LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

தகர அகர வருக்கம்

 

தரணி யெனும்பெயர் தருகதிர் இரவியும்
நிலமுஞ் சயிலமு நிகழ்த்துவர் புலவர். ....795
தமமெனும் பெயரே ராகுவு மிருளுமாம். ....796
தண்டெனும் பெயரே தடியு மிதுனமுஞ்
சிவிகையின் பெயரும் செருமிகு தானையும்
வரம்பும் வீணையுங் குழாயும் வழங்குவர். ....797
தழலெனும் பெயரே கிளிகடி கருவியும்
நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....798
தண்ணடை யெனும்பெயர் மருத நிலவூரும்
நாடு மெனவே நவிலப் பெறுமே. ....799
தண்ட மெனும்பெயர் தண்டா யுதமும்
சேனையும் யானை செல்வழியுந் தெண்டித்தலும். ....800
தடமெனும் பெயரே மலையும் பொய்கையும்
பெருமையு மகலமு மலையடி வழியும்
வளைவுங் குளக்கரைப் பெயரும் வழங்குவர். ....801
தடியெனும் பெயரே தனுவு முலக்கையும்
தசையு முடும்புந் தண்டா யுதமும்
வயலொடு மின்னும் வகுத்தனர் புலவர். ....802
தனஞ்செய னெனும்பெயர் சவ்விய சாசியும்
மெய்யின் மாருத விகற்பத்தி னொன்றும்
நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....803
தளிம மெனும்பெயர் சயனமு மெத்தையும்
அழகின் பெயரு மாகு மென்ப. ....804
தத்தை யெனும்பெயர் முன்பிறந் தாளும்
கிளியு மெனவே கிளத்துவர் புலவர். ....805
தனுவெனும் பெயரே சடமும் சிறுமையும்
வில்லின் பெயரு மோரிராசியும் விளம்புவர். ....806
தளையெனும் பெயரே தமிழ்நூற் பாதமு
மலர்முகை முறுக்கு மாண்பான் மயிரும்
தொடரொடு சிலம்புந் தொடையலுஞ் சொல்லுவர். ....807
தனமெனும் பெயர்சந் தனமும் பொன்னும்
முத்திறப் பொருளு முலையுமான் கன்றுமாம். ....808 
தவிசெனும் பெயரே மெத்தையுந் தடுக்கும்
பலகையும் பீடமும் பகர்ந்தனர் புலவர். ....809
தளமெனும் பெயரே தாழியும் சாந்தமும்
படையும் பூவிதழ்ப் பெயரும் பகர்ந்தனர். ....810
தண்ண மெனும்பெயர் தரித்தடா மழுவும்
ஒருகட் பறையு முரைக்கப் பெறுமே. ....811
தட்டை யெனும்பெயர் கரடிகைப் பறையும்
கிளிகடி குருவியுந் தினைத்தாளு முண்டமும்
மூங்கிலு மெனவே மொழிந்தனர் புலவர். ....812
தம்ப மெனும்பெயர் மெய்புகு கருவியும்
கம்பமும் பற்றுக் கோடுங் கருதுவர். ....813
தண்மை யெனும்பெயர் தாழ்வும் எளிமையும்
குளிர்ச்சியும் புலவோர் கூறப்பெறுமே. ....814
தகடெனும் பெயரே ஐமை வடிவும்
இலையு மெனவே யியம்புவர் புலவர். ....815
தராவெனும் பெயரே சங்கும் மதுகமும். ....816
தரும ராச னெனும்பெயர் யமனும்
அருகனும் புத்தனும் பாண்டு மைந்தனுமாம். ....817
தட்டெனும் பெயரே நடுவட் டேரும்
திரிகையும் பரிசையும் பகுத்தலும் தடுத்தலும்
வட்டமும் பூத்தட்டு முதலவும் வழங்கும். ....818
தன்மை யெனும்பெயர் தன்மை யினிடமும்
இயல்பு மெனவே இயம்புவர் புலவர். ....819
தளியெனும் பெயரே துளியும் கோயிலும்
தளநடத் தியசமர்த் தலமும் புகலுவர். ....820
தகையெனும் பெயரே பெருமையு மழகும்
அன்பும் பண்பு மியல்பு மாமே. ....821
தபுத லெனும்பெயர் சாதலும் கேடுமாம். ....822
தமிழெனும் பெயரே தமிழின் விகற்பமும்
நீர்மையு மினிமையு நிகழ்த்தினர் புலவர். ....823
தன்ன மெனும்பெயர் சிறுமையான் கன்றுமாம். ....824
தபன னெனும்பெயர் தழலு மருக்கனும். ....825
தலமெனும் பெயரே பச்சை நிறமும்
இலையும் புவியும் இயம்புவர் புலவர். ....826
தசும்பெனும் பெயரே குடமு மிடாவுமாம். ....827
தட்ட லென்பெய ரொத்தறுத்த லினுடனே
தடுத்தலின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....828
தலையெனும் பெயரே இடமும் சென்னியும்
விசும்பு முதன்மையும் விளம்பப் பெறுமே. ....829
தவவெனும் பெயரே மிகுதியும் குறைவுமாம். ....830
தந்தெனும் பெயரே சாத்திரப் பெயரும்
நூலின் பெயரு நுவலப் பெறுமே. ....831
தகைமை யெனும்பெயர் அழகும் பெருமையும்
இயல்பு மெனவே யியம்பப் பெறுமே. ....832
தனியெனும் பெயரொப் பின்மைப் பெயருந்
தனிமையின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....833
தன்னை யெனும்பெயர் முன்பிறந் தானும்
அன்னையும் செவிலியு மாகு மென்ப. ....834

 

