308 ஒல்குங் கொடிநுண் ணுசுப்பொசிய வுளருஞ் சுரும்பர் விரும்புமது வுண்டி தெவிட்டி யுவட்டெடுப்ப வூற்றும் பசுந்தே னசும்பூறிப் பில்கு நறுந்தார் குழல்செருகிப் பேதை மாதர் பயின்மறுகு பெரும்பொற் றகடு படுத்திருளின் பிழம்பை மழுக்கி யடிக்கினிதே நல்குங் குணத்தா யினும்புலவி நண்ணு மடவார் சிதறுதல நவமா மணிகள் பரந்துகுறு நடையே யெவருங் கொளக்காணு மல்குஞ் செல்வத் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ மறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ. (1)
309 கூட முயருங் குன்றனதங் கொம்மை முலைக்குப் புறங்கொடுத்த குருமார் பகத்திற் புயத்தினறுங் குஞ்சித் தலத்தி லஞ்சிறைய கீடமிரியப் பகன்முழுதுங் கிள்ளை மொழியா ரலத்தகந்தோய் கிளர்தாட் சிலம்பி னொலியெழுப்பக் கெழுமு மிரவின் மைந்தர்மலர்ப் பீட மருவு மம்மடவார் பெருங்கா ழல்குன் மிசைக்கிடந்து பிறழ்மே கலைபி¢ னொலியெழுப்பிப் பெருகுங் களிப்பிற் ற்ளைத்துவளர் மாட மலியுந் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ மறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ. (2)
310 பண்ணுங் கனியுங் கனிமொழியார் பயின்மே னிலத்திந் திரநீலம் பதித்து விதித்த செய்குன்றப் பரப்பில் வரப்பில் கொழுந்தோடி நண்ணுஞ் சுடரி லறமுழுகி நாடற் கரிதா யுயிர்க்குபிரா நம்மான் றிருக்க ணீபுதைத்த நாளோ வென்று ளயிர்த்துநெடு விண்ணுந் திசையு மிகமயங்கி விரகா னாடி யாய்தோறும் விலகி விலகி வில்லுமிழும் விதத்தா லி·திற் றெனத்தெளியும் வண்ணம் பொலியுந் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ மறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ. (3)
311 கருமால் யானை யனந்தனுளங் கலங்கக் கலக்கி விளையாடுங் கார்க்குண் டகழி கடலெனவக் களிற்றை யினமென் றுளத்துநினைந் திருமா லெழிலிப் படலமவ ணிழிந்து குழிந்த வகடெடுப்ப விரைத்துத் திரைத்த நீர்கொடுவிண் ணேறும் பொழுதவ் விபப்பாகர் பொருமால் களிறென் றதனெருத்திற் பொள்ளென் றேறிப் பொன்னுலகம் புரப்பான் போல்விண் புகுந்துணராப் பொருக்கேன் றயற்சோ பானவழி வருமா ளிகைசூழ் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ மறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ. (4)
312 ஊற்றும் பசுந்தேன் முளரிமுகை யுளர்வண் டடைய முறுக்குடைய வோதக் கடலின் முகம்புழுங்க வுதயமெழுந்து சிதையவிருள் பாற்றுங் கடவுட் கதிர்கடவும் பசுமா வுருளைத் தனிவையம் பகைகொண் டிளைஞர் மிகைகடவும் பைம்பொற் கொடிஞ்சித் தேர்முழக்குங் கூற்றும் வெருவப் பொருங்களிறு பிளிறு மொலியும் குளிறொலிமான் குரற்கிண் கிணியி னெழுமொலியுங் குழுமி யெழுமா முகின்முழக்கை மாற்று மறுகார் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலெலோ மறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலெலோ. (5)
வேறு.
313 பொங்கும் பாற்கடன் முழுதுங் கொளுவு புழைக்கை யடக்கியெழூஉப் பூமக ணான்முகன் மால்சிவ னேயுயிர் போயின மெனமுறையிட் டெங்குஞ் சிதறி விழப்பின் விடுத்தலை யெறிதரு மக்கடல்விட் டேனைக் கடலு முழக்கிக் குலவரை யெட்டையு முட்டிநிறந் தங்குங் குலவொரு கோட்டாற் குத்திச் சாய்த்துப் பிலநுழையாத் தாதை யெனப்பணி பூண்டு வருஞ்சிறு தந்திக் கன்றருளுஞ் செங்குங் குமநிறை கொங்கை சுமந்தெழு சிறுபிடி தாலெலோ செல்வத் திருவுறை யூரில் விளங்கு செழுங்குயில் தாலெலோ. (6)
வேறு.
