LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கிவைத்து 24 மொழிகளில் தமிழ் பாடநூல்களை தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கிவைத்து 24 மொழிகளில் தமிழ் பாடநூல்களை தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் வெளியிட்டார்.

உலகில் ஏறத்தாழ 90 நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது. இதன் ஒருபகுதியாக தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் திட்டமிடப்பட்டது.

முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழை கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழை திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


தமிழே என அழைப்பதில் சுகம். தமிழ் வெறும் மொழியல்ல, அது நம்முடைய உயிர். தமிழை, தமிழே என அழைப்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இருக்காது. தமிழ் வாழும் காலம் எல்லாம் தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைப்பதை வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறனே். வீழ்வது நாமாக இருப்பதாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பது தான் எங்கள் முழக்கம். தமிழை வளர்க்க தனி அக்கறையுடன் செயல்பட்டு வரும் அனைவருக்கும் அரசு சார்பில் இதயப்பூர்வமான நன்றி.

24 மொழிகளில் தமிழ் பாடநூல் இதற்கு மகுடம் வைப்பது போல் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. 30 நாடுகளில் அதிகமாகவும், 60 நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும தமிழர்கள் வாழ்கிறார்கள். சில நாடுகளில் எழுதவும், படிக்கவும் மறந்த தமிழர்கள் உள்ளனர். இவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கத்தான தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக 24 மொழிகளில் தமிழ் பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சாதி, மதத்தால் பிரிக்க முடியாது 30 நாடுகள், 20 மாநிலங்களை சேர்ந்த தமிழ் அமைப்பின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைய வழியில் பங்கேற்றுள்ளனர். உணர்வால், உள்ளத்தால் தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அமெரிக்கா, குவைத், நார்வே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் இணைந்துள்ளனர். மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது. தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் தமிழ் இதற்கு முன்பு தமிழ் பாதுகாப்பு கழகம் துவங்கப்பட்டது. அப்போது தமிழை பாதுகாக்க வேண்டிய காலக்கட்டமாக இருந்தது. தற்போது தமிழை பரப்ப வேண்டிய காலம். இதனால் தான் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ்மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் இதன் உயரிய நோக்கம்'' என்றார்.


தமிழ் வழக்கொழிந்து தமிழில் பெயர்களையும், தமிழில் வழிபாட்டையும், பண்பாடு கூறுகளையும், உணர்வையும் மட்டுமே வைத்துக்கொண்டுள்ள, தமிழ் மொழியை பேசாத இரண்டாம், மூன்றாம் தலைமுறை தமிழ் மக்கள் வசிக்கும் தென்னாப்பிரிக்கா , மொரிசியஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்த மொழிபெயர்ப்பு பாடநூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு முயற்சி மேற்கொண்ட தமிழக முதல்வர், அமைச்சர், தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

 

இந்த நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து பதிவிட்டுள்ள சப்பான் தமிழ்ச்சங்கம் கூறியதாவது:

குறிப்பிட்ட நேரத்தில் (மாலை 6.30) சரியாக ஆரம்பித்து, சுருக்கமாக (50 நிமிடங்களுக்குள்) ஆனால் கச்சிதமாக நடத்தப்பட்ட அரசு விழாவில் இணையவழியாக கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி.
 
சிறந்த முறையில் ஒலி, ஒளி, காணொளி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள் - பல நாடுகளிலிருந்து ஜும் மூலம் பலரும் பார்த்துக் கொண்டிருந்ததை நாம் காண பெரிய திரை இரண்டு பக்கமும் தெரியும் மாதிரி வைக்கப்பட்டிருந்தது. வெளி நாடுகளில் இருந்த சிலர் சில நிமிடங்கள் பேசினார்கள் - அந்த பேச்சுக்களை நேரடி ஒளிபரப்பு செய்தால் தரம் இருக்காது, இடைஞ்சல்கள் இருக்கும் என்பதால் அவற்றை முன்கூட்டியே பதிவு செய்து திருந்திய வடிவில் செய்து கோர்வையாக ஓடவிட்டார்கள்.
இவ்விழாவில் வெளியிடப்படும் படைப்புகளைப் பற்றி பக்கம் பக்கமாக பேசாமல் தெளிவான அசைந்தாடும் ஒளிப்பதிவாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். இதுகாறும் கேள்விப்பட்ட அரசு நிகழ்ச்சிகள் போலல்லாமல்- மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்தவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
 
புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களின் பிள்ளைகளுக்குச் சிறந்த, எளிய முறையில் தமிழைக் கற்பிக்க, அவர்களுக்குத் தேவையான பாடத்தரவுகளை, புத்தகங்களை, அசைந்தாடும் படங்களை (Animation) தயாரிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்பாடப்புத்தகங்கள் உலகெங்கிலுமுள்ள 90நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் சப்பான் நாட்டில் உள்ள நம் தமிழுறவுகள் பயன்பெறும் நோக்கிலும் சப்பானியர்களும் தமிழ்கற்றுக்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ள “தமிழ்-சப்பானிய மொழி”பாடநூல்கள் நம்முடைய சப்பான் தமிழ்ச்சங்கத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
தமிழர்கள் அதிகம் குடியிருக்கும் நிசிகசாய்,ஓசிமா,யோக்கோஃகமா போன்ற பகுதிகளில் தமிழ்கற்றுக்கொடுக்க நம் சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக முன்னெடுப்பு எடுக்கப்படவுள்ளது.
 
உலகத்தமிழர்களிடத்தில் தாய்த்தமிழைக்கொண்டு சேர்க்க ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பரப்புரைக்கழகம் பெருவெற்றிபெற நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளையும் தமிழ்நாடு அரசிற்கு சிரம்தாழ்ந்த நன்றியினையும் கூறிக்கொள்கிறோம்.
 
by Swathi   on 26 Sep 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.