LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

தமிழனின் தனிப்பண்பு

"முன்பு மாநிலம் ஆண்ட தமிழர் மீண்டும் அரசாளும் நாள் வருமா?'' எனக் கேட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், "தமிழர் அரசு வரும்' என்று தித்திப்பான சேதியைக் கூறினார்.
தமிழர்கள் தங்கள் அரசைப் பெற்றிருக்கிறார்களா? என்பது விரிவாக விவாதிக்க வேண்டிய பொருள். ஆனால் ஒன்றை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும்; தமிழர்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழனின் பண்பு- யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பது அல்ல; யாரையும் தாழ்த்துவது அல்ல.
தமிழகம் உலகின் ஒரு பகுதியாக இருக்கலாம் ஆனால் அது யாருடைய வேட்டைக் காடாகவும் இருந்திட ஒருநாளும் ஒருப்பட மாட்டேன்!
முன்பிருந்த மன்னர்கள் அலை கடலை வென்றார்கள். நம்முடைய வணிகர்கள் நாவாய்களில் (கப்பல்களில்) ஏறிக்கொண்டு, மாரீஸ் தீவுக்கும், பிஜித் தீவுக்கும், மடகாஸ்கருக்கும் சென்று தமிழ் மணம் பரப்பினர் என்று இப்போது ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தச் செய்தியை நமது பழம்பெரும் இலக்கியங்கள் வெகுநாள்களுக்கு முன்பே கூறியிருக்கின்றன.
தாரணி மெச்ச வாழ்ந்தோம் ஒருநாள்!
தாரணியிலிருந்து யார்- என்ன-
கொடுப்பார்கள் என்று ஏங்குகிறோம் இன்று!
ஞாயிறாகத் திகழ்ந்தோம் அன்று;
இருட்குகையில் சிக்கித் தவிக்கிறோம் இன்று!
அதற்காக "அந்த ஞாயிறு மறைந்துவிட்டது
என்று பொருள் அல்ல'
நமது கண் கொஞ்சும் மங்கலாகிவிட்டது;
பழுதாகிவிட்டது- என்று கூடக் கூறமாட்டேன்.
மங்கலாகிவிட்ட கண்களைக் கொஞ்சும்
துடைத்துவிட்டுக் கொண்டு பார்த்தால்
ஞாயிறு தெரியும்.
நாமும் ஏறிட்டுப் பார்த்து,
நெஞ்சு நிமிர்த்தி-
"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'
என்று இளங்கோவடிகளைப் போலப் பாடிடலாம்!
தயங்காதே!தமிழா!
மயங்காதே தமிழா!
தமிழகம் இன்று தனது இயல்பான மாண்புகளை மறந்து துயில் கொள்கிறது என்று கூற மாட்டேன்; மயங்கிக் கிடக்கிறது என்று கூற மாட்டேன். ஆனால் தயக்கம் இருக்கிறது என்று தான் கூறுவேன்.
"நம்மால் முடியுமா? என்ற தயக்கம் நமக்கு இருக்கிறது.சேரன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்ற போது நம்மால் முடியுமா?' என்று அவன் தயங்கவில்லை.
சோழன் நாவாய்களைச் செலுத்தி அலைகடலுக்கு அப்பால் உள்ள நாடுகள் வென்ற போது "நம்மால் முடியுமா?' என்று அவன் தயங்கவில்லை.
காட்டுப்புறத்தில் தினை பொறுக்கச் சென்ற தமிழ்ச் சீமாட்டி யொருத்தி மீது புலி பாய்ந்து வந்தபோது "நம்மால் முடியுமா? என்று எண்ணி அந்தப் புலி வெட்கத்தால் ஒடியிருக்கும் என்றே கருதுகிறேன்.
அன்று தமிழ்ப் பெண்கள் புலியை முறத்தால் அடித்துத் துரத்தினர். இன்றும் தமிழ்ப் பெண்கள் நமது பகையை முறத்தால் அடித்த விரட்டத் தயார் எனினும் அந்த முறம் கிடைத்தால் அதை எங்கு விலைக்கு விற்றுக் காசாக்கலாம் எனக் கருதுகிற மனம்தான் நமக்குப் பகை
முதலில் நமக்கு இருக்கிற தயக்கத்தைப் போக்கும்
மாநாடுதான் இந்தப் பூம்புகார் மாநாடு!
"தயங்காதே தமிழா! என்று அடிப்படைப் பாடத்தைத் தருகிற மாநாடு இது!
அந்தப் பாடத்தோடு , "மயங்காதே, தமிழா!
என்ற பாடத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்
மயக்கம் ஏனென்றால் பத்து நாள்களாக நாம் தமிழின் பெருமை கேட்டு அந்த மயக்கத்தில் இருக்கிறோம். ஆனால் இந்த மயக்கம் கெடுதல் செய்யாத மயக்கம்! தமிழன் ஒருவன் தான் இவ்விதம் கெடுதல் தராத மயக்கத்தை -மொழிதரும் இன்பத்தால் மயக்கத்தைப் பெறுபவன்.
அந்த மயக்கத்திலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும் ஏனெனில் வேலை இருக்கிறது. நிரம்ப! வேலை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும்! வேலை இருக்கிறது ஒவ்வொரு நாளும் !

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.