|
||||||||
தகர அகர வருக்கம் |
||||||||
தரணி யெனும்பெயர் தருகதிர் இரவியும்
நிலமுஞ் சயிலமு நிகழ்த்துவர் புலவர். ....795
தமமெனும் பெயரே ராகுவு மிருளுமாம். ....796
தண்டெனும் பெயரே தடியு மிதுனமுஞ்
சிவிகையின் பெயரும் செருமிகு தானையும்
வரம்பும் வீணையுங் குழாயும் வழங்குவர். ....797
தழலெனும் பெயரே கிளிகடி கருவியும்
நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....798
தண்ணடை யெனும்பெயர் மருத நிலவூரும்
நாடு மெனவே நவிலப் பெறுமே. ....799
தண்ட மெனும்பெயர் தண்டா யுதமும்
சேனையும் யானை செல்வழியுந் தெண்டித்தலும். ....800
தடமெனும் பெயரே மலையும் பொய்கையும்
பெருமையு மகலமு மலையடி வழியும்
வளைவுங் குளக்கரைப் பெயரும் வழங்குவர். ....801
தடியெனும் பெயரே தனுவு முலக்கையும்
தசையு முடும்புந் தண்டா யுதமும்
வயலொடு மின்னும் வகுத்தனர் புலவர். ....802
தனஞ்செய னெனும்பெயர் சவ்விய சாசியும்
மெய்யின் மாருத விகற்பத்தி னொன்றும்
நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....803
தளிம மெனும்பெயர் சயனமு மெத்தையும்
அழகின் பெயரு மாகு மென்ப. ....804
தத்தை யெனும்பெயர் முன்பிறந் தாளும்
கிளியு மெனவே கிளத்துவர் புலவர். ....805
தனுவெனும் பெயரே சடமும் சிறுமையும்
வில்லின் பெயரு மோரிராசியும் விளம்புவர். ....806
தளையெனும் பெயரே தமிழ்நூற் பாதமு
மலர்முகை முறுக்கு மாண்பான் மயிரும்
தொடரொடு சிலம்புந் தொடையலுஞ் சொல்லுவர். ....807
தனமெனும் பெயர்சந் தனமும் பொன்னும்
முத்திறப் பொருளு முலையுமான் கன்றுமாம். ....808
தவிசெனும் பெயரே மெத்தையுந் தடுக்கும்
பலகையும் பீடமும் பகர்ந்தனர் புலவர். ....809
தளமெனும் பெயரே தாழியும் சாந்தமும்
படையும் பூவிதழ்ப் பெயரும் பகர்ந்தனர். ....810
தண்ண மெனும்பெயர் தரித்தடா மழுவும்
ஒருகட் பறையு முரைக்கப் பெறுமே. ....811
தட்டை யெனும்பெயர் கரடிகைப் பறையும்
கிளிகடி குருவியுந் தினைத்தாளு முண்டமும்
மூங்கிலு மெனவே மொழிந்தனர் புலவர். ....812
தம்ப மெனும்பெயர் மெய்புகு கருவியும்
கம்பமும் பற்றுக் கோடுங் கருதுவர். ....813
தண்மை யெனும்பெயர் தாழ்வும் எளிமையும்
குளிர்ச்சியும் புலவோர் கூறப்பெறுமே. ....814
தகடெனும் பெயரே ஐமை வடிவும்
இலையு மெனவே யியம்புவர் புலவர். ....815
தராவெனும் பெயரே சங்கும் மதுகமும். ....816
தரும ராச னெனும்பெயர் யமனும்
அருகனும் புத்தனும் பாண்டு மைந்தனுமாம். ....817
தட்டெனும் பெயரே நடுவட் டேரும்
திரிகையும் பரிசையும் பகுத்தலும் தடுத்தலும்
வட்டமும் பூத்தட்டு முதலவும் வழங்கும். ....818
தன்மை யெனும்பெயர் தன்மை யினிடமும்
இயல்பு மெனவே இயம்புவர் புலவர். ....819
தளியெனும் பெயரே துளியும் கோயிலும்
தளநடத் தியசமர்த் தலமும் புகலுவர். ....820
தகையெனும் பெயரே பெருமையு மழகும்
அன்பும் பண்பு மியல்பு மாமே. ....821
தபுத லெனும்பெயர் சாதலும் கேடுமாம். ....822
தமிழெனும் பெயரே தமிழின் விகற்பமும்
நீர்மையு மினிமையு நிகழ்த்தினர் புலவர். ....823
தன்ன மெனும்பெயர் சிறுமையான் கன்றுமாம். ....824
தபன னெனும்பெயர் தழலு மருக்கனும். ....825
தலமெனும் பெயரே பச்சை நிறமும்
இலையும் புவியும் இயம்புவர் புலவர். ....826
தசும்பெனும் பெயரே குடமு மிடாவுமாம். ....827
தட்ட லென்பெய ரொத்தறுத்த லினுடனே
தடுத்தலின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....828
தலையெனும் பெயரே இடமும் சென்னியும்
விசும்பு முதன்மையும் விளம்பப் பெறுமே. ....829
தவவெனும் பெயரே மிகுதியும் குறைவுமாம். ....830
தந்தெனும் பெயரே சாத்திரப் பெயரும்
நூலின் பெயரு நுவலப் பெறுமே. ....831
தகைமை யெனும்பெயர் அழகும் பெருமையும்
இயல்பு மெனவே யியம்பப் பெறுமே. ....832
தனியெனும் பெயரொப் பின்மைப் பெயருந்
தனிமையின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....833
தன்னை யெனும்பெயர் முன்பிறந் தானும்
அன்னையும் செவிலியு மாகு மென்ப. ....834