தரணி யெனும்பெயர் தருகதிர் இரவியும்

நிலமுஞ் சயிலமு நிகழ்த்துவர் புலவர். ....795

 

தமமெனும் பெயரே ராகுவு மிருளுமாம். ....796

 

தண்டெனும் பெயரே தடியு மிதுனமுஞ்

சிவிகையின் பெயரும் செருமிகு தானையும்

வரம்பும் வீணையுங் குழாயும் வழங்குவர். ....797

 

தழலெனும் பெயரே கிளிகடி கருவியும்

நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....798

 

தண்ணடை யெனும்பெயர் மருத நிலவூரும்

நாடு மெனவே நவிலப் பெறுமே. ....799

 

தண்ட மெனும்பெயர் தண்டா யுதமும்

சேனையும் யானை செல்வழியுந் தெண்டித்தலும். ....800

 

தடமெனும் பெயரே மலையும் பொய்கையும்

பெருமையு மகலமு மலையடி வழியும்

வளைவுங் குளக்கரைப் பெயரும் வழங்குவர். ....801

 

தடியெனும் பெயரே தனுவு முலக்கையும்

தசையு முடும்புந் தண்டா யுதமும்

வயலொடு மின்னும் வகுத்தனர் புலவர். ....802

 

தனஞ்செய னெனும்பெயர் சவ்விய சாசியும்

மெய்யின் மாருத விகற்பத்தி னொன்றும்

நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....803

 

தளிம மெனும்பெயர் சயனமு மெத்தையும்

அழகின் பெயரு மாகு மென்ப. ....804

 

தத்தை யெனும்பெயர் முன்பிறந் தாளும்

கிளியு மெனவே கிளத்துவர் புலவர். ....805

 

தனுவெனும் பெயரே சடமும் சிறுமையும்

வில்லின் பெயரு மோரிராசியும் விளம்புவர். ....806

 

தளையெனும் பெயரே தமிழ்நூற் பாதமு

மலர்முகை முறுக்கு மாண்பான் மயிரும்

தொடரொடு சிலம்புந் தொடையலுஞ் சொல்லுவர். ....807

 

தனமெனும் பெயர்சந் தனமும் பொன்னும்

முத்திறப் பொருளு முலையுமான் கன்றுமாம். ....808 

 

தவிசெனும் பெயரே மெத்தையுந் தடுக்கும்

பலகையும் பீடமும் பகர்ந்தனர் புலவர். ....809

 

தளமெனும் பெயரே தாழியும் சாந்தமும்

படையும் பூவிதழ்ப் பெயரும் பகர்ந்தனர். ....810

 

தண்ண மெனும்பெயர் தரித்தடா மழுவும்

ஒருகட் பறையு முரைக்கப் பெறுமே. ....811

 

தட்டை யெனும்பெயர் கரடிகைப் பறையும்

கிளிகடி குருவியுந் தினைத்தாளு முண்டமும்

மூங்கிலு மெனவே மொழிந்தனர் புலவர். ....812

 

தம்ப மெனும்பெயர் மெய்புகு கருவியும்

கம்பமும் பற்றுக் கோடுங் கருதுவர். ....813

 

தண்மை யெனும்பெயர் தாழ்வும் எளிமையும்

குளிர்ச்சியும் புலவோர் கூறப்பெறுமே. ....814

 

தகடெனும் பெயரே ஐமை வடிவும்

இலையு மெனவே யியம்புவர் புலவர். ....815

 

தராவெனும் பெயரே சங்கும் மதுகமும். ....816

 

தரும ராச னெனும்பெயர் யமனும்

அருகனும் புத்தனும் பாண்டு மைந்தனுமாம். ....817

 

தட்டெனும் பெயரே நடுவட் டேரும்

திரிகையும் பரிசையும் பகுத்தலும் தடுத்தலும்

வட்டமும் பூத்தட்டு முதலவும் வழங்கும். ....818

 

தன்மை யெனும்பெயர் தன்மை யினிடமும்

இயல்பு மெனவே இயம்புவர் புலவர். ....819

 

தளியெனும் பெயரே துளியும் கோயிலும்

தளநடத் தியசமர்த் தலமும் புகலுவர். ....820

 

தகையெனும் பெயரே பெருமையு மழகும்

அன்பும் பண்பு மியல்பு மாமே. ....821

 

தபுத லெனும்பெயர் சாதலும் கேடுமாம். ....822

 

தமிழெனும் பெயரே தமிழின் விகற்பமும்

நீர்மையு மினிமையு நிகழ்த்தினர் புலவர். ....823

 

தன்ன மெனும்பெயர் சிறுமையான் கன்றுமாம். ....824

 

தபன னெனும்பெயர் தழலு மருக்கனும். ....825

 

தலமெனும் பெயரே பச்சை நிறமும்

இலையும் புவியும் இயம்புவர் புலவர். ....826

 

தசும்பெனும் பெயரே குடமு மிடாவுமாம். ....827

 

தட்ட லென்பெய ரொத்தறுத்த லினுடனே

தடுத்தலின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....828

 

தலையெனும் பெயரே இடமும் சென்னியும்

விசும்பு முதன்மையும் விளம்பப் பெறுமே. ....829

 

தவவெனும் பெயரே மிகுதியும் குறைவுமாம். ....830

 

தந்தெனும் பெயரே சாத்திரப் பெயரும்

நூலின் பெயரு நுவலப் பெறுமே. ....831

 

தகைமை யெனும்பெயர் அழகும் பெருமையும்

இயல்பு மெனவே யியம்பப் பெறுமே. ....832

 

தனியெனும் பெயரொப் பின்மைப் பெயருந்

தனிமையின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....833

 

தன்னை யெனும்பெயர் முன்பிறந் தானும்

அன்னையும் செவிலியு மாகு மென்ப. ....834

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.