LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    வலைத்தமிழ் சேவைகள்-Services Print Friendly and PDF
- தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்

தமிழைத் தமிழியாய் பேசுவோம்-உங்கள் ஊரில் இலவச பயிற்சி நடத்த ,பயிற்சிபெற

இன்றைய இளம் பெற்றோர்கள் , ஆசிரியர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சூழலில் வசிப்பவர்கள் , வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று பலரும் தங்கள் பேச்சில் எத்தனை விழுக்காடு தமிழ் , ஆங்கிலம், பிறமொழி கலந்துள்ளது என்று சோதித்துப் பார்க்கவும்.
 
மிகப்பெரிய வியப்பாக இருக்கும். ஆம், வாய்ப்புள்ளபோது மேடையில் பேசிப்பாருங்கள், உங்களுக்கு தமிழில் பேச விரும்பினால்கூட உரிய தமிழ் வார்த்தையைத் தேடும் அளவுக்கு ஆங்கிலம் நம்மை ஆக்கிரமித்திருக்கும்.
 
என்ன தீர்வு? எங்கே சென்று இதற்குப் பயிற்சி எடுப்பது? ஒழுங்கு செய்யப்பட்ட வழிமுறை உள்ளதா?
 
தமிழைத் தமிழாய் பேசுவோம்.. வரும் 21ந்தேதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்கள் நாட்டில், உங்கள் ஊரில், உங்கள் பகுதியில் , நம் பேச்சுத்தமிழை சரிசெய்வோம் வாருங்கள்..
 
இளையதலைமுறை பெற்றோர்கள் நாம் சரியான தமிழை தமிழாகவும், ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவது மட்டுமே நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளை சரியான தமிழ் பேச ஊக்கப்படுத்தும்.
 
தமிழ்ப் பள்ளிக்கு சென்று தமிழ் பேசவேண்டியது நம் குழந்தைகள் மட்டுமல்ல , நாமும்தான்.. வாருங்கள்.. வழிமுறை வகுப்போம்.
 
இதற்கு வாழ்காட்டுதல் குழு , தமிழறிஞர் குழு, வார்த்தைகளைத் தொகுத்த கையேடு, இணையதளம், ஒரு மணி நேரப் பயிற்சி ஆகியவை ஏற்படுத்தப்பட்டு ஆர்வமுள்ள தன்னார்வ ஒருங்கிணைப்பாளருக்கு இலவசப் பயிற்சிகள் வழங்கப்படும்..
 
உங்கள் ஊரில் இலவச பயிற்சி நடத்த /பயிற்சிபெற தொடர்புகொள்ளவும்..
-59 மணித்துளிகள் ஒவ்வொரு வாரமும்
- 5 மணித்துளிகள் நிகழ்ச்சி தொடக்கம்
- தலைப்பு கொடுக்கப்படும். உடன் மனதில் பட்டதை தயாரிப்பு இல்லாமல் பேசவேண்டும்.
- ஒவ்வொருவரும் 3 மணித்துளிகள் பேச, மற்றவர்கள் அந்தப் பேச்சில் கலந்துள்ள ஆங்கில , பிறமொழி வார்த்தைகள் , அதற்கு இணையான பயன்பாட்டில் உள்ள தமிழ் வார்ந்தைகளை குறித்துக்கொள்ளுதல்.
- 2 நிமிடம் பேசியவரின் பேச்சை மீளாய்வு செய்து , வார்த்தைகளை சுருக்கமாகக் குறிப்பிடுதல்.
- 10 பேர் × 5 மணித்துளிகள் = 50 மணித்துளிகள்
- 5+50+4(நிறைவு செயல்பாடுகள்).
-ஏதும் புதிய வார்த்தைகள் , பயன்பாட்டில் உள்ள வார்த்தைகளை குழுவால் அறிந்துகொள்ள முடியாவிட்டால் "தமிழைத் தமிழாய் பேசுவோம்" வழிகாட்டுகள் குழுவிற்கு இணையம் வழி தெரிவிக்கலாம். அவை தமிழறிஞர் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு ஐயங்கள் தெரிவிக்கப்படும்.
 
 
by Swathi   on 02 Jun 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம். தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம்.
வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது? வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது?
பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு
தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்.. தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்..
தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்
தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது.. தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது..
தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd  நிறுவனத்தை வாழ்த்துவோம்.. தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd நிறுவனத்தை வாழ்த்துவோம்..
உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.