LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

தகவல் பெரும் உரிமைச் சட்டம் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!

அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டம் பொருந்தாது. இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

சட்டத்தின் நோக்கங்கள் :

அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்;

அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்;

அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்வதோடு, ஊழலை ஒழித்தல்;

அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.

பொது தகவல் அலுவலர் மற்றும் உதவி பொது தகவல் அலுவலர் நியமனம் :

இச்சட்டம் பிரிவு 5, உட்பிரிவு (1)ன்படி, தகவலுக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, தகவல் அளிக்க ஏதுவாக, ஒவ்வொரு அலுவலகங்களிலும், பொது தகவல் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். மேலும் உட்பிரிவு 2ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றை பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். (தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் தகவல் பெறுவதற்காக பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், நிகரி எண் போன்றவைகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

தகவல் பெறுவதற்கான வேண்டுகோள் செய்யப்படுதல் வேண்டிய முறை :

இச்சட்டப் பிரிவு 6ன்படி, தகவல் பெற விரும்பும் நபர், ஆங்கிலம் அல்லது தமிழ்மொழியில், எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான இன்றைய கட்டணமான ரூபாய் 10/- (ரூபாய் பத்து மட்டும்) பணமாகவோ வரைவோலையாகவோ அல்லது அரசு கருவூல சீட்டு மூலமாகவோ, அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தன்னால் கோரப்படும் தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாதவிடத்து, அதனை எழுத்து வடிவில் கொணர்ந்திட தகுந்த, எல்லா உதவிகளையும் பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர் செய்திட வேண்டும்;

தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடமிருந்து அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் கூடாது. மேலும், அவரை தொடர்பு கொள்வதற்காக தேவையான விவரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் தகவல் பெற விரும்புபவர்களிடமிருந்து கோருதல் கூடாது.

ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிறவிடத்து, அந்தத் தகவல்;

(அ) பிரிதொரு அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப்பட்டதாக;

அல்லது

(ஆ) அதன் உறு பொருள் பிறிதொரு அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற் பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்குமிடத்து,

அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து, அத்தகைய மாற்றல் குறித்து விண்ணப்பதாரருக்கு உடனடியாக தெரிவிக்கப்படல் வேண்டும். இதனை இயன்ற அளவு விரைவாக செய்திடல் வேண்டும். எந்நேர்விலும் அந்த விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு மிகைபடாமல் செய்யப்படவேண்டும்.

தகவல் பெறுவதற்கான மாதிரி கடிதப் படிவம் :

(இதைக் கேட்கும் தகவலுக்கேற்ப மற்றும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்)

அனுப்புநர்

(விண்ணப்பதாரரின் பெயரும், முகவரியும் குறிப்பிடவேண்டும்)

பெறுநர்

(உரிய அலுவலகத்தின் பொதுத்தகவல் அலுவலர்/ உதவி பொதுத்தகவல் அலுவலர் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்)

ஐயா/அம்மையீர்,

தயவு செய்து கீழ்கண்ட தகவல்களை கொடுக்கவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் விவரம்

2. நான் கீழ்கண்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன். (பார்வையிட விரும்பும் ஆவணங்கள் )

3. எனக்கு கீழ்கண்ட ஆவணங்களின் படிகளை கொடுக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். (ஆவணங்களின் விவரம்)

4. நான் தகவல் அறியும் கட்டணங்கள் செலுத்தியுள்ளேன், அதன் விவரங்கள் கீழ்வறுமாறு

கட்டணம் செலுத்தியதற்கான சான்றுகளை இணைத்துள்ளேன்.

5. எனக்கு மேற்கண்ட தகவல்கள் / ஆவணங்கள் அவசரமாக

தேவைப்படுகின்றன. விரைவில் எனக்கு கொடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இடம்

நாள்

விண்ணப்பதாரர் கையொப்பம்

கோரிக்கையின் மீதான நடவடிக்கைகள் :

 கோரிக்கை பெற்ற 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு தகவல் அளிக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்க மறுக்குமிடத்து, தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, பிரிவுகள் 8 மற்றும் 9ல் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பொருத்தமான காரணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும்.

கோரப்பட்ட தகவலானது, ஒருவருடைய உயிர் அல்லது சுதந்திரம் தொடர்புடையதாகயிருப் பின், அதற்கான கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள், தகவல் அளிக்கப்படுதல் வேண்டும்.

குறித்துரைக்கப்பட்ட கால கெடுவிற்குள் கோரப்பட்ட தகவலின் பேரில் முடிவு எதனையும் அளிக்க தவறுமிடத்து, சம்மந்தப்பட்ட பொது தகவல் அலுவலர், அக்கோரிக்கையினை ஏற்க மறுத்ததாகவே கருதப்படும்.

கோரிக்கையின் மீது தகவல் அளித்தல் குறித்து முடிவு எடுக்குமிடத்து, பொதுத்தகவல் அலுவலர் அந்த தகவல் அளிப்பதற்கான கூடுதலான கட்டணம் ஏதேனுமிருப்பின், அதைச் செலுத்தக் கோரி விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த விவரத்தினை அனுப்புவதற்கும், கூடுதலான கட்டணத்தை செலுத்துவதற்கும் இடையே உள்ள காலத்தினை ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட 30 நாட்கள் கால அளவையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

மேல் முறையீட்டு அலுவலர், மேல் முறையீட்டிற்கான காலக்கெடு, அதனை செயல்படுத்தவேண்டிய முறை மற்றும் விதிக்கப்பட்ட கட்டணங்கள் உள்ளடங்கிய விவரங்களை, முடிவின் மீதான மறு ஆய்விற்காக, மனுதாரருக்கு அளித்தல் வேண்டும்.

மனுதாரர் புலன் சார்ந்த ஊனமுற்றவராக இருக்குமிடத்து, பொது தகவல் அலவலர், அவருக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பார்வையிடுவதற்கு உரிய உதவிகள் அளித்தல் வேண்டும்.

தகவல்கள் அச்சடிக்கப்பட்ட படிவத்தில் அல்லது மின்னணு படிவத்தில் இருக்குமிடத்து, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்துதல் வேண்டும்.

மேற்கூறிய கட்டணங்கள் அனைத்தும், நியாயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மனுதாரர் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள நபராக இருக்குமிடத்து, மேற்கூறிய அனைத்து கட்டணங்களையும் அவரிடமிருந்து வசூலிக்கக் கூடாது.

பொது தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவலை அளிக்க தவறுமிடத்து, தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 7 உட்பிரிவு 5ன்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு அந்த தகவலை அளிக்க வேண்டும்.

மனுதாரரின் கோரிக்கையின் மீது தகவல் அளிக்க முடிவெடுக்கும் முன்னர், பொது தகவல் அலவலர், இச்சட்டத்தின் பிரிவு 11ன் கீழ் உட்பட்டு, மூன்றாம் தரப்பினரால் செய்யப்பட்ட முறையீட்டினையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

மனுதாரரின் விண்ணப்பத்தினை நிராகரிக்குமிடத்து, விண்ணப்பதாரருக்கு பொதுத்தகவல் அலுவலர் கீழ்க்கண்ட தகவல்களையும் தெரிவித்தல் வேண்டும்:-

1. விண்ணப்பத்தினை மறுப்பதற்கான காரணங்கள்;
2. அவ்வாறு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு எந்த கால கெடுவிற்குள் செய்யப்பட வேண்டும்;
3. மேல் முறையீட்டு அலுவலர் குறித்த விவரங்கள்.

அரசின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்கள் மற்றும் வள ஆதாரங்களை திசை திருப்பக்கூடிய தகவல்களைத் தவிர, ஏனைய தகவல்களை, அதற்குரிய சாதாரண படிவத்திலேயே வழங்கலாம்.

கட்டணங்கள் :

தகவல் உரிமை சட்டம் 2005, நியாயமான விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறது. மேலும், தகவல் அளிப்பதற்கான கூடுதலான கட்டணம் தேவைப்பட்டால், எவ்வாறு அத்தொகைக் கணக்கிடப்பட்டு அக்கட்டணம் எட்டப்பட்டது என்று சுட்டிக்காட்டி, எழுத்துருவில் விண்ணப்பத்தாரருக்கு தெரிவிக்கப் படுதல் வேண்டும்.

விண்ணப்பதாரர் பொதுத்தகவல் அலுவலரால் விதிக்கப்பட்ட கட்டண நிர்ணய முடிவின் மீது, உரிய மேல்முறையீட்டு துறையிடம் மறுஆய்வு செய்யுமாறு நாடலாம்.

வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்பவருக்கு, கட்டணம் விதிக்கப்படுதல் கூடாது.

பொதுத்தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவலை அளிக்கத் தவறினால், கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு அத்தகவலை வழங்குதல் வேண்டும்.

