தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் இயற்கை மூலிகைகளில் இருந்து மாரடைப்புக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் மூலிகை அறிவியல் மற்றும் சித்த மருத்துவத்துறை இயங்கி வருகிறது. இங்கு இதய நோய்க்கு தடுப்புக்கு இயற்கை மூலிகைகள் மூலம் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த ஆராய்ச்சி இறுதி நிலையை அடையும் நிலையில் உள்ளது.
மூலிகை மருந்து சோதனை :
மாரடைப்பை குணப்படுத்தும் மூலிகை மருந்தை சோதனை செய்ய ஒன்பது எலிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. முதலில் மாரடைப்பு வரக்கூடிய மருந்துகள் 9 எலிகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் ஆறு எலிகளுக்கு மட்டும் மாரடைப்பை தடுக்கக் கூடிய மருந்து கொடுக்கப்பட்டது. மற்ற மூன்று எலிகளுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த சோதனையில் மருந்து கொடுக்கப்பட்ட ஆறு எலிகளும் வழக்கம் போல் சுறுசுறுப்புடன் காணப்பட்டது. மற்ற மூன்று எலிகள் இறந்தன.
இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய பலகலைக் கழக துணைவேந்தர் திருமலை, மக்களை அச்சுறுத்தி வரும் மாரடைப்புக்கு தமிழ் பலகலைக் கழகம் முதன் முறையாக மூலிகை மருந்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது என்றும். இதய நோய்க்கான மூலிகை மருந்துக்கு விரைவில் காப்புரிமை பெற்று விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
|