|
||||||||
தகர உகர வருக்கம் |
||||||||
துணங்கற லென்னும் பெயர்திரு விழாவும்
இருளு மெனவே யியம்புவர் புலவர். ....869
துடியெனும் பெயரே கால நுட்பமும்
சிற்றேல முமேழ் மாதர் நிருத்தமும்
சிறுபறை யுங்கூ தாளமும் செப்புவர். ....870
துத்தி யெனும்பெயர் முலையின் சுணங்கும்
பாம்பின் படத்தின் பொறியுமோர் புதலுமாம். ....871
துண்ட மெனும்பெயர் சாரைப் பாம்பும்
கண்டமு முகமு மூக்குங் கருதவர். ....872
துருத்தி யெனும்பெயர் ஆற்றிடைக் குறையும்
சருமமு மெனவே சாற்றுவர் புலவர். ....873
துகளெனும் பெயர்நுண் பொடியுங் குற்றமும். ....874
துவக்கெனும் பெயரே தோலும் பிணக்குமாம். ....875
துத்த மெனும்பெயர் யாழி னரம்பும்
எழுவகை யினோர்வி கற்பமும் வயிறும்
பாலுமோர் மருந்தும் பகரப் பெறுமே. ....876
துப்பெனும் பெயரே துணைக்கா ரணமும்
அரக்கு மாயுதமும் பெலமும் பவளமும்
நெய்யும் பொலிவும் அனுபவப் பெயருமாம். ....877
துரோண மெனும்பெயர் தும்பையுஞ் சிம்புளும்
பதக்கொடு காகமுஞ் சிலையும் பகருவர். ....878
துணியெனும் பெயரே துண்டமுஞ் சீரையும்
சோதிநாட் பெயரும் சொல்லுவர் புலவர். ....879
தும்பி யெனும்பெயர் சுரையும் யானையும்
வண்டு மதுவும் வழங்கப் பெறுமே. ....880
துளியெனும் பெயர்மழைத் துளிபெண் ணாமையாம். ....881
துஞ்ச லெனப்பெயர் நிலைபேறு முறக்கமும்
மரணமு மெனவே வழங்கப் பெறுமே. ....882
துணையெனும் பெயரே யுழவும் சகாயமும்
உவமையு முவமையும் உரைத்தனர் புலவர். ....883
தும்பெனும் பெயரே தோடுஞ் சிம்புளும். ....884
துவையெனும் பெயர்பிண் ணாக்கும் இறைச்சியும்
பருகுவ புளிங்கறிப் பெயரும் பகருவர். ....885
துனியெனும் பெயரே புலவி நீடுதலும்
கோபமும் வரியுங் கூறுவர் புலவர். ....886
துன்ன லெனும்பெயர் குறுகலுஞ் செறிவுமாம். ....887
துணங்கை யெனும்பெயர் திருவிழா வுடனே
மெய்க்கூத் தெனவும் விளம்புவர் புலவர். ....888
துளும்ப லெனும்பெய ரலைதலுந் திமிறலும். ....889
துணித லெனும்பெயர் துணிபடற் பெயரும்
தெளிவு மெனவே செப்பப் பெறுமே. ....890
துணங்கற லென்னும் பெயர்திரு விழாவும் இருளு மெனவே யியம்புவர் புலவர். ....869
துடியெனும் பெயரே கால நுட்பமும் சிற்றேல முமேழ் மாதர் நிருத்தமும் சிறுபறை யுங்கூ தாளமும் செப்புவர். ....870
துத்தி யெனும்பெயர் முலையின் சுணங்கும் பாம்பின் படத்தின் பொறியுமோர் புதலுமாம். ....871
துண்ட மெனும்பெயர் சாரைப் பாம்பும் கண்டமு முகமு மூக்குங் கருதவர். ....872
துருத்தி யெனும்பெயர் ஆற்றிடைக் குறையும் சருமமு மெனவே சாற்றுவர் புலவர். ....873
துகளெனும் பெயர்நுண் பொடியுங் குற்றமும். ....874
துவக்கெனும் பெயரே தோலும் பிணக்குமாம். ....875
துத்த மெனும்பெயர் யாழி னரம்பும் எழுவகை யினோர்வி கற்பமும் வயிறும் பாலுமோர் மருந்தும் பகரப் பெறுமே. ....876
துப்பெனும் பெயரே துணைக்கா ரணமும் அரக்கு மாயுதமும் பெலமும் பவளமும் நெய்யும் பொலிவும் அனுபவப் பெயருமாம். ....877
துரோண மெனும்பெயர் தும்பையுஞ் சிம்புளும் பதக்கொடு காகமுஞ் சிலையும் பகருவர். ....878
துணியெனும் பெயரே துண்டமுஞ் சீரையும் சோதிநாட் பெயரும் சொல்லுவர் புலவர். ....879
தும்பி யெனும்பெயர் சுரையும் யானையும் வண்டு மதுவும் வழங்கப் பெறுமே. ....880
துளியெனும் பெயர்மழைத் துளிபெண் ணாமையாம். ....881
துஞ்ச லெனப்பெயர் நிலைபேறு முறக்கமும் மரணமு மெனவே வழங்கப் பெறுமே. ....882
துணையெனும் பெயரே யுழவும் சகாயமும் உவமையு முவமையும் உரைத்தனர் புலவர். ....883
தும்பெனும் பெயரே தோடுஞ் சிம்புளும். ....884
துவையெனும் பெயர்பிண் ணாக்கும் இறைச்சியும் பருகுவ புளிங்கறிப் பெயரும் பகருவர். ....885
துனியெனும் பெயரே புலவி நீடுதலும் கோபமும் வரியுங் கூறுவர் புலவர். ....886
துன்ன லெனும்பெயர் குறுகலுஞ் செறிவுமாம். ....887
துணங்கை யெனும்பெயர் திருவிழா வுடனே மெய்க்கூத் தெனவும் விளம்புவர் புலவர். ....888
துளும்ப லெனும்பெய ரலைதலுந் திமிறலும். ....889
துணித லெனும்பெயர் துணிபடற் பெயரும் தெளிவு மெனவே செப்பப் பெறுமே. ....890
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|