இச்சட்டத்தின் 6(1) பிரிவின்படி தகவலுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகத்தால் குறித்துரைக்கப்பட்ட கணக்குத் தலைப்பில், ரூபாய் 10/- (ரூபாய் பத்து மட்டும்) ரொக்கமாகவோ, வரைவு காசோலையாகவோ, கருவூல சீட்டு அல்லது வங்கி வரைவோலையாகவோ சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும்.

இச்சட்டத்தின்7(1)ம் பிரிவின்படி தகவல் வழங்குவதற்காக அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களால் பின்வரும் விகிதங்களில் குறித்துரைக்கப்பட்டவாறு கணக்குத்தலைப்பில் சரியான ரொக்க ரசீது வரைவு காசோலை, வங்கி காசோலை வழியே விதிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்படுதல் வேண்டும்.

அவை முறையே:-

1. A4, A3 அளவுத்தாளில் எழுதி உருவாக்கப்பட்ட அல்லது படியெடுக்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூபாய் இரண்டு;

2. பெரிய அளவுத் தாளுக்கான படி ஒன்றின் உள்ளபடியான கட்டணம், செலவுத்தொகை;

3. மாதிரிகள் அல்லது மாதிரி படிவங்களுக்கான உள்ள செலவு அல்லது விலை;

4. பதிவுருக்களை ஆய்வு செய்வதற்கு, முதல் ஒரு மணிநேரத்திற்கு, கட்டணம் எதுவும் இல்லை. அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு அல்லது அதன் பின்னம் ரூபாய் ஐந்து கட்டணம் ஆகும்.

இச்சட்டத்தின் 7(5)ம் பிரிவின்படி தகவல் வழங்குவதற்காக, அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களால், பின்வரும் விகிதங்களில் குறித்துரைக்கட்டவாறு கணக்குத்தலைப்பில் சரியான ரொக்க ரசீது, வரைவு காசோலை, வங்கி காசோலை வழியே விதிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்படுதல் வேண்டும். அவை முறையே,

1. மின்னணு வழியிலான டிஸ்கெட்/பிளாப்பி ஒன்றிற்கு ரூபாய் ஐந்து கட்டணம்;

2. அச்சடித்த படிவத்தில் தகவல் வழங்குகைக்கு வெளியீட்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட விலை.

(அரசு ஆணை (நிலை) எண்.989, பொதுத் துறை, நாள் 07.10.2005)

(அரசு ஆணை (நிலை) எண்.1012, பொதுத் துறை, நாள் 20.09.2006)

9. தகவலினை வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பு (சட்டப்பிரிவு 8)

குடிமக்கள் எவருக்கும் கீழ்க்கண்ட தகவலை அளிக்கத் தேவையில்லை:-

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, படைத்திறன், அறிவியல் அல்லது பொருளாதாரம் சார்ந்த நலன்கள், அயல் நாட்டுடன் கொண்டுள்ள உறவை பாதிக்கப்படும் அல்லது குற்றச் செயலினை தூண்டுதலாக அமையும் தகவல்கள்;

நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தால் வெளிப்படையாக தடைசெய்யப்பட்ட தகவல்கள் அல்லது அந்த தகவலை வெளிப்படுத்துவதால் நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையக்கூடிய தகவல்கள்;

நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற சிறப்புரிமையை மீறுவதாக அமையும் தகவல்கள்;

எந்த ஒரு தகவலானது பொது மக்களின் பேரளவு நலனுக்கு அவசியமானது என்று அரசு கருதுகிறதோ அந்தத் தகவல் மற்றும் மூன்றாம் தரப்பினரின் போட்டி நிலைக்கு தீங்காகும் தகவலான வணிக நம்பகத்தன்மை, வியாபார ரகசியங்கள், அறிவார்ந்த சொத்துடமை உள்ளிட்ட தகவல்கள்;
 
பொது மக்களின் நலனுக்கு தேவையானது என்று அரசால் கருதப்படுகிற, தனி நபர் ஒருவருக்கு கிடைத்த நம்பகத்தன்மை உடைய தகவல்கள்;

அயல் நாட்டு அரசிடமிருந்து பெறப்பட்ட ரகசிய தகவல்கள்;

நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் மற்றும் சட்டத்தினை செயல்படுத்துவதற்காகவும் கிடைத்த மூலம் மற்றும் உதவி ஆதாரங்களை இனங்காட்டக்கூடிய தகவல்கள்;

தனி நபர் உயிர் மற்றும் உடலுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தகவல்கள்;

வெளிப்படுத்தப்பட்டால், புலனாய்வு நடவடிக்கைக்கு அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு தடையாயிருக்கும் அல்லது குற்ற வழக்கு தொடர்தலைத் தடை செய்திடும் தகவல்கள்;

அமைச்சர்கள், குழு செயலாளர்கள் மற்றும் பிற அலுவலர்களின் கலந்தாய்வுகள் குறித்த பதிவுருக்கள் உள்ளிட்ட அமைச்சரவை ஆவணங்கள். எனினும் அமைச்சர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதற்கான காரணங்கள், எதன் அடிப்படையில் அம்முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை, முடிவு எடுக்கப்பட்ட பின்னர், பொது மக்களுக்கு தெரியப்படுத்தலாம்;

ஒரு தகவலை வெளியிடுவதால் உள்ள நலன், பாதுகாக்கப்பட்ட நலன்களுக்கான தீங்கை விட மிகுந்து இருக்குமிடத்து, 1923 ம் ஆண்டு அலுவலக சார் ரகசிய சட்டம் 1923 (9/1923) ல் அல்லது தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 8 ன் படி அனுமதிக்கத்தக்க விலக்களிப்புகள் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும் தகவலை அணுகி பெற அனுமதிக்கலாம்;

ஒரு விண்ணப்பம் செய்யப்பட்ட தேதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம், நிகழ்வு அல்லது நடந்த காரியம் தொடர்பான தகவல்கள், தகவல் சட்டம் 2005 பிரிவு 8 உட்பிரிவு 1 (a, c and I) ல் வகைகளுக்கு உட்பட்டு, கோரிக்கையினை செய்த நபருக்கு தகவல் அளிக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழ் வகை செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு முறைகளுக்கு உட்பட்டு, அந்த 20 ஆண்டு
காலத்தினை கணக்கிடுவதில் பிரச்சனை எழும் பட்சத்தில், மத்திய அரசின் முடிவே இறுதியானதாகும்;

தகவலை பெறுவதற்கான கோரிக்கையானது, அரசு அல்லாத தனி நபரிடமிருந்து வருகிற பதிப்புரிமையை மீறுவதாக இருக்குமிடத்து, இச்சட்டம் 8ம் பிரிவின் வகை முறைகளுக்கு பாதிப்பின்றி, அக்கோரிக்கையை நிராகரிக்கலாம்.

தகவல் வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட பகுதியிலிருந்து பிரித்தளித்தல் (சட்டப்பிரிவு 10)

தகவலினை பெறுவதற்கான கோரிக்கையானது, வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப் பட்டிருக்கிற தகவலுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்ற காரணத்தால் நிராகரிக்குமிடத்து, வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பட்ட பகுதியிலிருந்து, நியாயமான முறையில் பிரித்தளிக்கப்படக் கூடிய தகவல் எதுவும் அளிக்கலாம். அவ்வாறு வழங்குமிடத்து, பொதுத்தகவல் அலுவலர், விண்ணப்பதாரருக்குக் கீழ்க்கண்ட அறிவிப்பை அளித்தல் வேண்டும்

1. வெளியிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட தகவலைக் கொண்டுள்ள பதிவுருவிலிருந்து பிரித்தெடுத்தபின், கோரப்பட்ட பதிவுருவின் பகுதி மட்டுமே அளிக்கப்படுகிறது என்றும்;

2. பொருண்மை பற்றிய எந்த முடிவையும் உள்ளடங்கலாக, அந்த முடிவுகளுக்கு ஆதாரமான பொருளைக் குறிப்பிட்டு, அந்த முடிவிற்கான காரணங்கள்;

3. அந்த முடிவினை அளிக்கின்ற நபரின் பெயர் மற்றும் பதவியின் பெயர்;

4. அவரால் கணக்கிடப்பட்ட கட்டணங்களின் விவரங்களையும், விண்ணப்பதாரர் வைப்பீடு செய்யுமாறு கோரப்பட்ட தொகையையும் தெரிவித்தல்;

5. தகவலின் ஒரு பகுதியை வெளியிடாமை தொடர்பான முடிவை, மறு ஆய்வு செய்வதற்கு, பணி மூப்பு அலுவலர் அல்லது மாநில தகவல் ஆணையம் பற்றிய விவரங்கள், கட்டணத்தொகை, தகவல் பெறும் முறை மற்றும் காலவரம்பு ஆகியவற்றைத் தெரிவித்தல் வேண்டும்.

