|
||||||||
தகர ஆகார வருக்கம் |
||||||||
தாணு வெனும்பெயர் சங்கரன் பெயரும்
தூணு மலையு நிலையுஞ் சொல்லிய
ஆவு ரிஞ்சுதறிப் பெயரு மாவே. ....835
தாதி யெனும்பெயர் அடிமையும் பரணியும். ....836
தால மெனும்பெயர் கூத்தற் கமுகொடு
ஞாலமும் பனையு முண்கலமு நாவுமாம். ....837
தாரை யெனும்பெயர் வழியும் விழியும்
ஒழுங்குஞ் சின்னமு முரைக்கப் பெறுமே. ....838
தாம மெனும்பெயர் தாரும் பூவும்
மணிவடப் பெயரு நகரமுங் கயிறும்
ஒளியுங் கொன்றையு மிருப்பிடப் பொதுவுமாம். ....839
தார மெனும்பெயர் தராவும் நாவும்
வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும்
அரும்பண்டப் பெயரும் யாழ்நரம்பி லொன்றும்
வெள்ளியு மெனவே விளம்பப் பெறுமே. ....840
தானை யெனும்பெயர் சேனையுந் துகிலும்
ஆயுதப் பொதுவு மாகு மென்ப. ....841
தாரெனும் பெயர்பூந் தாமமு மலரும்
மாவினுக் கணியுங் கிண்கிணி மாலையும்
ஒழுங்கோடு தூசிப் படையையு முரைப்பர். ....842
தாழெனும் பெயரே கதவிடு தாழும்
பதமு முயற்சியும் பகரப் பெறுமே. ....843
தாறுனும் பெயர்மரக் குலையு மளவும்
விற்குதைப் பெயரு முட்கோலும் விளம்புவர். ....844
தாதெனும் பெயரே யெழுவகைத் தாதும்
பொன்முத லேழும் புவிமுத லைந்தும்
காவிக் கல்லுங் கருதப் பெறுமே. ....845
தாண்டவ மெனும்பெயர் தாவலும் கூத்துமாம். ....846
தான மெனுபெயர் தருமக் கொடையும்
பல்வகை யுதவியு மதமு நீராடலுஞ்
சுவர்க்கமும் புலவோர் சொல்லப் பெறுமே. ....847
தாழை யெனும்பெயர் நாளி கேரமும்
கைதையின் பெயருங் கருதப் பெறுமே. ....848
தாவெனும் பெயரே பகையும் கெடுதலும்
பெலமும் வருத்தமும் தாண்டுதற் பெயருமாம். ....849
தாம்பெனும் பெயரே தாமணிக் கயிறுமாம். ....850
தாபர மெனும்பெயர் மரமுடன் மலைபோல்
நிற்பன யாவையு முடம்பு நிகழ்த்துவர். ....851
தாசி யெனும்பெய ரியம னாளும்
தொழும்பு செய்பெண்ணின் பெயருஞ் சொல்வர். ....852
தாடெனும் பெயரே தலைமையும் வலியுமாம். ....853
தாளி யெனும்பெயர் தாளிப் புதலும்
பனையு மெனவே பகர்ந்தனர் புலவர். ....854
தாணு வெனும்பெயர் சங்கரன் பெயரும் தூணு மலையு நிலையுஞ் சொல்லிய ஆவு ரிஞ்சுதறிப் பெயரு மாவே. ....835
தாதி யெனும்பெயர் அடிமையும் பரணியும். ....836
தால மெனும்பெயர் கூத்தற் கமுகொடு ஞாலமும் பனையு முண்கலமு நாவுமாம். ....837
தாரை யெனும்பெயர் வழியும் விழியும் ஒழுங்குஞ் சின்னமு முரைக்கப் பெறுமே. ....838
தாம மெனும்பெயர் தாரும் பூவும் மணிவடப் பெயரு நகரமுங் கயிறும் ஒளியுங் கொன்றையு மிருப்பிடப் பொதுவுமாம். ....839
தார மெனும்பெயர் தராவும் நாவும் வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும் அரும்பண்டப் பெயரும் யாழ்நரம்பி லொன்றும் வெள்ளியு மெனவே விளம்பப் பெறுமே. ....840
தானை யெனும்பெயர் சேனையுந் துகிலும் ஆயுதப் பொதுவு மாகு மென்ப. ....841
தாரெனும் பெயர்பூந் தாமமு மலரும் மாவினுக் கணியுங் கிண்கிணி மாலையும் ஒழுங்கோடு தூசிப் படையையு முரைப்பர். ....842
தாழெனும் பெயரே கதவிடு தாழும் பதமு முயற்சியும் பகரப் பெறுமே. ....843
தாறுனும் பெயர்மரக் குலையு மளவும் விற்குதைப் பெயரு முட்கோலும் விளம்புவர். ....844
தாதெனும் பெயரே யெழுவகைத் தாதும் பொன்முத லேழும் புவிமுத லைந்தும் காவிக் கல்லுங் கருதப் பெறுமே. ....845
தாண்டவ மெனும்பெயர் தாவலும் கூத்துமாம். ....846
தான மெனுபெயர் தருமக் கொடையும் பல்வகை யுதவியு மதமு நீராடலுஞ் சுவர்க்கமும் புலவோர் சொல்லப் பெறுமே. ....847
தாழை யெனும்பெயர் நாளி கேரமும் கைதையின் பெயருங் கருதப் பெறுமே. ....848
தாவெனும் பெயரே பகையும் கெடுதலும் பெலமும் வருத்தமும் தாண்டுதற் பெயருமாம். ....849
தாம்பெனும் பெயரே தாமணிக் கயிறுமாம். ....850
தாபர மெனும்பெயர் மரமுடன் மலைபோல் நிற்பன யாவையு முடம்பு நிகழ்த்துவர். ....851
தாசி யெனும்பெய ரியம னாளும் தொழும்பு செய்பெண்ணின் பெயருஞ் சொல்வர். ....852
தாடெனும் பெயரே தலைமையும் வலியுமாம். ....853
தாளி யெனும்பெயர் தாளிப் புதலும் பனையு மெனவே பகர்ந்தனர் புலவர். ....854
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|