|
||||||||
தமையனே !!! |
||||||||
தமையனே !!!
என்னமோ தெரியல ! எதுவும் புரியல ! என் மனசு ஏங்குது - எப்பொழுதும் என் அண்ணன் உனை நினைத்து என் கண்கள் நனைகிறது !
நம் வீட்டின் கடக்குட்டியாய் நான் பிறக்க குறும்புகள் பல செய்வேன் - எப்பொழுதும் கூடவே நடப்பாயே ! தூக்கியே சுமப்பாயே ! உன்னையே மறப்பாயே எனக்காக!
தின்பண்டம் திருவிழா ! புத்தகம் புத்தாடை ! தலைமகனே தாரைவார்ப்பாய் தாராளமாய் - எப்பொழுதும் தன்னாசை துறப்பாயே ! தம்பியத்தான் தாங்குவேயே ! என்னாசை அண்ணனே ஆருயிரே !
நானின்று கண்ணாடி மாளிகையில் கம்பியிரமாயிருக்க நீயன்று கால்வலிக்க கஷ்டப்பட்டாய் - எப்பொழுதும் உள்ளமே உருகுதே ! உசிராய் துடிக்குதே ! தியாகமே தமையனுனைப் பார்க்கணுமே |
||||||||
by Jairam on 03 Oct 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|