விலக்களிக்கப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்கள் :

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு மக்கள் தகவல் பெற அணுகுவதிலிருந்து விலக்களித்துள்ளது.

அவை முறையே:-

1. தனிப்பிரிவு-குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி.

2. கியூ பிரிவு - குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி.

3. தனிப்பிரிவு

4. பாதுகாப்புப்பிரிவு

5. கோர்செல் சி.ஐ.டி.

6. கருக்கெழுத்து அமைவனம்

7. மாவட்டத்தனிப்பிரிவுகள்

8. காவல்துறை ஆணையரப்புலனாய்வுப்பிரிவுகள்

9. தனிப்புலனாய்வு செல்கள்

10. ஆணையரகங்கள்/மாவட்டங்களிலுள்ள

11. நக்சலைட்டு தனிப்பிரிவு

12. குற்றப்பிரிவு சி.ஐ.டி.

13. தனிப்புலனாய்வுக்குழு

14. திரைத்திருட்டு பிரிவு

15. போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு அமைவனம்

16. கொள்கைக்கெதிர் பிரிவு

17. பொருளாதாரக் குற்றச்செயல்கள் சரகம் I & II

18. சிலைத்திருட்டுத் தடுப்புச் சரகம்

19. சிசிஐ டபிள்யூ குற்றப்புலனாய்வுத்துறை

20. குடிமைப்பொருள் வழங்கல்/குற்றப்புலனாய்வுத்துறை)

21. கணினி குற்றப்பிரிவு

22. மாவட்டக்குற்றம் - மாநகரக்குற்றப்பிரிவுகள்

23. சிறப்புப்பணிப்படை

24. பயிற்சிப்படை மற்றும் பள்ளி

25. கடலோரக் காவல்படை

26. விரல் ரேகைப்பிரிவு

27. காவல் துறை வானொலிப்பிரிவு

28. உள் (காவல் VI)துறை

29. உள் (கடும் மந்தணம்) துறை

30. பொது (கடும் மந்தணம்) புலனாய்வு மற்றும் ஒடுங்கமைவனம்.

(அரசு ஆணை (நிலை) எண்கள்.1042, 1043, 1044 மற்றும் 1045, பொதுத் துறை, நாள் 14.10.2005)

மூன்றாம் தரப்பினரின் தகவல் :

பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடையதாக அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட அல்லது மூன்றாம் தரப்பினரால் ரகசியம் எனக் கருதப்படுகிற தகவல்கள், பதிவுருக்கள் அதன் பகுதிகள் எதனையும் வெளியிடுமிடத்து, அக்கோரிக்கை பெற்ற ஐந்து நாட்களுக்குள், அக்கோரிக்கையினைப் பற்றியும், அந்த தகவலை வெளியிட விரும்புகிறாரா என்றும் மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவிலான அறிவிப்பை அளிக்க வேண்டும்.

அதனுடன் மேற்படி தகவலை வெளியிட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது பற்றி எழுத்து வடிவிலோ அல்லது வாய்மொழியாகவோ தனது கருத்தினை அனுப்புமாறு மூன்றாம் தரப்பினரைக் கோருதல் வேண்டும்.

மேலும், அந்த தகவலை வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கும்போது, மூன்றாம் தரப்பினரால் அளிக்கப்பட்ட கருத்தினை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

மேற்படி அறிவிப்பு சார்பு செய்யுமிடத்து, அந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள், அந்தத் தகவலை வெளியிடுவதற்கு எதிராக முறையீடு செய்வதற்கு மூன்றாம் தரப்பினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடைய தகவல்களை வெளியிடுவது குறித்து முடிவு எடுத்து, அம்முடிவைப் பற்றிய அறிவிப்பை, மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவில் அளிக்க வேண்டும். அதனுடன் அம்முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் உரிமையையும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும்.

மாநில தகவல் ஆணையத்தின் கடமைகள் மற்றும் அதிகாரங்கள் :

இச்சட்டத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்காக, பிரிவுகள் 12(1)-15(1) மைய மாநில தகவல் ஆணையங்கள் தனித்தியங்கும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் பெறும் உரிமைச்சட்டம் பிரிவு 15-ன் படி, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமை ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. எந்த ஒரு நபரிடமிருந்தும் கீழ்க்காணும் நிலைமைகளில் புகார்களைப் பெற வேண்டியது, மாநில தலைமைத் தகவல் ஆணையத்தின் கடமையாகும்:-

1. பொதுத் தகவல் அலுவலர் நியமிக்கப்படாததால் தகவல் கோரி விண்ணப்பிக்க இயலாத நிலைமை;

2. கோரப்பட்ட தகவல்கள் மறுக்கப்பட்ட நிலைமை;

3. தகவல் கோரி விண்ணப்பித்தும் அதற்குரிய காலக்கெடு கடந்த பின்பும் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலைமை;

4. நிர்ணயிக்கப்பட்ட கூடுதல்கட்டணம் நியாயமற்றதாக ஒருவர் கருதும் நிலைமை;

5. தனக்கு வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதல்ல என்றோ, தவறான தகவல்கள் வழங்கப்பட்டன என்றோ ஒருவர் நினைக்கும் நிலைமை.

இச்சட்டம் பிரிவு 18 ன்கீழ் ஆணையம் விசாரணை தொடங்கலாம். நியாயமான காரணங்களின்கீழ், உரிய விசாரணைக்கு உத்தரவிடுதல் வேண்டும். இப்பிரிவின் படி, ஒரு கோரிக்கையை விசாரிக்கையில், குடிமையியல் நீதிமன்றங்களுக்கு நிகரான அதிகாரங்கள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவை முறையே:-

1. நபர்களின் வருகைக்கு அழைப்பாணை அனுப்பி வலிந்து செயல்படுத்துதல்; வாய்மொழி அல்லது எழுத்து பூர்வமான சாட்சியத்தை கொடுக்கவும் மற்றும் ஆவணங்களையும், பொருள்களையும் முன்னிலைப்படுத்த கட்டாயப்படுத்துதல்;

2. ஆவணங்களை கண்டறிந்து ஆய்வு செய்திட ஆணையிடுதல்;

3. பிரமாணப்பத்திரங்கள் மூலம் சாட்சியங்கள் பெறுதல்;

4. சாட்சிகள் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக அழைப்பாணை பிறப்பித்தல்;

5. குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருள் குறித்து;
 
6. இச்சட்டத்தின்படி, அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களிலுள்ள பதிவுருக்கள் எதனையும் ஆய்வு செய்யலாம் மற்றும் அத்தகைய பதிவுருக்களை எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படலாகாது.

கீழ்க்கண்ட அறிவுப்புகள் மூலம் ஆணையம் தனது முடிவுகளை இச்சட்டத்தின் பிரிவு 19(8) வகைமுறைகளுக்கு உட்பட்டு, சம்மந்தப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவை முறையே,

1. குறிப்பிட்ட வடிவத்தில் தகவலை வேண்டுமிடத்து, அவற்றினை அவ்வடிவத்திலேயே அணுகிப் பெறுதல் ;

2. நேர்விற்கேற்ப, பொது தகவல் அலுவலர் ஒருவரை நியமித்தல் ;

3. குறித்த சில தகவலை அல்லது தகவலின் வகைகளை வெளியிடுதல் ;

4. பதிவுருக்களைப் பராமரித்தல், நிர்வகித்தல் மற்றும் அழிப்பதற்கு தொடர்புடைய நடைமுறைகளில், அவசியமான மாற்றங்களைச் செய்தல் ;

5. அலுவலர்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டம் மீதான பயிற்சிக்கு வகை செய்தலை மேம்படுத்துதல் ;

6. ஆண்டறிக்கை தயாரித்து அளித்தல்.

மேலும் ஆணையத்திற்கு தனது முடிவின் மீது கீழ்க்கண்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன :-

1. இழப்பு அல்லது பாதிப்பு உண்டாக்கிய பிற கேடு எதுவாகிலும், முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்குமாறு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களை வேண்டுறுத்தும் அதிகாரம் ;

2. இச்சட்டத்தின்படி வகைசெய்யப்பட்ட தண்டனைகளில் எதனையும் விதிக்கும் அதிகாரம் ;

3. விண்ணப்பத்தினை ஏற்கவோ, மறுக்கவோ உண்டான அதிகாரம்,

இச்சட்டப்பிரிவு 19 (9)ன்படி, ஆணையம், மேல்முறையீட்டாளருக்கும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களுக்கும், தனது முடிவைக் குறித்த அறிவிப்பினைக் கொடுத்தல் வேண்டும்.
அதனுடன் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை பற்றியும் கொடுத்தல் வேண்டும். பிரிவு 19(10)-ன்படி வகுத்துரைக்கப்பட்ட நடைமுறைக்கிணங்க, ஆணையம் மேல்முறையீட்டினை
முடிவு செய்தல் வேண்டும்.

