொளி
      திகழு நீலம் வயிடூயஞ் செறிய வொன்றன் மேலொன்றா
வைய முறைவைத் துறவடுக்கி யவிரைம் பூதத் தடுக்கென்ன
      வமைத்த திருமா ளிகைமேலா லாடுந் துவசத் தருநுனையி
லெய்ய விவர்நீ ருண்டுபசந் தெழுந்த முகில்கோப் புண்டுசைவ
      ரிடங்கா பாலர் கொடிமிடைதற் கேதி யாதென் றிருங்கடல்சூழ்
வைய மதிக்கப் பொலிகுடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
      வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. 
(1)
412 விண்ட மலர்க்கா வகத்துதய வீபத் தினைக்கண் டிளமந்தி
      விழையுஞ் செந்தேத் தடையென்ன விரைந்து கடுவ னவற்பற்றக்
கண்ட புலவர் குரங்கியெனக் கரைபே ரலவற் கிரட்டலுறக்
      கரைவா மெனவக் கடுவனுமாக் கவியென் பெயர்க்குத் தகவுணர்ந்து
கொண்ட பயத்தின் விடுத்திலச்சை கூர்ந்து தனது குலம்புரந்த
      குனிவிற் புயத்தோன் செயனினைந்தக் கோலப்பிணவை யெழுகாதன்
மண்ட வணைக்குஞ் செழுங்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
      வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. 
(2)
413 உன்னும் வடுக னொருகோளுண் டுமிழ்ந்தா னிதுபல் கோள்களுமுண்
      டுமிழா நிற்கு மெனவற்றை யுட்கொண் டுடனே புறந்தோற்றி
மின்னும் பொழிலி னடுப்பொலியும் வியனீர்த் தடத்துக் கமலமுதல்
      வீவரர் மதுவுங் குலைத்தருவின் விடப மதுவும் பெருகவெகி
னென்னும் பறவை படிந்துமிசை யெழுங்கால் வழிதேன் விழைந்தொழுங்கி
      னெய்து மளிவெண் படமுமதற் கிட்ட கரிய கயிறுமென
மன்னு மழகார் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
      வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. 
(3)
414 ஆய்ந்த பொறிவண் டடைகிடக்கு மங்கட் பொழிலின் மடமாதர்க்
      கணியா டவரோ ராவியகத் தகத்தா மரைத்தேம் புனலுங்கோட்
டேய்ந்த தருப்பூ மதுப்புனலு மேனைத் தருப்பூப் பொழிதரவீழ்ந்
      தியைந்து பாய்தேம் புனலுங்கண் டிந்நீர் முந்நீ ரெனக்கூறத்
தோய்ந்த முகிலைக் காட்டுகெனத் தூவெள் ளனம்வீழ்ந் துருப்பாசி
      தொடர வெழல்கண் டிதுவென்னத் தோலா மகிழ்விற் றலைசிறந்து
வாய்ந்த நலங்கூர் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
      வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. 
(4)
415 பழுத்து விழுந்த நறியசுவைப் பாகற் கனிமே லொருதென்னம்
      பழமூக் கூழ்த்து விழுந்தமரப் பசுந்தேன் பொழிந்து மலரிறைத்துக்
கொழுத்து வரிவண் டிசைபாடக் கொண்ட கனியின் பெரும்பொறையாற்
      குலவு மெதிரே பலசாகை குரங்கல் கும்பத் துதிதொருமா
வழுத்து வடுப்பூண் முடிமுக்க ணமலற் காட்டி யருச்சித்தாங்
      கறைந்து நிவேதித் தெதிர்வணங்கு மன்பர் நிகர்த்த் லறிந்தமரர்
வழுத்து மலியுந் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
      வளன்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ.
(5)
வேறு
416 குமிழ்மல ருங்குளிர் முல்லையுமிந்திர கோபமும் வாமானுங்
      கூங்குயி லுந்நின் கூறம ருலகு குலாம்பொரு ளெனவளையா
லிமிழ்கலி மாமறை யைம்புல னுளதென லித்தொகை யாலுணர்வா
      னியல்பி னமைந்துப லுலகு மவாவ வியைந்த தெனத்தோற்ற
வமிழ்து பொருஞ்சுவை யஞ்சுனை நீர்நிலை யான்ற சுறத்தலைநன்
      காய கழைச்சிலை தாங்கி விளங்கிடு மம்போ ருகமுடையாய்
தமிழ்தெரி யுங்குட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ
      சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ
(6)
417 விண்டலர் செவ்விய தாமரை கொல்லோ வெண்டா மரைகொல்லோ
      விரவுதல் பெற்றொளிர் தாமரை கொல்லோ வேறெது வாமென்று
தொண்ட ருளங்கொடு பன்முறை யாய்ந்துந் துணிவு பெறாமையினாற்
      றொகுபொது விற்பைந் தாமரை யென்றே சொற்றனர் களிதூங்க 
முண்டக வதனக் கலைமக ளுங்கடன் முற்படு திருமகளு
      முரணுத லின்றி வசித்திடு மாறொளிர் முகதா மரையுடையாய்
தண்டமிழ் தெரிகுட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ 
      சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ (7)
418 அருமறை முழுமையு மாயதன் முதனடு வந்த முரைப்பதுமா 
      யத்தகு மறையின் வரம்பு கடந்த வதீதமு மாயுளநெக்
குருகுதல் கொண்டு விடாது நினைப்பவ ருள்ளவிர் தீபமுமா 
      யுற்றடி போற்றி வணங்குந ரெய்ப்புத வத்தகு நிதியமுமாய்த்
திருகுத லின்றி யுரைப்பவர் நாவிற் றீன்சுவை யமுதமுமாய்த்
      திகழ்தரு பொற்கொடி யேயள வில்லாத் தெய்வத் திருமணமே
தருதமிழ் தெரிகுட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ 
      சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ (8)
வேறு
419 சிந்தனை யொன்ற நினைந்துக வர்ந்திடு தேனே வானாடர்
      தெண்டிரை யின்க ணடைந்தனர் கொண்டது தேறா வாறாக
வந்தரு ளுன்செ யலின்றலை நின்றகண் மானே யாநேய
      மண்டலி ருந்த வரண்டர்ப ணிந்தெழு வாழ்வே சூழ்பேறே
கந்தம ளைந்த கருங்குழன் முன்பல காணா நாணாவா
      கண்டலன் மங்கை முனங்கையர் கும்பிடு காலாய் மேலாய
சந்தம லிந்த குடந்தையி ளங்கிளி தாலோ தாலேலோ
      சங்களை யுங்கை மடங்களை மங்களை தாலோ தாலேலோ. (9)
வேறு
420 மணந்த வார்குழல் வெண்பிறை சூடுமை தாலோ தாலேலோ
      வடிந்த காதிரு செங்கதிர் சேர்பரை தாலோ தாலேலோ
தணந்த காமியர் தந்துணை யாமளி தாலோ தாலேலோ
      தவஞ்செ யாவெனை யுந்தனி யாள்கொடி தாலோ தாலேலோ
நிணந்த யோகியர் சிந்தைய றாவொளி தாலோ தாலேலோ
      நிவந்த வாருயி ருய்ந்திட மேவனை தாலோ தாலேலோ
குணந்த வாதவர் பங்களை மாநிதி தாலோ தாலேலோ
      குடந்தை வாழ்வெனு மங்கள நாயகி தாலோ தாலேலோ. (10)