தரணி யெனும்பெயர் தருகதிர் இரவியும் நிலமுஞ் சயிலமு நிகழ்த்துவர் புலவர். ....795
தமமெனும் பெயரே ராகுவு மிருளுமாம். ....796
தண்டெனும் பெயரே தடியு மிதுனமுஞ் சிவிகையின் பெயரும் செருமிகு தானையும் வரம்பும் வீணையுங் குழாயும் வழங்குவர். ....797
தழலெனும் பெயரே கிளிகடி கருவியும் நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....798
தண்ணடை யெனும்பெயர் மருத நிலவூரும் நாடு மெனவே நவிலப் பெறுமே. ....799
தண்ட மெனும்பெயர் தண்டா யுதமும் சேனையும் யானை செல்வழியுந் தெண்டித்தலும். ....800
தடமெனும் பெயரே மலையும் பொய்கையும் பெருமையு மகலமு மலையடி வழியும் வளைவுங் குளக்கரைப் பெயரும் வழங்குவர். ....801
தடியெனும் பெயரே தனுவு முலக்கையும் தசையு முடும்புந் தண்டா யுதமும் வயலொடு மின்னும் வகுத்தனர் புலவர். ....802
தனஞ்செய னெனும்பெயர் சவ்விய சாசியும் மெய்யின் மாருத விகற்பத்தி னொன்றும் நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....803
தளிம மெனும்பெயர் சயனமு மெத்தையும் அழகின் பெயரு மாகு மென்ப. ....804
தத்தை யெனும்பெயர் முன்பிறந் தாளும் கிளியு மெனவே கிளத்துவர் புலவர். ....805
தனுவெனும் பெயரே சடமும் சிறுமையும் வில்லின் பெயரு மோரிராசியும் விளம்புவர். ....806
தளையெனும் பெயரே தமிழ்நூற் பாதமு மலர்முகை முறுக்கு மாண்பான் மயிரும் தொடரொடு சிலம்புந் தொடையலுஞ் சொல்லுவர். ....807
தனமெனும் பெயர்சந் தனமும் பொன்னும் முத்திறப் பொருளு முலையுமான் கன்றுமாம். ....808
தவிசெனும் பெயரே மெத்தையுந் தடுக்கும் பலகையும் பீடமும் பகர்ந்தனர் புலவர். ....809
தளமெனும் பெயரே தாழியும் சாந்தமும் படையும் பூவிதழ்ப் பெயரும் பகர்ந்தனர். ....810
தண்ண மெனும்பெயர் தரித்தடா மழுவும் ஒருகட் பறையு முரைக்கப் பெறுமே. ....811
தட்டை யெனும்பெயர் கரடிகைப் பறையும் கிளிகடி குருவியுந் தினைத்தாளு முண்டமும் மூங்கிலு மெனவே மொழிந்தனர் புலவர். ....812
தம்ப மெனும்பெயர் மெய்புகு கருவியும் கம்பமும் பற்றுக் கோடுங் கருதுவர். ....813
தண்மை யெனும்பெயர் தாழ்வும் எளிமையும் குளிர்ச்சியும் புலவோர் கூறப்பெறுமே. ....814
தகடெனும் பெயரே ஐமை வடிவும் இலையு மெனவே யியம்புவர் புலவர். ....815
தராவெனும் பெயரே சங்கும் மதுகமும். ....816
தரும ராச னெனும்பெயர் யமனும் அருகனும் புத்தனும் பாண்டு மைந்தனுமாம். ....817
தட்டெனும் பெயரே நடுவட் டேரும் திரிகையும் பரிசையும் பகுத்தலும் தடுத்தலும் வட்டமும் பூத்தட்டு முதலவும் வழங்கும். ....818
தன்மை யெனும்பெயர் தன்மை யினிடமும் இயல்பு மெனவே இயம்புவர் புலவர். ....819
தளியெனும் பெயரே துளியும் கோயிலும் தளநடத் தியசமர்த் தலமும் புகலுவர். ....820
தகையெனும் பெயரே பெருமையு மழகும் அன்பும் பண்பு மியல்பு மாமே. ....821
தபுத லெனும்பெயர் சாதலும் கேடுமாம். ....822
தமிழெனும் பெயரே தமிழின் விகற்பமும் நீர்மையு மினிமையு நிகழ்த்தினர் புலவர். ....823
தன்ன மெனும்பெயர் சிறுமையான் கன்றுமாம். ....824
தபன னெனும்பெயர் தழலு மருக்கனும். ....825
தலமெனும் பெயரே பச்சை நிறமும் இலையும் புவியும் இயம்புவர் புலவர். ....826
தசும்பெனும் பெயரே குடமு மிடாவுமாம். ....827
தட்ட லென்பெய ரொத்தறுத்த லினுடனே தடுத்தலின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....828
தலையெனும் பெயரே இடமும் சென்னியும் விசும்பு முதன்மையும் விளம்பப் பெறுமே. ....829
தவவெனும் பெயரே மிகுதியும் குறைவுமாம். ....830
தந்தெனும் பெயரே சாத்திரப் பெயரும் நூலின் பெயரு நுவலப் பெறுமே. ....831
தகைமை யெனும்பெயர் அழகும் பெருமையும் இயல்பு மெனவே யியம்பப் பெறுமே. ....832
தனியெனும் பெயரொப் பின்மைப் பெயருந் தனிமையின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....833
தன்னை யெனும்பெயர் முன்பிறந் தானும் அன்னையும் செவிலியு மாகு மென்ப. ....834
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|