LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

தமிழ் ஒரு பூக்காடு

முத்தமிழே !    ஞாலத்தில்   முந்தி   வந்தே

மூவாமல்    கன்னியென   இலங்கு   கின்றாய்

தித்திக்கும்    அமுதமெனச்   சுவையாய்   நாவில்

திகழ்கின்றாய் !   முச்சங்கப்    புலவ   ராலே

எத்திக்கும்   புழ்மணக்கும்   ஏற்றம்   பெற்றாய் !

எழுந்துவந்தே   கடற்கோள்கள்    அழித்த   போதும்

வித்தாக    முளைத்துநின்றாய் !  மூவேந்   தர்தம்

வளர்ப்பினிலே    பூக்காடாய்   செழித்து   நின்றாய் !

 

எழுத்திற்கும்    சொல்லிற்கும்   நெறிவ   குத்தே

எழுதுகின்ற   உலகத்து   மொழிக   ளுக்குள்

எழுத்திற்குள்   அடங்காத   உணர்வை;  காதல்

எழுப்புகின்ற   மெய்ப்பாட்டை   இல்ல   றத்தை

தழுவுகின்ற   கூடலினை   ஊடல்   தன்னை

தாய்செவிலி   பாங்கிபாங்கன்    வாயில்   கூற்றை

வழுவாத   மறத்தைவாழ்வின்     பொருளைக்   கூறும்

வண்தமிழோ   இலக்கணத்துப்   பூக்கா   டென்பேன் !

 

நிலம்ஐந்தாய்   பகுத்ததனைத்   திணைக   ளாக்கி

நிகழ்கின்ற   நிகழ்வுகளைத்   துறைக   ளாக்கிப்

புலப்பண்பைக்    கருஉரியாய்   அகத்தில்   வைத்தும்

புகழ்வீரம்   புறமாக்கிப்   பத்துப்   பாட்டாய்

நிலவிடும்எட்   டுத்தொகையாய்    அறமு   ரைக்கும்

கீழ்க்கணக்காய்க்    காப்பியமாய்    தொன்னூற்   றாறாய்ப்

பலப்பலவாய்   வாழ்வியலை   எதிரொ   லிக்கும்

பசுந்தமிழோ    இலக்கியத்துப்   பூக்கா   டென்பேன் !

 

 நங்கையிடம்   தூதாக   நடக்க   வைத்து

நரிதன்னைப்   பரியாக்கி   சாம்பல்   தன்னை

மங்கையாக   உயிர்ப்பித்து   முதலை   உண்ட

மதலையினை   உமிழவித்துப்    பாய்சு   ருட்டி

இங்குனக்கோ    இடமின்றேல்   எனக்கு    மில்லை

என்றாழ்வார்   பின்செல்ல   வைத்துப்   பாட்டால்

எங்குமுள்ள    இறைவனையே   ஆட்டி   வைத்த

எழிற்றமிழோ    பக்திமணப்    பூக்கா   டென்பேன் !

 

கீர்தனைகள்    எனப்புரியா    மொழியில்   பாடக்

கீழ்மேலாய்த்   தலையாட்டும்    மாடாய்   ஆனோம்

சீர்த்தகுரல்   கைக்கிளையும்   துத்தம்   தாரம்

விளரியொடு   உழைஇளியும்    ஏழாய்   நின்று

ஆர்த்தசுரம்   பன்னிரண்டு   பாலைக்   குள்ளே

அரும்பண்கள்    நூறோடு   மூன்றில்    தேனைச்

சேர்த்தளிக்கும்    துளைநரம்பு    கருவி   கொண்ட

செந்தமிழோ    இசைநிறைந்த    பூக்கா   டென்பேன் !

 

போர்க்களத்தில்    அறம்பார்த்தும்   விழுப்புண்   மார்பைப்

பொருதுபெறப்   போட்டியிட்டும்   பிறர்இல்   நோக்கா

பேர்ஆண்மைக்    காளையரைக்   களவில்   பார்த்தும்

பெருங்காளை   அடக்கிவரக்   கற்பில்   சேர்ந்தும்

பார்சுற்றிக்    கடல்கடந்து    பொருளை    ஈட்டிப்

பகிர்ந்தளித்தும்   சாதியற்ற   சமத்து   வத்தில்

ஊர்இணைந்தும்    வாழ்ந்திருந்த   சங்க   கால

ஒண்தமிழோ   வாழ்வியலின்   பூக்கா   டென்பேன் !


- பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

by Swathi   on 01 Nov 2014  0 Comments
Tags: Tamil   Pookaatu   Karumalai Thamilaalan   தமிழ்   பூக்காடு   கருமலைத்தமிழாழன்     
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
தமிழ் ஏன் கற்கவேண்டும்?  முனைவர்.இர.பிரபாகரன் தமிழ் ஏன் கற்கவேண்டும்? முனைவர்.இர.பிரபாகரன்
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
தற்சாற்புப் பொருளாதாரம்.. தற்சாற்புப் பொருளாதாரம்..
தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்... தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...
தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள் தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்
தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்) தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.