 

411 செய்ய கனகம் வெள்வயிரஞ் சிறந்த கமல ராகமொளி

      திகழு நீலம் வயிடூயஞ் செறிய வொன்றன் மேலொன்றா

வைய முறைவைத் துறவடுக்கி யவிரைம் பூதத் தடுக்கென்ன

      வமைத்த திருமா ளிகைமேலா லாடுந் துவசத் தருநுனையி

லெய்ய விவர்நீ ருண்டுபசந் தெழுந்த முகில்கோப் புண்டுசைவ

      ரிடங்கா பாலர் கொடிமிடைதற் கேதி யாதென் றிருங்கடல்சூழ்

வைய மதிக்கப் பொலிகுடந்தை வாழ்வே தாலோ தாலேலோ

      வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. 

(1)

 

412 விண்ட மலர்க்கா வகத்துதய வீபத் தினைக்கண் டிளமந்தி

      விழையுஞ் செந்தேத் தடையென்ன விரைந்து கடுவ னவற்பற்றக்

கண்ட புலவர் குரங்கியெனக் கரைபே ரலவற் கிரட்டலுறக்

      கரைவா மெனவக் கடுவனுமாக் கவியென் பெயர்க்குத் தகவுணர்ந்து

கொண்ட பயத்தின் விடுத்திலச்சை கூர்ந்து தனது குலம்புரந்த

      குனிவிற் புயத்தோன் செயனினைந்தக் கோலப்பிணவை யெழுகாதன்

மண்ட வணைக்குஞ் செழுங்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ

      வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. 

(2)

 

413 உன்னும் வடுக னொருகோளுண் டுமிழ்ந்தா னிதுபல் கோள்களுமுண்

      டுமிழா நிற்கு மெனவற்றை யுட்கொண் டுடனே புறந்தோற்றி

மின்னும் பொழிலி னடுப்பொலியும் வியனீர்த் தடத்துக் கமலமுதல்

      வீவரர் மதுவுங் குலைத்தருவின் விடப மதுவும் பெருகவெகி

னென்னும் பறவை படிந்துமிசை யெழுங்கால் வழிதேன் விழைந்தொழுங்கி

      னெய்து மளிவெண் படமுமதற் கிட்ட கரிய கயிறுமென

மன்னு மழகார் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ

      வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. 

(3)

 

414 ஆய்ந்த பொறிவண் டடைகிடக்கு மங்கட் பொழிலின் மடமாதர்க்

      கணியா டவரோ ராவியகத் தகத்தா மரைத்தேம் புனலுங்கோட்

டேய்ந்த தருப்பூ மதுப்புனலு மேனைத் தருப்பூப் பொழிதரவீழ்ந்

      தியைந்து பாய்தேம் புனலுங்கண் டிந்நீர் முந்நீ ரெனக்கூறத்

தோய்ந்த முகிலைக் காட்டுகெனத் தூவெள் ளனம்வீழ்ந் துருப்பாசி

      தொடர வெழல்கண் டிதுவென்னத் தோலா மகிழ்விற் றலைசிறந்து

வாய்ந்த நலங்கூர் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ

      வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ. 