மேல்முறையீடு (பிரிவு (19)

முதல் மேல்முறையீடு :

குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள், கோரிக்கையின் மீது முடிவு பெற்றிராத அல்லது பொது தகவல் அலுவலர் முடிவின் மீது அதிருப்தி அடைந்த எவரும், அத்தகைய கால அளவு முடிவு பெற்றதிலிருந்தோ அல்லது அத்தகைய முடிவினை பெற்றதிலிருந்தோ, 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட துறையில், குறிப்பிட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு மேல் மட்டத்திலுள்ள ஒரு முதுநிலை அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யவேண்டும். எனினும் தவிர்க்க இயலாத காரணத்தினால் தாமதமாக முறையீடு செய்தால், விசாரணை அலுவலர் அந்த முறையீட்டை விசாரணைக்கு ஏற்கலாம். இதனை விசாரணை அலுவலர் முடிவு செய்வார்.

இச்சட்டத்தின் பிரிவு 11ன்படி, மூன்றாம் தரப்பினர் தகவலை வெளிப்படுத்துவதற்கு, பொது தகவல் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்யுமிடத்து, ஆணையின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், சம்மந்தப்பட்ட மூன்றாம் தரப்பினர் மேல்முறையீடு செய்து கொளல் வேண்டும்.

இரண்டாம் மேல் முறையீடு :

முதல் மேல் முறையீட்டின் மீது முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள் அந்த முடிவுக்கு எதிராக மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்ய உரிமையுண்டு. மேலும் தாமதத்திற்கு உரிய காரணம் தெரிவிக்கப்பட்டால், 90 நாட்கள் கழிந்த பின்னரும் மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளலாம்.

முதல் மேல் முறையீட்டில் மூன்றாம் தரப்பினரின் தகவல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு எதிராக பொது தகவல் அலுவலரின் முடிவு இருக்கும் பட்சத்தில், மாநில தகவல் ஆணையம் மூன்றாம் தரப்பினருக்கு கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பளித்தல் வேண்டும்.

இச்சட்டப்பிரிவு 19 உட்பிரிவு (1) மற்றும் (2)ன் படியான மேல்முறையீடானது, எழுதி பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக, மேல்முறையீடு பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் அல்லது அது தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மொத்தம் 45 நாட்களுக்கு மேற்படாது, முடிவு செய்யப்படுதல் வேண்டும்.

தகவல் ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்துவதாக இருக்கும்.

மேல்முறையீட்டு மாதிரி விண்ணப்ப படிவம்

பெறுநர்

( தகுதியுடைய அதிகாரி பற்றி குறிப்பிடப்படவேண்டும்)

1) விண்ணப்பதாரரின் முழுப்பெயர் :

2) முகவரி :

3) வேண்டப்படும் தகவல் விவரங்கள் :

4) வேண்டப்படும் தீர்வு :

5) தகவல் தொடர்புடைய துறை அல்லது அலுவலரின் பெயர்:

6) தகவலின் பொருண்மை :

7) தகவல் தொடர்புடைய பகுதி/ஆண்டு/இடம் :

8) தகவல் வேண்டப்படுவதின் நோக்கம் :

இடம் :

நாள் :

விண்ணப்பதாரரின் ஒப்பம்

தண்டனைகள் (பிரிவு-20)

மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும் தீர்மானிக்கும்போது:

1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ;

2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ;

3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன் மறுக்குமிடத்தும் ;

4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ;

5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும் ;

அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும்.

எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.

பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும்.

மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.

by Swathi   on 25 Oct 2015  89 Comments
Tags: Thagaval Perum Urimai Sattam   RTI   RTI Guide Tamil   How to Apply RTI   RTI Application format Tamil   RTI Act Tamil   தகவல் பெரும் உரிமைச் சட்டம்  
 தொடர்புடையவை-Related Articles
முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது
தகவல் பெரும் உரிமைச் சட்டம் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !! தகவல் பெரும் உரிமைச் சட்டம் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!
லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !! லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!
கருத்துகள்
16-Oct-2020 14:19:17 தனசேகர் said : Report Abuse
ஜயா, வணக்கம் சாதி சான்றிதல் வழங்க தொடா்பாக அருந்ததியா் சக்கிலியன் .தகவல்
 
10-Aug-2020 03:15:16 guru said : Report Abuse
ayya nan madurai T.vadipatti il sanampatti(kurangutopu)gramam nan eangaluku saida nala thita panigalai arindu kolla virumbugiran enna sayya vandum
 
17-Feb-2020 14:54:08 ஏழுமலை சு said : Report Abuse
ஐயா புறம்போக்கு நிலத்தில் மின் இணைப்பு பெருவதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?
 
14-Jan-2020 09:16:52 காத்தமுத்து said : Report Abuse

ஜய..வணக்கம்..எனது..மகன்..வயது...26......காணவில்லை... 20...6..2017..அன்று.இரவு...கின்டியில்...உள்ள...தனியார்.. கம்பெனியில்.. வேலைக்.. சென்றான்..வீட்டுற்கு..வர.. அருகில்,,உள்ள..காவல்.துறை... முதல்... தகவல்..அறிக்கை..பெற்றேன்... மீண்டு.......கமிஷ்ணர்...தாக்கல்...பதிவுசெய்தேன்.... மீண்டும்...ஜகோர்ட்டில்...ஆல்கோள்ளவுமணு.... தாக்கல்..செய்தேன்.....எனக்கு..........இதுவரை.

.எந்த..தகவல்லும்..14..01...2020இன்று..தெரியவில்லை... இதர்க்கு..மேல்.....நான்..எங்ககு... முறைஇடவேண்டும்..

இதர்க்கு..தங்கள்...உதவி.. செய்யுமாறு..தாழ்மையுடன்..கேட்டுகோகிறான்..

காத்தமுத்து ..

 
13-Jan-2020 06:05:51 Govindarajan said : Report Abuse
ஹாய் சார் எங்க ஊர் பேரு சிவகாசி அங்க ரயில்வே மேம்பாலம் கட்டி தர்றோம்னு பல வருசமா ஏமாத்துறாங்க வெறும் அடிக்கல் மட்டும் தான் நட்டு வச்சாங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்லை இதுக்கு என்ன பண்ணலாம் எப்ப தான் கட்டுவாங்க எப்படி தெரிஞ்சுக்குறது சொல்லுங்க ப்ளீஸ்.
 
11-Dec-2019 07:12:03 JEEVA said : Report Abuse
ஐயா நான் ஆவின் நிறுவனத்தில் ஒரு பணிக்காக நேர்முக தேர்வுக்கும் சென்று வந்துள்ளேன். தற்போது அதற்கு ஆள் எடுத்து விட்டார்கள். நான் நேர்முக தேர்வில் மிகவும் நன்றாக பதில் அளித்து இருந்தேன். இருந்தும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இதனை தகவல் அறியும் சட்டத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாமா.
 
21-Nov-2019 03:24:42 Vijay said : Report Abuse
சார் என் பெயர் விஜய் நான் நிறுவனத்ததில் நான்கு வருடம் வேலை பார்கிறேன் பணி நிரந்தரம் செய்யவில்லை இரண்டு வருடம் டைனிங் ஒன்று வருடம் ப்ரோபோசன் முடிந்தும் இரண்டுவருடம் ஆகிவிட்டது நிறுவன எந்த ஒரு பதில் சொல்லவில்லை௧. 2014To2019 ஆகிவிட்டது நீங்க ஒரு தீர்வு சொல்லுங்க
 
12-Nov-2019 07:17:00 Tamizhselvi.p said : Report Abuse
Vanakkam sir, Nan oru alternative therapist enaku Cms Ed course unmaiya iruka idhai padikalama Rural areas la clinic nadathalamnu solranga it is approved or not pls guide me sir, W.H.O is authorized or not please help me sir
 
07-Oct-2019 07:52:09 A SHANMUGARAJ said : Report Abuse
என் பெயர் அ ஷண்முகராஜ் , நான் சென்னை ல் வசித்து வருகிறேன். சென்னை ல் தனியார் நிறுவனத்தி ல் பணிபுரிகிறேன் . சமீபத்தில் நான் கல்லீரல் மட்டுறு அறுவை சிகிச்சையை செய்து கொண்டேன் . இதற்க்காக நான் 28 லக்ச்சங்கள் வரை செலவு செய்தேன் . நான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் ஜாதி யை சேர்த்தவன். ஆதி திராவிடர் நலத்துறை ல் இருந்து நான் செலவு செய்த பணத்தை திரும்ப பெறுவதற்கு யாதேனும் வழிகள் உள்ளதா .அப்படி இருந்தல் எவ்வாறு பெறுவது .
 