314 உதைய மெழுங்கதி ரெதிரெழு செங்கே ழொழுகொளி முழுமணியே யோண்பவ ளத்திரு வோங்கலை நீங்கலி லோங்கொளி மரகதமே இதைய நெகிழ்ந்துரு குங்களி யன்பின ரெய்ப்பகல் கற்பகமே யெம்முள மூடிரு ளோடி மலங்க விலங்கும் விளக்கொளியே குதைவரி விற்புரு வத்தர மகளிர்கள் கும்பிடு கோமளமே குழைபொரு கட்கரு ணைப்பெரு வெள்ளக் கொள்ளைப் பேராறே ததையு மலங்கன் மிலைந்த குழற்கொடி தாலோ தாலெலோ தருமம் பொலிதிரு வுறையூ ருறைபவள் தாலோ தாலெலோ. (7)
வேறு.
315 தருவிற் பொலிமலர் மாமுடி மேல்விழ வானோரேனோருந் தகைபொற் சிகைம¨ர் தாள்விழ மீளவிண் ணாள்வார்வாழ் வாரே யுருவிற் பறவைகள் பூமக ணாமகள் சேர்வாரூர்வாரே யொருவிற் குமரனை நீயுர வாவிடின் மாதாவேயோவென் றிருவிற் புவனமெ லாமலர் போலடி மீதேதாழ்தோறு மினிதுற் றருள்வர தாபய மேவுகை யாயேயோயாதே கருவிற் படுமெனை யாளுடை நாயகி தாலோ தாலெலோ கழகத் திருவுறை யூரமர் மாமயில் தாலோ தாலெலோ. (8)
வேறு.
316 குருமருவுசெம்பொன் வரைவில்கைசுமந்து கூடாரூர்தீயே குடிபுகமுனிந்த சிவபரனைவென்றி டாதேயேகேன்யான் மருமருவுதொங்கன் முடியமரர்வந்து பாரீர்போய்மோதா வருவலனவந்த வொருமதனனங்கம் வேவாநீறாக வுருமருவுவெம்பு மழல்விழிதிறந்த கோமான்மாமோக வுததியிலழுந்த விளநகையெழுஞ்சே வாய்மானேதேனே திருமருவுகொண்ட றிகழவருதங்கை தாலோதாலெலோ செழிதமிழுறந்தை தழைதருகரும்பு தாலோதாலெலோ. (9)
வேறு.
317 தெளிதருமறைய னைத்தையுமெழுதி டாதேயேர்தாமே தெறுகழுவொருகு லச்சிறைநிறுவி வீணேபோகாமே யளியறுபறித லைச்சமணிருளி லேபார்மூழ்காமே யழலுருவிறைய வர்க்குடல்குளிரு மூண்வேறாகாமே வளியெறிபொதியி னற்றவர்களிய லாவாறேகாமே மடரறையுளமு நெக்கிடமுலையின் வாய்வார்தேனார்பால் குளிர்தருபுகலி யர்க்கினிதுதவு தாயேதாலேலோ கொழிதமிழ்கெழிய குக்குடநகரின் வாழ்வேதாலேலோ. (10)
3 - தாலப்பருவம் முற்றிற்று. 4 - சப்பாணிப்பருவம். 318 எண்கொண்ட தலையிரண் டிட்டமுப் ப·தற மிருக்குமா லயமென்றும்வா - னெம்பிரா னாயவொரு தம்பிரான் கைக்கமல மேந்துசெங் காந்தளென்றுங், கண்கொண்ட விருசுட ரடங்கித் தடைப்படு கடுஞ்சிறைக் கூடமென்றுங் - காமரயி ராணிமங் கலநா ணளித்தசேய் கண்படைகொள் பள்ளியென்றும், பண்கொண்ட வஞ்சொற் கிளிக்குஞ்சு துஞ்சுதல்செய் பஞ்சரம தென்றுமறைகள் - பாடித் துதித்துவகை தூங்கவெஞ் ஞான்றும் பரிந்துபா ராட்டுசீர்த்தித், தண்கொண்ட தாமரை முகிழ்த்தொளி ததும்பவொரு சப்பாணி கொட்டியருளே - தண்ணளி தழைந்துவளர் புண்ணியவுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே. (1)