(4)

 

415 பழுத்து விழுந்த நறியசுவைப் பாகற் கனிமே லொருதென்னம்

      பழமூக் கூழ்த்து விழுந்தமரப் பசுந்தேன் பொழிந்து மலரிறைத்துக்

கொழுத்து வரிவண் டிசைபாடக் கொண்ட கனியின் பெரும்பொறையாற்

      குலவு மெதிரே பலசாகை குரங்கல் கும்பத் துதிதொருமா

வழுத்து வடுப்பூண் முடிமுக்க ணமலற் காட்டி யருச்சித்தாங்

      கறைந்து நிவேதித் தெதிர்வணங்கு மன்பர் நிகர்த்த் லறிந்தமரர்

வழுத்து மலியுந் திருக்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ

      வளன்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ.

(5)

 

வேறு

416 குமிழ்மல ருங்குளிர் முல்லையுமிந்திர கோபமும் வாமானுங்

      கூங்குயி லுந்நின் கூறம ருலகு குலாம்பொரு ளெனவளையா

லிமிழ்கலி மாமறை யைம்புல னுளதென லித்தொகை யாலுணர்வா

      னியல்பி னமைந்துப லுலகு மவாவ வியைந்த தெனத்தோற்ற

வமிழ்து பொருஞ்சுவை யஞ்சுனை நீர்நிலை யான்ற சுறத்தலைநன்

      காய கழைச்சிலை தாங்கி விளங்கிடு மம்போ ருகமுடையாய்

தமிழ்தெரி யுங்குட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ

      சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ

(6)

 

417 விண்டலர் செவ்விய தாமரை கொல்லோ வெண்டா மரைகொல்லோ

      விரவுதல் பெற்றொளிர் தாமரை கொல்லோ வேறெது வாமென்று

தொண்ட ருளங்கொடு பன்முறை யாய்ந்துந் துணிவு பெறாமையினாற்

      றொகுபொது விற்பைந் தாமரை யென்றே சொற்றனர் களிதூங்க 

முண்டக வதனக் கலைமக ளுங்கடன் முற்படு திருமகளு

      முரணுத லின்றி வசித்திடு மாறொளிர் முகதா மரையுடையாய்

தண்டமிழ் தெரிகுட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ 

      சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ (7)

 

418 அருமறை முழுமையு மாயதன் முதனடு வந்த முரைப்பதுமா 

      யத்தகு மறையின் வரம்பு கடந்த வதீதமு மாயுளநெக்

குருகுதல் கொண்டு விடாது நினைப்பவ ருள்ளவிர் தீபமுமா 

      யுற்றடி போற்றி வணங்குந ரெய்ப்புத வத்தகு நிதியமுமாய்த்

திருகுத லின்றி யுரைப்பவர் நாவிற் றீன்சுவை யமுதமுமாய்த்

      திகழ்தரு பொற்கொடி யேயள வில்லாத் தெய்வத் திருமணமே

தருதமிழ் தெரிகுட மூக்கமர் பைங்கிளி தாலோ தாலேலோ 

      சங்கள வுங்கர மங்கள நாயகி தாலோ தாலேலோ (8)

 

வேறு

419 சிந்தனை யொன்ற நினைந்துக வர்ந்திடு தேனே வானாடர்

      தெண்டிரை யின்க ணடைந்தனர் கொண்டது தேறா வாறாக

வந்தரு ளுன்செ யலின்றலை நின்றகண் மானே யாநேய

      மண்டலி ருந்த வரண்டர்ப ணிந்தெழு வாழ்வே சூழ்பேறே

கந்தம ளைந்த கருங்குழன் முன்பல காணா நாணாவா

      கண்டலன் மங்கை முனங்கையர் கும்பிடு காலாய் மேலாய

சந்தம லிந்த குடந்தையி ளங்கிளி தாலோ தாலேலோ

      சங்களை யுங்கை மடங்களை மங்களை தாலோ தாலேலோ. (9)

 

வேறு

420 மணந்த வார்குழல் வெண்பிறை சூடுமை தாலோ தாலேலோ

      வடிந்த காதிரு செங்கதிர் சேர்பரை தாலோ தாலேலோ

தணந்த காமியர் தந்துணை யாமளி தாலோ தாலேலோ

      தவஞ்செ யாவெனை யுந்தனி யாள்கொடி தாலோ தாலேலோ

நிணந்த யோகியர் சிந்தைய றாவொளி தாலோ தாலேலோ

      நிவந்த வாருயி ருய்ந்திட மேவனை தாலோ தாலேலோ

குணந்த வாதவர் பங்களை மாநிதி தாலோ தாலேலோ

      குடந்தை வாழ்வெனு மங்கள நாயகி தாலோ தாலேலோ. (10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.