26-Sep-2019 02:40:49 jesuraj said : Report Abuse
Dr .முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவி திட்டத்தின்கீழ் பெறப்படும் உதவி தொகை முதல் குழந்தையாக இருந்தால் முழுத்தொகையில் பதியே வாங்கியில் ஏறுகிறது. இரண்டாவது குழந்தை என்றால் அதுவும் கிடைப்பது இல்லை. இதற்கென பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்டால் பதில் இல்லை.தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Dr .முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவி திட்டத்தின்கீழ் பெரும் உதவித்தொகை :ரூபாய் 18 ,௦௦௦ இரண்டாவது குழந்தைக்கும் அதே தொகைதான் .
 
25-Sep-2019 11:55:34 sivachandrika said : Report Abuse
Respected sir/ mam I am b.sc (nursing) graduate. I love to library job that means librarian, how to apply librarian in government library ! What are all the qualifications want that job. Please briefly explain. Any other qualifications you want then what are all jobs available in library central government or state government jobs
 
03-Jul-2019 08:56:55 த.ஜெகஜீவன்ராம் said : Report Abuse
ஐயா நான் மதுபான கடை அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் பெட்டி கடை நடத்தி வருகிறேன் நான் கடையில் வாட்டர் பாட்டில் கப் போன்ற பெருட்கள் விற்கலாமா அருகில் மதுபான கடை இருப்பதால் எவ்வளவு தூரத்தில் விற்கலாம்
 
17-Jun-2019 16:53:06 முருகேசன் எஸ் said : Thank you
நான் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றேன் தற்பொழுது சார்ஜ் மெமோ - கழகநிலை ஆணை விதி 24(14) மற்றும் 24(40) இல் கூறப்பட்டுள்ள விதிகள் என்ன? என்று சார் தயவு கூர்ந்து கொஞ்சம் விரைவாக கூறுங்கள் இது தொடர்பாக வலைத்தளத்தில் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (ஸ்டாண்டிங் ஆர்டர் ) கழகநிலை ஆணை விதிகள் தமிழில் கிடைக்குமா?
 
30-May-2019 12:14:42 Balamurugan said : Report Abuse
ஐயா வணக்கம் . RTE scheem ல் படிக்கும் பிள்ளை களுக்கு தனியார் பள்ளி விதிக்கும் கட்டணம் எவ்வளவு என தெரிந்து கொள்ள முடியுமா ( 1 ம் வகுப்பு )
 
28-Apr-2019 10:20:04 கே.பாலா said : Report Abuse
அய்யா , எங்கள் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள கடையில்தடை செய்யப்பட்ட பான், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் .அவர்கள் எனக்கு CSR நகல் தரவில்லை . நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .....தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 கீழ் தகவல் கேட்டேன் 30 நாட்கள் ஆகியும் தகவல் கிடைக்கவில்லை . மேல்முறையிடு செய்யலாமா ?
 
19-Mar-2019 05:19:45 Raja kumaran said : Report Abuse
Sir எங்கள் குடும்ப சொத்து மண்ணை எங்கள் அனுமதி இல்லாமல் poi pathiram pathuenthu வித்துட்டாங்க அதை எப்படி திருப்ப peruvathu எங்க பூகார் குடுப்பது
 
12-Mar-2019 07:30:50 Vijay Bharath said : Report Abuse
Sir Engaloda property land document bank la vechurukanga, adhoda xerox copy venum.andha document epdiyavdhu vaangi kudunga sir.illenna andha document vaanguradhukku enna procedure sir??
 
08-Feb-2019 06:59:09 C. SUBA said : Report Abuse
Respect sir, I'm c.suba ( reg no:010007278) I wrote the exam for TamilNadu approved schools and vigilance service in 25.02.2017, your send call letter on 26.05.2017. It's while sending the certificate for candidates I will already posted the all certificate but know No results for me. kindly inform my results. Thanking you!
 
22-Jan-2019 09:06:28 Basheer said : Report Abuse
ஐயா எனது மகள் டிப்ளமோ சிவில் இறுதி ஆண்டு படித்து வருகிகிறாள் இதற்கு மேல் பி எ ஆங்கிலச் அல்லது அரபிக் படிக்கும் எண்ணம் உள்ளது டென்த் முடித்து டிப்ளமோ ஷைகுகிறாள் டிகிரி படிக்க வாய்ப்பு உள்ளதா அதற்கண வைப்புகள் உள்ளதா உடனடியாக தெரிவிக்கவும் நன்றி
 
11-Dec-2018 14:00:59 Thanikachalam, said : Report Abuse
வாழ்த்துகள் ...
 
02-Dec-2018 01:58:04 Girivasulu m said : Report Abuse
ஐயா நான் கிரு‌ஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி கிராம் எங்களுக்கு நிலம் உள்ளது நாங்கள் எங்க குடும்ப சூழ்நிலைக்காக எங்கள் நிலத்தை வேறொரு நபருக்கு விற்க சென்றோம் அப்பொழுது அதிகாரிகள் தெரிவிக்கையில் ஆதிதிராவிட நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலம் என்று கூறியிருக்கிறார் இந்த நிபந்தனைகள் எத்தனை நாட்கள் நீடிக்கும் அதை எப்படி மாற்றுவது தகவல் வேண்டும் ஐயா
 
26-Nov-2018 07:21:04 karuppiahP said : Report Abuse
சார், எங்க தாத்தா செthதுக்கு உரிய ஆவணங்கள் அனைத்தும் எனது பெரியப்பாவிடம் உள்ளது அந்த ஆவணங்களின் கோப்பி எனக்கு வாங்க என்ன பண்ண வேண்டும் வழி கூறுங்கள் .
 
14-Nov-2018 12:43:26 பெருமாள் said : Report Abuse
அய்யா எனது பெயர் பெருமாள் எனது தந்தை நீதி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் அவர் இறந்த பின்பு அவரது ஓய்வு ஊதிய பணத்தை எனது தாயார் பெற்று வந்தார் அவரும் என் தந்தையர் இறந்த சில மாதங்களில் இறந்து விட்டார் இப்பொழுது அந்த ஓய்வு ஊதிய பணம் வருமா? நான் ஒரு மாற்றுதிறனாளி என் தந்தையின் ஓய்வு ஊதிய பணம் எனக்கு கிடைக்குமா தயவு செய்து எனக்கு சரியான தகவல் தாருங்கள் நன் மிகவும் வறுமையில் வாடுகிறேன்
 
26-Oct-2018 09:08:04 mahendran said : Report Abuse
ஐயா வணக்கம் எனது தந்தை இறந்துவிட்டார். வாரிசு சான்றிதழ் வாங்க பதிவு செய்தேன். கிராம அலுவலர் மற்றும் ஆய்வாளர் சரி செய்து தாலுகா அலுவலகம் அனுப்பிவைத்தனர். அங்கு எனது ஆச்சி அதாவது எனது அப்பாவின் தாயார் இறப்பு சான்றிதழ் வேண்டும் என்று சொன்னார்கள் அதற்க்கு அவர்கள் இறந்து இருபத்தி மூன்று ஆண்டுகள் ஆகிறது. அப்போது பதியவும் இல்லை. இப்போது நோட்டரி வக்கீலிடம் வாங்கி வந்து கொடுத்தோம் அது செல்லாது என்று சொல்லிவிட்டாரார்கள். பின்பு நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரிடம் பதியவில்லை என்று சான்றுதல் வாங்க சொல்லி அனுப்பினார்கள் ஆனால் அவர்கள் தர இயலாது என்று கூறுகிறாரகள். இதற்க்கு வேறு வழி முறைகள் உள்ளதா. இருந்தால் என்னுடைய முகவரிக்கு அனுப்பி வையுங்கள் தயவு செய்து.
 
15-Oct-2018 10:23:09 PAVITHRAN said : Report Abuse
பாண்டிச்சேரில் இந்த காங்கிரஸ் நாராயண சாமீ சார் ஆட்சீல் இது வரை எவ்ளவு செலவு பண்ணிருக்கார்கள் யதற்காலம் பன்னிருக்காங்க கைல் வைத்திருக்கும் இருப்பு தொகை எவ்ளவு
 
08-Oct-2018 06:33:25 வி.பிரியா said : Report Abuse
நான் ராஜாக்கூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் வண்ணார் வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனரா. ஆம் எனில் அவர்கள் எந்த பிரிவின் கீழ் வருவார்கள். மொத்தம் எத்தனை பேர் வசித்து வருகின்றனர்.
 
