LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 875 - நட்பியல்

Next Kural >

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தன் துணை இன்று- தனக்குதவுந் துணையொன்று மில்லாமலும் பகை இரண்டு- தன்னைக் கெடுக்கக் கூடிய பகை இரண்டுடையனவாகவும் தான் ஒருவன் -தான் தனியனாகவும் இருப்பவன் ; அவற்றின் ஒன்று இன் துணையாகக்கொள்க- அப்பகை யிரண்டனுள் தனக்கிசைந்த தொன்றை அப்பொழுதைக்கேனும் நிலையாக வேனும் நல்ல துணையாக அமைத்துக்கொள்க. தனக்கிசைந்து தன்னொடு சேரக்கூடியதும் இன்னொரு பகையை வெல்லுதற் கேற்றதுமாகும்.உண்மையான துணையாகச் செய்து கொள்ள வென்பார் இன்றுணையா என்றார். ஆல் இரண்டும் அசைநிலை. ஆக என்னும் வினையெச்ச வீறு ஆ எனக் கடைக்குறைந்து நின்றது. கொள்கவற்றின் என்பதில் அகரந்தொக்கது. இவ்விரு குறளாலும் நட்பாக்கக் கூடியபகை கூறப்பட்டது.
கலைஞர் உரை:
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
Translation
Without ally, who fights with twofold enemy o'ermatched, Must render one of these a friend attached.
Explanation
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).
Transliteration
Thandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan Indhunaiyaak Kolkavatrin Ondru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >