LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

தகர உகர வருக்கம்

 

துணங்கற லென்னும் பெயர்திரு விழாவும்
இருளு மெனவே யியம்புவர் புலவர். ....869
துடியெனும் பெயரே கால நுட்பமும்
சிற்றேல முமேழ் மாதர் நிருத்தமும்
சிறுபறை யுங்கூ தாளமும் செப்புவர். ....870
துத்தி யெனும்பெயர் முலையின் சுணங்கும்
பாம்பின் படத்தின் பொறியுமோர் புதலுமாம். ....871
துண்ட மெனும்பெயர் சாரைப் பாம்பும்
கண்டமு முகமு மூக்குங் கருதவர். ....872
துருத்தி யெனும்பெயர் ஆற்றிடைக் குறையும்
சருமமு மெனவே சாற்றுவர் புலவர். ....873
துகளெனும் பெயர்நுண் பொடியுங் குற்றமும். ....874
துவக்கெனும் பெயரே தோலும் பிணக்குமாம். ....875
துத்த மெனும்பெயர் யாழி னரம்பும்
எழுவகை யினோர்வி கற்பமும் வயிறும்
பாலுமோர் மருந்தும் பகரப் பெறுமே. ....876
துப்பெனும் பெயரே துணைக்கா ரணமும்
அரக்கு மாயுதமும் பெலமும் பவளமும்
நெய்யும் பொலிவும் அனுபவப் பெயருமாம். ....877
துரோண மெனும்பெயர் தும்பையுஞ் சிம்புளும்
பதக்கொடு காகமுஞ் சிலையும் பகருவர். ....878
துணியெனும் பெயரே துண்டமுஞ் சீரையும்
சோதிநாட் பெயரும் சொல்லுவர் புலவர். ....879
தும்பி யெனும்பெயர் சுரையும் யானையும்
வண்டு மதுவும் வழங்கப் பெறுமே. ....880
துளியெனும் பெயர்மழைத் துளிபெண் ணாமையாம். ....881
துஞ்ச லெனப்பெயர் நிலைபேறு முறக்கமும்
மரணமு மெனவே வழங்கப் பெறுமே. ....882
துணையெனும் பெயரே யுழவும் சகாயமும்
உவமையு முவமையும் உரைத்தனர் புலவர். ....883
தும்பெனும் பெயரே தோடுஞ் சிம்புளும். ....884
துவையெனும் பெயர்பிண் ணாக்கும் இறைச்சியும்
பருகுவ புளிங்கறிப் பெயரும் பகருவர். ....885
துனியெனும் பெயரே புலவி நீடுதலும்
கோபமும் வரியுங் கூறுவர் புலவர். ....886
துன்ன லெனும்பெயர் குறுகலுஞ் செறிவுமாம். ....887
துணங்கை யெனும்பெயர் திருவிழா வுடனே
மெய்க்கூத் தெனவும் விளம்புவர் புலவர். ....888
துளும்ப லெனும்பெய ரலைதலுந் திமிறலும். ....889
துணித லெனும்பெயர் துணிபடற் பெயரும்
தெளிவு மெனவே செப்பப் பெறுமே. ....890

 

துணங்கற லென்னும் பெயர்திரு விழாவும்

இருளு மெனவே யியம்புவர் புலவர். ....869

 

துடியெனும் பெயரே கால நுட்பமும்

சிற்றேல முமேழ் மாதர் நிருத்தமும்

சிறுபறை யுங்கூ தாளமும் செப்புவர். ....870

 

துத்தி யெனும்பெயர் முலையின் சுணங்கும்

பாம்பின் படத்தின் பொறியுமோர் புதலுமாம். ....871

 

துண்ட மெனும்பெயர் சாரைப் பாம்பும்

கண்டமு முகமு மூக்குங் கருதவர். ....872

 

துருத்தி யெனும்பெயர் ஆற்றிடைக் குறையும்

சருமமு மெனவே சாற்றுவர் புலவர். ....873

 

துகளெனும் பெயர்நுண் பொடியுங் குற்றமும். ....874

 

துவக்கெனும் பெயரே தோலும் பிணக்குமாம். ....875

 

துத்த மெனும்பெயர் யாழி னரம்பும்

எழுவகை யினோர்வி கற்பமும் வயிறும்

பாலுமோர் மருந்தும் பகரப் பெறுமே. ....876

 

துப்பெனும் பெயரே துணைக்கா ரணமும்

அரக்கு மாயுதமும் பெலமும் பவளமும்

நெய்யும் பொலிவும் அனுபவப் பெயருமாம். ....877

 

துரோண மெனும்பெயர் தும்பையுஞ் சிம்புளும்

பதக்கொடு காகமுஞ் சிலையும் பகருவர். ....878

 

துணியெனும் பெயரே துண்டமுஞ் சீரையும்

சோதிநாட் பெயரும் சொல்லுவர் புலவர். ....879

 

தும்பி யெனும்பெயர் சுரையும் யானையும்

வண்டு மதுவும் வழங்கப் பெறுமே. ....880

 

துளியெனும் பெயர்மழைத் துளிபெண் ணாமையாம். ....881

 

துஞ்ச லெனப்பெயர் நிலைபேறு முறக்கமும்

மரணமு மெனவே வழங்கப் பெறுமே. ....882

 

துணையெனும் பெயரே யுழவும் சகாயமும்

உவமையு முவமையும் உரைத்தனர் புலவர். ....883

 

தும்பெனும் பெயரே தோடுஞ் சிம்புளும். ....884

 

துவையெனும் பெயர்பிண் ணாக்கும் இறைச்சியும்

பருகுவ புளிங்கறிப் பெயரும் பகருவர். ....885

 

துனியெனும் பெயரே புலவி நீடுதலும்

கோபமும் வரியுங் கூறுவர் புலவர். ....886

 

துன்ன லெனும்பெயர் குறுகலுஞ் செறிவுமாம். ....887

 

துணங்கை யெனும்பெயர் திருவிழா வுடனே

மெய்க்கூத் தெனவும் விளம்புவர் புலவர். ....888

 

துளும்ப லெனும்பெய ரலைதலுந் திமிறலும். ....889

 

துணித லெனும்பெயர் துணிபடற் பெயரும்

தெளிவு மெனவே செப்பப் பெறுமே. ....890

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.