02-Oct-2018 07:41:43 R .MURALIE said : Report Abuse
சார் நன் ஒரு தனியார் கொம்பனியில் கடந்த 8ஆண்டுகளாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அந்த கொம்பனியில் esi pf போன்ற எந்த சலுகைகள் இல்லை மேலும் 28 நாட்கள் வேலை செய்தல் தான் 1 மாதம் சம்பளம் தருவார்கள் வேலை நேரம் 12 மணிகள் இதை நான் யாரிடம் கேட்க வேண்டும் எப்படி என் உரிமைகளை கேட்க வேண்டும் தயவு செய்து பதிவு செய்ய வேண்டும் என் கொம்பனியில் 35 நபர்கள் வேலை செய்கிறார்கள் அதில் 11 நபர்கள் தமிழ் மற்றவர்கள் ஒரிசா சேர்த்தவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சட்டம் பற்றி தகவல் தெரியப்படுத்தவும்
 
26-Sep-2018 19:00:10 manikandan said : Report Abuse
மின்வாரியத்தில் ஊழியர் தவறு செய்தல் யாரிடம் தகவல் கூறவேண்டும் அதைபற்றி தகவல் வேண்டும்
 
26-Sep-2018 18:49:27 மணிகண்டன் said : Report Abuse
ஐயா எனக்கு( சொத்து சம உரிமை )பற்றி தகவல் வேண்டும். மேலும் மின்வாரியத்தில் இருந்து (த்ரீபாஸ்) மின் இணைப்பு பற்றி தகவல் வேண்டும் ,மின் இணைப்பு விதிமுறைகள் பற்றி தகவல் வேணும் .விரைவாக பதில் கூறுங்கள் ஐயா
 
14-Sep-2018 05:53:14 பிரியா said : Report Abuse
ராஜாக்கூர் கிராமத்தை சார்ந்தவள் எனது ஊரில் புதிரை வண்ணார் வகுப்பை சார்ந்தவர்கள் வசிக்கின்றனரா. ஆமாம் எனில் அவர்கள் எந்த வருடம் முதல் அவர்கள் புதிரை வண்ணார் ஆக உள்ளனர். மொத்தம் எத்தனை பேர் வசிக்கின்றனர். அவர்களுடைய விபரங்கள் தேவைப்படுகின்றன.
 
11-Sep-2018 07:23:04 Muthu said : Report Abuse
எனக்கு தமிழ்நாட்டில் கனரா வங்கியின் வேலை நாட்களில் வங்கியின் மூலமாக RTGS மற்றும் NEFT முறையுள் பணம் எத்தனை மணியில் இருந்து எத்தனை மணிவரை அனுப்ப முடியும் என்ற தகவல் வேண்டும்
 
10-Sep-2018 10:56:55 kathir said : Report Abuse
அய்யா நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா .அரசப்பட்டி கிராமத்தில் vachitthu வருகிறேன் எங்கள் ஊருக்கு ஒரு பொது கிணறு வந்த்ததாக செய்திகள் உலா varukiradhu இது உண்மையா இல்லை பொய்ய என தெரியவேண்டும் . நன்றி இப்படிக்கு வே.கதிர்வேல்
 
03-Sep-2018 17:42:35 k.Rajasankar said : Report Abuse
I am cuddalore district,tittagudi (Taluka),adhamangalam village,606111 Sir, enga villagela irukura lake lands lam ipo akkiramichitu avangaloda own use pandranga,,, antha lake meetaedukaa & thuruvari tharanum ithuku yara contact pannanum sir
 
16-Aug-2018 09:22:01 Dhanalakshmi said : Report Abuse
Respected sir/madam, I want to start a nursery school im residing in perungulathur where should i get the permission and registration for the nursery schooland im fifteen years experienced in that field please furnish me the details. Thanking you
 
16-Aug-2018 08:16:38 ராஜ்குமார் said : Report Abuse
ஐயா வணக்கம் நான் விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி கிராமத்தை சார்ந்தவன் எங்கள் கிராமத்தின் வளர்ச்சி திட்டத்தை பற்றி அறிய விரும்புகிறேன். எங்கள் கிராமத்தின் வரவு செலவுகளை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் இதை பற்றி தெரிந்துகொள்ள யாரை அணுகவேண்டும்
 
16-Aug-2018 07:54:24 Manikandan said : Report Abuse
Oru nabar arasu panieil thavarana community certificate koduthu serthullar. Avar kodutha community certificate nan kana mudiyuma.
 
24-Jul-2018 16:01:31 கார்த்தி ra said : Report Abuse
ஐயா வணக்கம், எனது பெயர்: ரா . கார்த்தி தா/ பெ : ராஜேந்திரன் நான் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம்,மாவளவடி கிராமத்தில் வசித்து வருகிறேன், எங்கள் ஊரில் தனியார் கல் குவாரி நடைபெற்று வருகிறது, இதனால் எங்கள் ஊரில் மக்கள் அதிக சிரமப்படுகிறார்கள் குறிப்பாக (குவாரி நடை பெறுவதால் ஆதீத சத்தம், கர்ப்பிணி பெண்கள் பாதிப்படைகிறார்கள், கால்நடைகள் மேல் கற்கள் விழுகின்றன, அருகில் உள்ள வயல் சேதமடைகின்றன, கிணத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது இதனால் விவசாயம் அழியும் நிலையில் உள்ளது நான் வட்டாச்சியர் அலுவலகத்தில் புகார் செய்தேன் எந்த பலனும் இல்லை அடுத்து அங்கு சொல்வதென்றே தெரியவில்லை தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா. இப்படிக்கு பொது நல உரிமைக்காக போராடும் கார்த்தி ரா
 
24-Jul-2018 06:50:25 Jamuna said : Report Abuse
Sir I complete M. SC., M. Phil.,B. Ed in Maths.also I qualified in set exam. Now I am working as an Assistant professor in Engineering college since 11years. Can I have a chance to get posting in Arts college TRB recruitment
 
23-Jul-2018 07:58:28 M.Mohamed Ali B.A said : Report Abuse
ஐயா . தற்போது வெளி வந்துள்ள அரசு வேலைவாய்ப்பில் ஒரு பகுதியான வணிக வரித்துறை(commercial department) .... இந்த துறையில் அனைத்து சாதி மதம் அடிப்படையில் வேலைவாய்ப்பை பிரிக்கிறீர்கள்... ஏன் முஸ்லிம் சமுதாயம் வேலைவாய்ப்பில் இருந்து ஒதுக்கி உள்ளீர்கள்.... அனைத்து ஊர்களிளும் இப்பபடியே உள்ளது.. .... இதற்கு கண்டிப்பாக பதில் வேண்டும்....
 
12-Jul-2018 07:48:47 ரவி குமார் S said : Report Abuse
மரியாதைக்குரிய ஐயா/அம்மையார் , மாவட்ட ஆள்சேர்ப்பு பணி நிலையம் மதுரை மாவட்டம் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமையகம் அலுவலகத்தில் கடந்த 29 /01 /2018 அன்று நேர்காணலில் கலந்து கொண்டேன். ஆனால் இன்று வரை எந்த தகவலும் தெரிவிக்கபடவில்லை .இதன் விவரம் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
 
01-Jul-2018 10:56:32 Balamuruga said : Report Abuse
Sir na thanjavur district peravurani taluka engal ooru arukil athaloor village irukum veeramakali Amman thiruvizha vara irukirathu Antha kovilil engal vagaiyara kattukutty ambalam vagaiyaravuku mandakapadi ullathu aanal ippothu kovilil poyi kettal illai enru solkirargal engaluku mandakapadi ullathu enkira chertificate kovil nirvakidam iruku athanai engaluku vangi tharumaru kettu kolkiren
 
28-Jun-2018 09:08:58 க.வசந்த் said : Report Abuse
நான் தஞ்சாவூர் பக்கதில் சிறிய கிராமம்.எங்கள் ஊரில் 200 குடும்பங்கள் உள்ளது.அனைவரும் (நத்தம் ) பூர்வீகமாக வாழ்கிறோம்.அரசு 1983ல் Udr பட்டா கொடுத்திருக்கிறது.அதற்க்கு முன்பு 1964ல் கொடுத்துள்ளது.நாங்கள் 1964ல் கொடுத்த பட்டா நகல் எடுக்க எங்கே யாருக்கு மனு கொடுக்க வேண்டும்
 
12-Jun-2018 07:56:08 Vairamani said : Report Abuse
Enathu mama thanudaiya veedu patharathai oru thaniyar niruvanathil vaithullar tharpothu antha niruvanam iyangavillai engu irukirathu enrum thiriyavillai ipoluthu engalukku antha patharam vendum enna seivathu .antha niruvanathil peyarum thiriyavillai patharam vaithu 20 years akirathu pathram pera enna seiya vendum
 
09-Jun-2018 07:33:37 priya said : Report Abuse
respected sir ,நான் ஒரு இலங்கை அகதி ,முகாமில் வசிக்கிறேன் .என் கணவரிடமிருந்து பிரிந்து இருக்கிறேன் .எனது நகைகள் போலீசில் வைத்து என் கணவர் வாங்கி கொடுத்ததாக பொய்யாக தெரிவித்து பாதி நகைகளை கொடுத்தார் .மீதி நகைகளை தர, நான் என்ன செய்யவேண்டும்.போலீஸ் இல்லாத இடத்தில என்னை மிரட்டுகிறார்கள் .போலீசில் வைத்து சேர்ந்து வாழவையுங்கள் என கூறுகிறார்கள் .என் 1 வயது குழந்தைக்கும் பணம் தர மறுக்கிறார்.நங்கள் எங்கள் அம்மா வீட்டில் இருக்கிறோம் கோர்ட்டுக்கு செல்ல செலவுக்கு மிகவும் கஷ்டப்படுகிறோம்.
 