319 காயா நிறத்தவன் சுதரிசன மொடுமரைக் கண்ணனெண் றொருபெயருமுக் - கண்ணவ னிடம்பெறச் செய்தபே ருதவியைக் கைவிட் டிருட்பகையைமுன், னாயாது ஞாட்பிடை மறைத்ததை யறிந்துமவ னமுதைப் பரித்தல்செயுமே - யம்மைநின் னொருகையை யிருகைகொடு தாங்குவ தறிந்தலை கடற்றோன்றுமத், தூயாடவத்தளென நறுமுளரி யென்றுஞ் சுமக்குமா லென்றுகூறிச் - சூராமடந்தையர்கள் பாராட்டு கையொளி துளூம்பவெளி யேங்களூக்குத், தாயா யிருப்பதுமெ யானான் மகிழ்ந்தின்றோர் சப்பாணி கொட்டியருளே - தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே. (2)
320 பாராட்டு நின்சிறு சிலம்பிற் சிலம்பினப் பார்ப்புநா லைந்துதருவேம் - பயில்குதலை நினதுவாய்ப் பவளமுத் தங்கொளப் பைங்கிளிக் குஞ்சுதருவேங், காராட்டு கந்தரத் தெம்மா னிடத்திருக் கைமானு மினிது தருவேங் - கவினுடைப் பாவையைக் கைபுனையும் வண்ணமுங் கற்கப் பயிற்றிவிடுவேஞ், சீராட் டுடன்குலவு வண்டற் பிணாக்களுஞ சேர்ப்பே மிதன்றியாமென் - செய்யினுங் கைம்மா றெனக்கருத லகவிதழ்ச் செங்கையொளி பொங்கநறவத், தாராட்டு கூந்தலெம தெய்ப்பாற விப்போழ்தொர் சப்பாணி கொட்டியருளே - தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே. (3)
321 ஆனநெய் தெளித்துநறு நானமு மளாய்ச்சூழி யணிபெற முடித்து மொளிசே - ரரிக்குரற் கிண்கிணியொ டம்பொற் சிலம்புநி னடித்தளிர் திருத்தியம்பாய், மீனநெடுநோக்கினுக் கஞ்சனந் தீட்டியும் விளங்குபுண் டரநுதற்கண் - விலகிவில் லுமிழ்மணிச் சுட்டியது கட்டியும் வியன்கதிர் விழும்பொழுதுபொற், கானநிறை தொட்டிவிற் கண்வளரு மாறுபல கண்ணேறு போக்கியுமுளங் - களிகொள்ளும் யாமுவகை மீக்கூர வன்பிற் கணக்கில்புவ னங்கணோக்கத், தானமருள் கைத்தலனை நோக்கிநிற் கின்றேமோர் சப்பாணி கொட்டியருளே - தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே. (4)
322 சிலையெடுத் தன்னநின் றிருநுதலி னுண்டுளி செறிந்திடா மற்செறிந்த - செழுநிறக் குருகுக ணெரிந்திடா மற்றிளிர்ச் செங்கரங் கன்றிடாமன், முலையெடுத் துயர்மார்பி நமுதூற்று திருவாய் முகிழ்த்தநகை நிலவுகொட்ட - முனிவின்றி நின்கரங் கண்ணொத்தி முத்திட்டு மோந்துயா முவகைகொட்ட, அலையெடுத் துயர்கங்கை மங்கைதன் நெஞ்சகமு மஞ்சித் தடாரிகொட்ட - வம்மவிம் மிதமுறீஇ யவிர்முடி துளக்கிநம் மம்மான் குடங்கைகொட்டத், தலையெடுத் துயரறமு மாவலங் கொட்டவொரு சப்பாணி கொட்டியருளே - தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே. (5)
வேறு.
