LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இலக்கியப் பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்!

இலக்கியப் பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்!
 
பெருந்தலைவர் காமராசரின் சீடர் நெல்லை கண்ணன் அவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாதது. அவருக்கு வயது 77. இளங்கோவடிகள் விருது பெற்ற தமிழறிஞர் நெல்லை கண்ணன் அவர்கள் அநீதிக்கு எதிராக இயங்கிய பெருமகனார்.
 
தலைப்பு எதுவாக இருந்தாலும் வள்ளுவன், கம்பன், பாரதி, காமராஜர் இந்த நால்வரும் தவறாமல் இவர் உரையில் இடம்பெறுவர். அவரது மேடைப்பேச்சுக்கென்று தமிழகத்தில் தனியான ரசிகர் கூட்டம் உண்டு. அவருக்கே உரித்தான நெல்லை வட்டார வழக்கில் பாரதியைப் பற்றிப் பேசுவார். தமிழ்நாட்டின் பல முக்கியமான மேடைகளில் உரை நிகழ்த்திய நெல்லை கண்ணன் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் சமூக வலைத்தளத்திலும் எழுதிவந்தார்.
 
திரு.நெல்லை கண்ணனின் பேச்சை, எழுத்தை, அரசியலை ஒருவர் ஏற்கலாம், எதிர்க்கலாம். ஆனால் தவிர்க்கமுடியாது!
 
மரபுத்தமிழ் இலக்கியங்களை புதிய தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்தியவர். வாழ்வின் கடைசி நொடிவரை வற்றாத தமிழுக்கு சொந்தக்காரர். வரலாற்று அரசியல் நிகழ்வுகளை நினைவில் வைத்து புள்ளிவிவரங்களுடன் கூறும் ஆற்றல் பெற்றவர். அரசியலில் துணிந்து தன் விமர்சனங்களை வெளிப்படுத்துபவர்.
 
ஐயாவின் ஆன்மா இறையருளின் இளைப்பாற இறையருளை வேண்டுகிறோம்..
by Swathi   on 18 Aug 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.