LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

தன் நெஞ்சறியப் பொய்யாதவர்

1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பாளர்களில் கக்கனும் ஓருவர் . விண்ணப்பிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ரூ .25,000/- க்குக் காசோலையை முன்கூட்டியே கட்சிக்குக் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது . அந்த நடைமுறைப்படியே மதுரைப் பாரமலை அவர்களையும் பணத்திற்கான காசோலையைக் கட்டுமாறு பணித்தார் கக்கன் . ‘ நான் காசோலை வேண்டுமானால் தருகிறேன் . ஆனால் வங்கியில் அதற்கான பணம் வழங்கப்படவில்லை என்றால் நான் பொறுப்பல்ல’ என்று வேடிக்கையாகச் சொன்னார் பாரமலை . இதோ பார் ஆண்டிப்பட்டி ‘நல்லகாம் கட்டிவிட்டார் . அதுபோல் நீயும் கட்டிவிடு’ என்று கக்கன் சொன்னதும் ‘யார் வேண்டுமானாலும் காசோலை கொடுக்கலாம் . ஆனால் , அதை ஏற்று வங்கி பணம் வழங்க வேண்டுமே’ என்றார் பாரமலை . ‘ என்னப்பா இது ? காசோலை கொடுத்தால் பணம் கொடுத்துத் தானே ஆகணும் ? நீ சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை’ என்றார் கக்கன் . அது பின்னால் தெரியும் என்பதோடு அமைதியானார் பாரமலை .

அடுத்த கொஞ்சநாளில் கக்கனும் பாரமலையும் காரில் சென்று கொண்டிருக்கும்போது பாரமலையைப் பார்த்து ‘நீ சொன்னது சரிதான்’ என்றார் கக்கன் . ‘ எதைச் சொல்கிறீர்கள்’ என்று பாரமலை கேட்டதும் ஆண்டிப்பட்டி “நல்லகாம்” கொடுத்த காசோலை வங்கியில் பணமில்லை என்ற காரணம் காட்டித் திரும்ப வந்து விட்டது என்ற செய்தியை விளக்கினார் கக்கன் .

1964 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர் , சட்டமன்ற உறுப்பினர் , மாநில அமைச்சர் போன்ற பொறுப்புகளில் இருந்த கக்கனுக்கு வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே காசோலை வழங்கலாம் என்ற செய்தி தெரியவில்லை . பணம் இருந்தால் தான் காசோலை வழங்க வேண்டும் , இல்லையேல் வழங்கக்கூடாது என்ற உண்மையான சிந்தனை மட்டுமே கக்கனின் நெஞ்சம் பெற்றிருந்தது . வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே கள்ளத்தனமாகக் காசோலை வழங்கிப் பிறரை ஏமாற்றலாம் என்பது உள்ளிட்ட பல தவறான செயலுக்குரிய எண்ணம் அவர் நெஞ்சம் கொண்டதே இல்லை . தமது நெஞ்சம் அறிய ஒரு பொய்யான செயலை எந்தச் சூழலிலும் செய்யக்கூடாது என்ற உயர்ந்த உள்ளம் இருந்தமையால் தான் அவ்வாறான சிந்தனைக்குத் தம்மை உட்படுத்திக் கொள்ளாமல் வாழ்ந்தார் என்ற இச்செய்தியை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு . பாரமலை அவர்கள் நெஞ்சாரப் புகழ்ந்து மகிழ்கிறார் .

அரசியல்வாதிகள் என்றாலே பொய்யான பல செயல்களைச் செய்பவர்கள் என்ற சிந்தனையுடைய மக்களிடையே வாழ்ந்த கக்கன் , ‘ தன் நெஞ்சறியப் பொய்யற்க’ என்ற தடத்தில் தமது அரசியல் வாகனத்தைத் தடம் புரளாமல் செலுத்தினார் . அதனால்தான் மக்கள் மனம் என்ற விண்ணுலகில் இன்னும் மின்னும் விண்மீனாய்த் திகழ்கிறாரோ ?

“வாழ்ந்தால் நெருப்பைப்போல் வாழ வேண்டும் ; அது அணைந்து போகக்கூடத் தயாராக இருக்கும் ; குளிர்ந்து போகத்தயாராய் இருக்காது” .

- டாக்டர் மு . வ .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.