LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

தந்தை

தந்தை என்னும் ஓர் பந்தம்


தாய்மைக்கு நேர் நிகர் சொந்தம்!

உயிரைப் பாலாய் தருபவள் அன்னை

தன்னை யாவுமாய்த் தருபவர் தந்தை!


ஏர் தொடு தோல் மீதும்


பயிர் தொடும் மார் மீதும்

உயிர் கொண்ட நம் உடலை

வான் தொட வளர்ப்பவரே!


கஷ்டங்கள் ஆயிரம் கண்டும்


கண்களில் நீர் வந்து நின்றும்

நம் இஷ்டங்கள் யாவும் ஏற்று

நம்மை இமயம் ஏற்றிடும் தந்தை!


மழை கண்ட மரம் போல


உயிர் கொண்ட உடல் போல

மலர் கண்ட செடி போல

நம்மைக் கண்டு மகிழ்வாரே!


கிழிந்த துணிகளை தான் உடுத்தி


பல புதுத் துணிகளை வாங்கித் தந்து

கஷ்டங்களைத் தனக்குள்ளே புதைத்துவிட்டு

நம்(மை) இஷ்டம்போல வளர்ப்பவர் தந்தை!


கால் வயிறு உணவோடு


வியர்வையின் துணையோடு

பிள்ளையின் நினைவோடு

உழைத்தே தேய்வாரே!


சொல்லவும் வார்த்தை இல்லை


அவர் செய்வதில் அளவும் இல்லை

நம் வாழ்வெனும் மரத்தின் கீழே

ஆணி வேரென நிற்பவர் தந்தை!


ஒவ்வொரு பிள்ளையின் வாழ்விலுமே


தந்தையின் தியாகம் வேர்விடுமே!

தான் படும் கஷ்டங்கள் ஆயிரமே

சொட்டும் கண்ணீரும் அதைக் கண்டு அழுதிடுமே!


தனக்கென்ற ஆசைகள் ஒன்றும் இல்லை


தன் தியாகத்தை வெளியில் சொல்வது இல்லை!

பத்து மாதம் சுமப்பது அன்னை

நம் வாழ்வை நித்தம் மனதில் சுமப்பவர் தந்தை!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: தந்தை   Thanthai   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Thanthai Kavithai   Kavithai about Thanthai  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.