323 கருநிற வெழிலி முழக்கென வெம்மான் கயிலையின் மயிலாலக் காயு மடங்கன் முழக்கென மகலான் களிறும் பிளிறியிட வுருமின் முழக்கென வரவிறை யுள்ள முளைந்திட வரமாத ரூடல் வெறுத்து வெரீஇத்தம் மகிழ்ந ருரங்குழை யத்தழுவத் திருமறு மார்பன் றுண்ணென வளர்துயி றீர்ந்தெவ னெனவினவத் திகழண் டங்கள் குலுங்கக் குணில்பொரு செழுமுர சொலிகெழுமுங் குருமணி வெயின்மறு காருறை யூர்மயில் கொட்டுக சப்பாணி குழவி மதிச்சடை யழக ரிடத்தவள் கொட்டுக சப்பாணி. (6)
324 பூணைப் பொருமுலை மங்கையர் பயிலும் பொங்கொளி வெண்மாடம் புதுநில வொழுகொளி முழுகியு மெழுகழல் போகட் டதுபோற்கற் றூணைப் பொருமுட் டிருகரு முருகத் தோன்றுழு வற்பிரியத் தூயோ ருருவத் திருவப் பேரொளி தோய்ந்துங் கழைசுளியா மாணைப் பெறுமிரு வெள்வே ழத்தினை வாயிரு பாலுநிறீஇ மதமால் யானைகள் கற்பக் குளகுகொள் வண்கோ டொருநால்வெண் கோணைக் களிறென வருமுறை யூர்மயில் கொட்டுக சப்பாணி குழவி மதிச்சடை யழக ரிடத்தவள் கொட்டுக சப்பாணி. (7)
வேறு.
325 மடலவிழ்நறுமுட் டாழையில் வாழையின் மணமலிபிரசக் காவியில் வாவியின் மதிகதிர்தவழ்பொற் சோலையின் மாலையி னச்சுவடிப்பார்வை - வரிவளையவர்நெய்த் தோதியில் வீதியி லகவிதழ்வனசப் பூவினின் மாவினில் வடிவுடையலரிக் கூடையி லோடையின் மற்பசுமைப்பூக, மிடறருளிளநற் பாளையில் வாளையில் வினைஞர்கள்சிகையிற் பூவிரி காவிரி வியலியல்குலையிற் சாலியின்வேலியின் மைக்கவரிபபால்பாய் - விரிதருகுளனிற் கூவலி லோவலில் வளனருள் புறவப் பாரினில் வேரினில் விழைமதுநுகரப் போயுறவாயுற மொய்த்தசுரும்பேபோ, லடலிளைஞர்கள்பட் டாடையி லோடையி லறவளைதனுவிற் றூணியினாணியி லவிர்கரமலரிற் றோளினில் வாளினில் விற்பொலிமுத்தாரத் - தகலமதனின்மெய்ச் சேயினில் வாயினி லொழுகொளிமுகினிற் றாழ்குழை வாழ்குழை வமர்தருசெவியிற் றேரினி லேரினில் வைத்தமுடிப்பூணிற், றொடர்படுபொருணட் பால்விலை மாதர்க ளரிமதர்நயனக் காரளி போய்விழு துரிசறுவளமைக் கோழியில் வாழ்மயில் கொட்டுகசப்பாணி - துயல்வருமிதழித் தாமம் விராவிய புயமுதலவருக்கோர்துணை யாயவ டுகளறுகருணைக் கோயிலின் மேயவள் கொட்டுகசப்பாணி. (8)
வேறு.
326 பரவு நெடும்புவ னந்தரு மைந்தன் விரித்தபடப்பாயற் பகவன் மதம்பொழி வெண்கரி வந்தருள் கட்படி வத்தேவ னுரக ரருந்தவ ரெண்டிசை நின்றவர் முப்பது முக்கோடி யுறுதொகை யண்டர்கள் செங்கதிர் வெண்கதிர் சித்தகணத்தோர்கள் கரமுடி கொண்டொரு நந்தி பிரம்படி பட்டும் விருப்பாகிக் கவின வணங்க வுகுத்த மிகுத்த முடிப்பொன் மணித்தூள்டா யரவொலி பொங்கு முறந்தை யிருந்தவள் கொட்டுக சப்பாணி யழகமர் கொங்கை சுமந்த விளங்கொடி கொட்டுக சப்பாணி. (9)
வேறு.
327 ஒலிகட லமுதன மூவர்கள் வாயரு மைத்தமிழ் நற்பாட லுடலுறு பிடகரை மோதிய சோதிவி ரித்தசு வைப்பாடல் பொலிதரு சமையந னூலியல் யாவும யக்கமறத்தேறிப் புறமத மறமெறி நூல்களு மோதியு ணர்ச்சிமிகுத்தோவா வலியுறு பதிபசு பாசமு மீதிதெ னத்தெளிவுற்றாராய் மயலறு விழிமணி வாள்வட நீறையெ ழுத்துமதித்தோகை மலிதர வொளிருவர் சேருறை யூர்மயில் கொட்டுகசப்பாணி மலர்தலை யுலகமெ லாமரு ணாயகி கொட்டுகசப்பாணி. (10)
|