ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன படம் தனி ஒருவன்.
ஜெயம் ரவியின் ஆக்சன் நடிப்பு, அரவிந்த் சாமியின் வித்யாசமான வில்லன் கெட்டப், என படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜாவிடம் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா? எனக் கேட்கப்பட்டதற்கு ஏன் எடுக்கக்கூடாது கண்டிப்பாக எடுப்பேன். ஹாலிவுட்டில் மட்டும் தான் ஜேம்ஸ் பாண்ட், பேட் மேன் போன்ற படங்கள் வரவேண்டுமா, தமிழில் வரக்கூடாதா எனக் கேட்டிருக்கிறார்.
இப்படம் இந்தியாவின் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கும் நிலையில் தற்போது இந்த இரண்டாம் பாகம் குறித்த செய்தி மேலும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|