08-Jun-2018 20:57:27 S.sasikumar said : Report Abuse
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், அருகில் நாளாந்த பள்ளி உள்ளது அரசு அறிவித்த கட்டணத்தை விட அதிகமாக வாங்குகின்றனர் பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர் இதை யாரிடம் முறை இடுவது
 
06-Jun-2018 23:32:57 Janakiraman said : Report Abuse
Hi sir I'm using my land 25 years problem last 24 years this guy working to vao this guy change to my land now change to same vao name my land this guy making for forgery that's why I need help me sir I am working Merchant Navy I need help sir. Thanks you Janakiraman
 
05-Jun-2018 08:39:12 R Subramanian said : Report Abuse
ஐயா வணக்கம் எனது அம்மா அங்கன் வாடியில் உதவியாளராக பணிபுரிந்தார் . பணியில் இருக்கும் போது இறந்து விட்டார். அதனால் எனது அம்மாவுக்கு எவ்வளவு பணம் வரும். அது மட்டுமில்லாமல் ஆண் வாரிசுக்கு கருணைஅடிப்படையில் வேலை கிடைக்குமா எவ்வளவு நாளில் கிடைக்கும் இந்த தகவலை வெகு விரைவில் தகவல் அளிக்கும்படி மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிற்றேன்
 
26-May-2018 09:23:43 kavin said : Report Abuse
ஐயா,காவலர் தேர்வு முடிவு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் உடற்கூறு தேர்விற்கான தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எனவே இதன் உண்மை நிலையை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அறிய முடியுமா? பதிலை உடனெ தெறிவியுங்கள்
 
22-May-2018 04:14:44 ரங்கசாமி.பி. said : Report Abuse
இருப்பிட சான்று பெற தேவையான ஆவணங்கள் என்ன? ஆதார் அட்டை நகல் போதுமானதா? பிறப்பு சான்று இனைக்கப்பட வேண்டுமா? சார்
 
04-May-2018 15:55:25 Vijay said : Report Abuse
Marriage loans available in goverment,if anybody know pls share me the details,thanku
 
02-May-2018 09:04:31 Roja said : Report Abuse
We are completed bsc fashion technology and costume designing. We are plan to start a business in textile. Government offer any pervilages for girls?
 
01-May-2018 23:28:53 Manikandan v said : Report Abuse
Sir 10th fail 12th pass and fail emloyement card varudhu sir velaikku pokirarkal sir anaal degree paditha nankal sir oru emloyement card kooda varamaatungudu sir thinam thinam engaluku thittu thaan kidaikkudhu sir exam illa anaal velaiku pokirarkal ethan adipadaiel velaikku pokirarkal enru kooda deriyamattungudhu sir
 
19-Apr-2018 16:39:14 Silvans. Y said : Report Abuse
Dear sir, we have given the application for twowheeler in our munchirai blockoffice .They have given the application received receipt .in the receipt they mentioned one number given date and time 02.02.2018, 11.55am Application was Given by Name: Caroline Deva Shiny .K, w / o Y.Silvans Place: Mukkattuvilai, Thengapattanam po. Kkdist, painkulam panchyat, Thengapattanam village, Now the application was not in Accepted or Rejected level in collectorate, Where is the application? We want to know what is the status? Kindly accept my complaint and take action immediately and reply me as soon as possible. 9489280784
 
14-Apr-2018 09:59:26 usha said : Report Abuse
sir enga veetai 2002 la revenue Department veetala edithu vettanar next 2nd time veetai edithu vettnar veetai edikka one time court order irukkum eppadi two time revision pannuvanga intha thagavall ennakku anupunga sir/madam pls pls entha order la vanthaga theriyanu
 
14-Apr-2018 09:44:27 ராதிகா said : Report Abuse
ஐ யா ;எனது மகள் 17 வயது.12 த்,எக்ஸாம் எலுதவில்லை, கடந்த ஆகஸ்ட் 21, 2017 திங்கள் இரவு,8,30 MANIKKU,KANAVILLAI28 /08 /,2017 நேரில் சென்று விசாரித்த போது,அருகில் குடியிருந்த பெண், அழைத்து சென்று ஒரு வீட்டில் பூட்டி வைத்து அடித்ததும் ஹோமில் விட்டதும் தெரியவந்தது, ஹோமில் என் மீது சிறுவர்கள் வன்கொடுமை என போலீசில் பொய்யாக புகார்கொடுக்கப்பட்ட்டது ,என் மெது பொய் புகார் கொடுத்ததும் என் மகளை திட்டமிட்டுகடத்தியதற்கும் சரியான நீதி கிடைக்க வேண்டும், நன் கூலி வேலை செய்கிறேன் , சரியான வலி காட்டுங்கள்
 
07-Apr-2018 07:21:57 Mathivanan said : Report Abuse
சர் வணக்கம் அரசு வேலையில் இருக்கும் மகன் மற்றும் மருமகள் அரசு பதவியில் இருக்கும் போது (அவரது தாய் பென்ஷன் வாங்குவது சரியா )
 
06-Apr-2018 13:01:09 Mutharasi said : Report Abuse
If the scince students like to join in engineering like EEE or Civil engineering means there is no option due to lack of maths... why the government isnot giving to option to write maths subjects seprate for them to join engineering... Everyone has the dream of Doctor but when they finish plus two then only they judge theirself... But their dream of doctor is broken means that time if they like to join in engineering means the government should provide maths to write and give them chance to enter engineering. I need this answer as soon as Thanking you. Mutharasi
 
03-Apr-2018 06:45:00 கிங்ஸ்லி கிறிஸ்டி said : Report Abuse
அய்யா, தனி ப்ஞ்சாயத்து அமைக்க நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும். தனி பஞ்சாயத்து அமைக்க வழிகளை கூறுங்கள்.
 
23-Mar-2018 10:27:21 rishi said : Report Abuse
மேலூர் மில்லில் இருந்த சந்தன மரம் குறித்து தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் . தற்போது மரம் இல்லை என்று தகவல் வருகிறது. கைத்தறி அலுவலர் தூய்மை செய்த போது தான் காணவில்லை. மேலும் கைத்தறி அலுவலகத்தில் அதிகமாக மோசடி நடக்கிறது இதை தடுக்க என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. இதை பற்றிய விவரம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
14-Mar-2018 15:33:47 Dheena said : Report Abuse
நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அரசு பணிக்காக முன்னால் இராணுவத்தின் வாரிசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு விண்ணப்பித்துள்ளேன் ஆனால் பணி கிடைக்கவில்லை இதற்கு என்ன செய்யவேண்டும்
 
14-Mar-2018 11:31:27 N.பாலசுப்ரமணியன் said : Report Abuse
ஐயா நான்ஒருலாரி ஓட்டுனர் இந்தியா தேசிய நெடுஞ்சாலை சுங்க வரியில் 24 மணிநேரம் செல்ல அனுமதிக்கும் பாஸ் உண்டா? இல்லையா? எனக்கு தகவல் தரும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்....
 
09-Mar-2018 04:55:00 Karthi said : Report Abuse
Nangal kootravu vangilvitu kadanvangi irunthom athai pay panivittom anal pathirathai thara marukerargal. aluvalagathil ketalalatchiamaga pathirathai koorugirargal.ippoluthu nangal Enna செய்வது Indrumalaikul pathirathai koormarru talmaiudan ketukolgirom.
 
05-Mar-2018 14:09:23 Nandhakumar said : Report Abuse
நான் தருமபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டி அருகில் வசித்து வருகிறேன்.. எங்கள் தொகுதி பென்னாகரம்... இந்த தொகுதிக்கு நதி ஒதிக்கீடுகள் மற்றும் சலுகைகள் பற்றி அறிய வேண்டும் இதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அறிய வேண்டும் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விரிவான தகவல்கள் பெற வழி கூறுங்கள்
 
04-Mar-2018 15:51:19 Reshma said : Report Abuse
Sir, Nan counseling moolamaga educational department'il computer instructor haaga appointment anayn. order school la koduthutu sign num Panna piragu than antha school kallar department nu therunjathu.kallar school thani department nu theriula. intha KR department il erunthu educational department ku transfer aaga yethai seiyavayndum nu enaku theriyavillai . Eppadi Nan palli kalvi thuraikku varanum. Ennoda permanent place Krishnagiri.i have 2 children's. One is 3 years and another one is 4 years.i could not work peacefully. my mother-in-law she is 75 years old.my husband working in krishnagiri.i am working Madurai.how to releave from kallar department from palli kalvi department sir.
 
