LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நீண்ட நாட்களுக்குப் பின் தஞ்சையில் தமிழ்க்கூடல்…வருக... நவம்பர் 23, 24

நீண்ட நாட்களுக்குப் பின் தஞ்சையில் தமிழ்க்கூடல்…வருக...

அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவையும் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து 2024, நவம்பர்த் திங்கள் 23, 24(காரி,ஞாயிறு) ஆகிய நாள்களில் தமிழ்க்கூடல் நிகழ்வினைத் தஞ்சாவூரில் நடத்துகின்றன. இதில் 50க்கும் மேற்பட்ட இந்தியச் தமிழ்ச்சங்கங்கள் கலந்துகொண்டு தமிழ்வளர்ச்சி குறித்து சிந்திக்கிறார்கள்.

இதில் நானும் கலந்துகொண்டு "இன்றைய சூழலில் தமிழ்ச்சமூகம் சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்" என்று தலைப்பில் உரையாற்றுகிறேன்.

கலந்துகொள்ளும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களுக்கும் ஐந்து ஆண்டுகள் உலக அளவில் நடைபெற்ற ஐந்தாண்டு ஆய்வுத்திட்டமான "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம்" இறுதி அறிக்கையாக வெளியிட்ட "Thirukkural Translations in World Languages" நூலின் ஒரு பிரதியை 50 தமிழ்ச்சங்கங்கள் , ஆளுமைகளுக்கு பரவலாக்கல் நோக்கில் வழங்கத் வலைத்தமிழ் பதிப்பகம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மாண்பமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களும், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும், தவத்திரு குமரகுருபர அடிகளார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

தமிழ்நாட்டு அரசின் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா. மு. நாசர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் வி. திருவள்ளுவன், முன்னைத் துணைவேந்தர்கள் முனைவர் சி. சுப்பிரமணியம், முனைவர் இ. சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ப. மருதநாயகம், அருள்தந்தை ஜெகத் கஸ்பார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பிக்க உள்ளனர்.
இந்தியாவில் இயங்கும் பல்வேறு தமிழ்ச்சங்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆய்வறிஞர்கள் பேராசிரியர்கள், தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் உரையாற்றவும் உள்ளனர்.

தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இதுபோன்ற ஆண்டின் மிகப்பெரிய கூடல்களை தமிழ்ப்படிக்கும் மாணவர்களுக்கு கொண்டுசென்று கல்லூரி வகுப்பறைகளில் இதுகுறித்து பகிர்ந்து முடிந்தவர்கள் நேரில் கலந்துகொள்ளவும், முடியாதவர்கள் இணையவழியில் கண்டு அறிவைப் பெறவும் வலியுறுத்துவார்கள்.

அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறவும்...


பேரன்புடன்,
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

by Swathi   on 19 Nov 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா! 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா!
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை -  மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை - மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு
மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு
கடலூர் பெண்  குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை கடலூர் பெண் குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை
பிரதமர் திறந்துவைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? பிரதமர் திறந்துவைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
1500 பாடல்கள் எழுதிய கவிஞர் முத்துலிங்கத்துக்கு பாராட்டு விழா! 1500 பாடல்கள் எழுதிய கவிஞர் முத்துலிங்கத்துக்கு பாராட்டு விழா!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.