LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

தற்புகழ்ச்சி விரும்பாத தகைமையாளர்

தம்மைப் பற்றித் தற்புகழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பதே சிலருக்கு வேலையாக இருக்கும் . அல்லது மற்றவர்களை வைத்துத் தம்மைப் புகழ்ந்து பேசச் சொல்வார்கள் . ஒருவர் தம்முடைய பிள்ளைகள் மூன்று பேருமே கலெக்டராக இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார் . ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கலெக்டராக இருக்கும் அதிசயத்தை பத்திரிகையில் எழுத ஒரு நிருபர் அந்தப் பெரியவரிடம்பேட்டி எடுக்க வந்தார் . பேட்டி தொடங்கியது

“ உங்கள் பிள்ளைகள் மூன்று பேரும் கலெக்டர்களா ?”

“ ஆமாங்க

“ மூணு பேரும் எங்க படிச்சாங்க

“ இந்த ஊர்ல தாங்க

இப்ப எந்த மாவட்டங்களுக்கு கலெக்டரா இருக்காங்க ?”

“ வேற ஊர்ல இல்லீங்க . எல்லாம் இந்த ஊர்ல தான் இருக்காங்க

“ ஒரே ஊர்ல மூணு கலெக்டர்கள் இருக்க முடியாதே

“ ஏன் முடியாதுங்க ? மூணு பேருமே இந்த சென்னைப் பட்டணத்தில்தான் இருக்காங்க

“ அப்படியா

“ ஆமாங்க மூத்தவன் கார்ப்பரேஷனில் பில் கலெக்டரு . அடுத்தவன் சினிமா தியேட்டர்ல டிக்கெட் கலெக்டரு . இளையவன் ஓட்டல்ல டோக்கன் கலெக்டரு ” நிருபர் மயங்கி விழுந்தார் .

தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து பேசாதது மட்டுமல்ல . மற்றவர்கள் புகழும் போதும் தடுத்து நிறுத்தியவர் பெருந்தலைவர் காமராசர் . ஒரு சமயம் சென்னைக்கு அருகில் காந்தி சிலைத் திறப்பு விழா நடைபெற்றது . காமராசர் தலைமை வகித்தார் . முதலில் பேச வந்தவர் காமராசரைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார் . அலங்கார நடையில் காமராசரின் சாதனைகள் , திறமை , அரசியல் அனுபவம் , தியாகம் ஆகியவற்றை விலாவாரியாக விவரித்துக்கொண்டிருந்தார் . இதை காமராசரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை . சீக்கிரம் பேச்சை முடிக்கும்படி குறிப்புக் காட்டினார் . அப்போதும் அவர் பேச்சை நிறுத்தவில்லை . காமராசரால் தாங்க முடியவில்லை . “ நீங்க பேசியது போதும்னேன் ” என்று கூறியபடி காமராசர் எழுந்து மைக்கைப் பிடித்துக் கொண்டார் . “ இவரு பேசினதை எல்லாரும் கேட்டீங்க . இவருக்கு என்மேல் பிரியம் அதிகம் . அதனால இல்லாதது பொல்லாததையெல்லாம் எடுத்துப்பேசுகிறார் . அதுக்காகவா இங்க கூட்டம் போட்டிருக்கோம் . காந்தி சிலையைத் திறக்கப் போறோம் . அவரோட பெருமைகளைப் பத்தி பேசுவோம் .” கர்ம வீரர் காமராசரின்பெருந்தன்மையைக் கண்டு கூட்டமே வியந்தது . ஒருமுறை பெருந்தலைவர் ஓர் ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார் . செருப்பு அறுந்து விட்டது . புதுச்செருப்பு வாங்குவதற்காக ஒரு கடைக்குப்போனார் . உடனே செருப்பைக் கொடுக்காமல் தாமதப்படுத்திக் கொண்டிருந்தார் . காமராசர் விரைவுபடுத்தினார் . அப்போதுதான் கடைக்காரர் உண்மையைச்சொன்னார் . “ அய்யா உங்களோட சேர்ந்து போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை , பெரியவங்க வந்திருக்கீங்க போட்டோ ஸ்டூடியோவுக்கு ஆள் அனுப்பியிருக்கேன் ; கொஞ்சம் பொறுங்க ” காமராசருக்கு கோபம் வந்துவிட்டது . இந்த வேலையெல்லாம்வேணாம் . நீங்க நெனைக்கிற மாதிரி நான் ஒண்ணும்பெரிய ஆளு இல்ல . சாதாரணமான ஆளுதான் . இப்படி விளம்பர ஆசையெல்லாம் வேணாம்னேன் . போட்டோ பிரியர்களாக அலையும் தலைவர்கள் மத்தியில் தனித்து விளங்கினார் தலைவர் காமராசர் .

ஒருவரிடம் தற்பெருமை எங்கு முடிவடைகின்றதோ , அங்கு தான் ஒழுக்கம் துவங்குகின்றது .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.