03-Mar-2018 06:31:41 v.mani said : Report Abuse
ஐயா engal urill kalai 6 mani muthal malai 11 mani varai taxmace odikondu irukku yarum ketka al illai pugarum panna mudiya villai anth antha athigarikku pam poguthu anthai thati keetal nan jiel than itharku enga murai edunum sir.engal urukku nallathu nenapavan vmani taxmace idam / peramangalam(post)pulivalam(via)musiri(t.k)trichy(t.k)
 
26-Feb-2018 10:06:49 வை.ஐயப்பன் said : Report Abuse
நான் Indian bank account வைத்து உள்ளேன்,அக்கௌன்ட் லாக்கர் வைப்பார்த்துக்கு manger 3000 எடுத்து கொண்டார்,எனக்கு என் என்று தெரியவிலைல ,எப்படி நான் அறிந்து கொள்ளுவது ? நான் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அக்கௌன்ட் வைத்து உள்ளேன் அக்கௌன்ட் நம்பர் 6574745673
 
23-Feb-2018 18:13:52 விஜய் said : Report Abuse
நாங்கள் CUDDALORE district neyveli township block-4 C.R. QTRS, இல் வசிக்கிரோம் எங்கள் பகுதி அரசு சலுகைகள் மற்றும் உதவிகள் பற்றி அறிய உதவி செய்ய வேண்டி கேட்டுக்கொல்கிரோம்
 
23-Feb-2018 07:01:27 Pravin said : Report Abuse
I need to know all the ward number of valparai. Pincode - 642127 Coimbatore
 
19-Feb-2018 11:52:57 வியாஸ் குமார் said : Report Abuse
முதியோர் உதவித்தொகையை எப்படி பெற வேண்டும்? பணம் கொடுக்கும் அலுவலரை நாம் சந்தித்து பணம் வாங்க வேண்டுமா? அல்லது அலுவலர் நம்மை சந்தித்து பணம் கொடுக்க வேண்டுமா? இதற்கு பதில் வேண்டும் நண்பர்களே!!!!
 
19-Feb-2018 06:06:03 VEERAMANI said : Report Abuse
ஐயா வணக்கம். நான் செட் தேர்வு கணிதத்தில் முடடித்துள்ளேன். தற்பொழுது பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். நான் பி.ஹச்.டி படிக்க விரும்புகிறேன். அதில் தமிழகத்தில் உள்ள டீமுடு பல்கலையில் இதில் சேரலாம்? இதில் சேரக்கூடாது? என்ற தாக்கல் வேண்டும். நான் யூசிஜி க்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பினேன். இது வரைக்கும் பதில் கிடைக்கவில்லை. தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள் ஐயா. நன்றி
 
14-Feb-2018 17:17:28 Bharathi R said : Report Abuse
Vanakam sir . na oru companela work panura last mounth na E S I hospitala leave appla panuna 14 days ana enaku 12 days tha company soina pursentage la mony kdachuthu 2 das varala na ESI senter la katathuku avlo nail leave aduthalum 2 days cut pane tha tharuvom inu soiluranga athu unmaiya
 
31-Jan-2018 05:09:33 mathew said : Report Abuse
Simply saying
 
27-Jan-2018 10:06:40 Mani said : Report Abuse
நான் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற MGR விழா சம்மந்தமான தகவல்பெற வேண்டுமானால் யாருக்கு எழுதி எப்படி பெறுவது
 
25-Jan-2018 13:43:31 Sakthivel.S said : Report Abuse
சார் நான் கடந்த வாரம் Helmet அணியாத காரணத்தால் Traffic Police Rs.200 penalty வாங்கியோதோடு என் Original Driving licence வாங்கிக்கொண்டார்.எனக்கு எப்போது Driving licence திரும்ப கிடைக்கும் என்ற details வேணும்.Shall i ask its? தேங்க்ஸ்
 
25-Jan-2018 13:30:43 பாலாஜி .PS said : Report Abuse
ஐயா வணக்க்ம் நான் தகவல் அறியும் சட்டத்தில் நான் எவ்வாரு பதிவு செய்ய வேண்டும் . தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள்.... இப்படிக்கு.. இந்திய குடிமகன் பாலாஜி.ps
 
24-Jan-2018 08:22:43 PARASURAMAN said : Report Abuse
Sir, I have applied for my father death certificate on village VAO date on 21oct 17 but still now no any action that application (2917/9005/07/827237/0921& dt.29oct17)kindly check and further details.... Thanking you
 
30-Dec-2017 15:26:38 பாலசுப்பிரமணியன் said : Report Abuse
சரியான முகவரி அணுப்பவும்
 
23-Dec-2017 06:01:54 sugadev said : Report Abuse
naa sivaganga (dist) ;ilayangudi(tk) ;kuyavarpalayam village vasithu varukiren. emathu oorin maiyapaguthiel oru pothuvana idam ullathu athai suttri ullavarka antha idathai akkiramapu seithu ullarkal. ithai thaduka ethavathu vazhi ullatha
 
21-Dec-2017 05:31:28 சிவமுருகன் said : Report Abuse
அருமையான பதிவு ..,.,,எனது ஊரில் அதிகமாக ஊழல் நடைபெறுகிறது இச்சட்டத்தின் மூலம் நான் மக்களுக்கு கிடைக்கின்ற சலுகைகள் & கிராம கணக்குகளை பெற முடியுமா .....விண்ணப்பம் ஏதும் உள்ளதா அதை எங்கு வாங்குவது ,,,,தயவுசெய்து கூறவும்,,,,,
 
30-Nov-2017 18:03:29 R. LOKESHBABU said : Report Abuse
Sir eanauku kaval thurail pani puribavarin 10 aam vguppu mathipeanpattiyal matrum avar 10 aam vaguppu thearuvu aludha vinnappitha vinnappa padivam nagal vendum. Rti il vinnappithal eanakku kidikkumaa
 
26-Nov-2017 08:36:52 N.K.CECILIA. said : Report Abuse
நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியை எனது வருமானத்தில் சிரிதளவு என் தாய் தந்தைக்கு செலவிட என் கணவர் மறுக்கிறார் அவர் காவல்துறையில் பணிபுரிகிறார் நான் யாரிடம் முரையிட்டு என் சுதந்திரத்தை பெற வேண்டும் என் தாய் தந்தைக்கு மகன் கிடையாது நாங்கள் மூன்று பெண் பிள்ளைகள்தான் என்வே எங்களை படிக்க வைத்த அவர்களுக்கு நான் எவ்வாறு உதவுவது தயவு செய்து வழி கூறுங்கள்
 
19-Nov-2017 13:42:34 prakash said : Report Abuse
சூப்பர் சார் கிரய பத்திர நகல் பெற முடியுமா ?வழி முறை என்ன ?
 
08-Aug-2017 18:30:07 S.muthu said : Report Abuse
Nan 3 varudangalaha paccs CO op Bank l panipurigiren ennni tharpothu paniku vara vendam endru solgirargal ena karam endru Kura marukirargal enaku uthavavum please
 
08-Jul-2017 23:44:00 sivasakthivel said : Report Abuse
உட்ப்பிரிவு செய்து தனி பட்ட வழங்க கொடுத்த மனுக்கள் எந்தவித பலனும் இல்லை குறைந்தது நான்கு வருட காலங்கள் அலைந்த கொண்டு இருக்கிறேன் யாரிடம் என் குறைகளை கோருவது ன்று தெரியவில்லை எனக்கு உதவி பண்ணுங்கள்
 
18-Jun-2017 08:10:24 வீழிநாதன் A said : Report Abuse
டிப்ளமோ இன் பைன் ஆர்ட்ஸ்
 
18-Jun-2017 08:06:22 வீழிநாதன் A said : Report Abuse
டிப்ளமோ இந்த பைன் ஆர்ட்ஸ் (ஐந்து வருட படிப்பு) 21 08 1991 இல் திருவாரூர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்த்துள்ளேன்,(பதிவு மூப்பில் என்னை பின்னுக்கு தள்ளிவிட்டனர் ),எங்கு, எப்படி, முறையிடுவது
 
15-Jun-2017 03:05:07 elakkiya said : Report Abuse
சார்,எனக்கு தகவல்கள் கொஞ்சம் சொல்லுங்கள் விரைவாக
 
15-Jun-2017 02:53:20 Elakkiua said : Report Abuse
எனக்கு வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் ஐந்து லக்ஷம் தேவை படுகிறது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் நான் நடுத்தர குடும்பத்தை சார்ந்த மாணவி கொஞ்சம்,விரைவாக எனக்கு பதில்,அளிக்கவும் நாங்கள் பேங்க் கில் அணுகியதற்கு சொத்து கேட்கிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும் கொஞ்சம்,விரைவாக பதில் கூறுங்கள்
 
31-Mar-2017 22:12:24 சுரேஷ் R said : Report Abuse
வெரி வெரி குட் தகவல் அறியும் சட்டம் order
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.