நடைமலை பிடித்த சொரிஎயிற்று இடங்கரை ஆழி வலவன் அடர்த்தன போல புன்தலை மேதி புனல்எழ முட்டிய வரிவுடற் செங்கண் வராலுடன் மயங்க உள்கவைத் தூண்டில் உரம்புகுந்து உழக்கும் (5)
நிறைநீர் ஊரர் நெஞ்சகம் பிரிக்கும் பிணிமொழிப் பாணன் உடனுறை நீக்கி நூலொடு துவளும் தோல்திரை உரத்தின் மால்கழித்து அடுத்த நரைமுதிர் தாடிசெய் வெள்ளி குமிழ்த்த வெரூஉக்கண் பார்ப்பான் (10)
கோலுடன் படரும் குறுநகை ஒருவி பூவிலைத் தொழில்மகன் காவல் கைவிட்டு திக்குவிண் படர்நதி திருமதி கயிலை நாமகள் பெருங்கடல் நாற்கோட்டு ஒருத்தல் புண்ணியம் இவைமுதல் வெள்ளுடல் கொடுக்கும் (15)
புகழ்க்கவிப் பாவலர் புணர்ச்சி இன்பகற்றி எல்லாக் கல்வியும் இகழ்ச்சிசெய் கல்வியர் பெருநகைக் கூட்டமும் கழிவுசெய்து இவ்விடை மயக்குறு மாலை மாமகள் எதிர ஒருவழிப் படர்ந்தது என்னத் திருமுகம் (20)
ஆயிரம் எடுத்து வான்வழிப் படர்ந்து மண்ணேழ் உருவி மறியப் பாயும் பெருங்கதத் திருநதி ஒருங்குழி மடங்க ஐம்பகை அடக்கிய அருந்தவ முனிவன் இரந்தன வரத்தால் ஒருசடை இருத்திய (25)
கூடல் பெருமான் குரைகழல் கூறும் செம்மையர் போல கோடா நம்மையும் நோக்கினர் சிறிதுகண் புரிந்தே. (28)
|