|
||||||||
தற்புகழ்ச்சி விரும்பாத தகைமையாளர் |
||||||||
தம்மைப் பற்றித் தற்புகழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பதே சிலருக்கு வேலையாக இருக்கும் . அல்லது மற்றவர்களை வைத்துத் தம்மைப் புகழ்ந்து பேசச் சொல்வார்கள் . ஒருவர் தம்முடைய பிள்ளைகள் மூன்று பேருமே கலெக்டராக இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார் . ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கலெக்டராக இருக்கும் அதிசயத்தை பத்திரிகையில் எழுத ஒரு நிருபர் அந்தப் பெரியவரிடம்பேட்டி எடுக்க வந்தார் . பேட்டி தொடங்கியது “ உங்கள் பிள்ளைகள் மூன்று பேரும் கலெக்டர்களா ?” “ ஆமாங்க “ “ மூணு பேரும் எங்க படிச்சாங்க “ “ இந்த ஊர்ல தாங்க “ இப்ப எந்த மாவட்டங்களுக்கு கலெக்டரா இருக்காங்க ?” “ வேற ஊர்ல இல்லீங்க . எல்லாம் இந்த ஊர்ல தான் இருக்காங்க “ “ ஒரே ஊர்ல மூணு கலெக்டர்கள் இருக்க முடியாதே “ “ ஏன் முடியாதுங்க ? மூணு பேருமே இந்த சென்னைப் பட்டணத்தில்தான் இருக்காங்க “ “ அப்படியா “ “ ஆமாங்க மூத்தவன் கார்ப்பரேஷனில் பில் கலெக்டரு . அடுத்தவன் சினிமா தியேட்டர்ல டிக்கெட் கலெக்டரு . இளையவன் ஓட்டல்ல டோக்கன் கலெக்டரு ” நிருபர் மயங்கி விழுந்தார் . தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து பேசாதது மட்டுமல்ல . மற்றவர்கள் புகழும் போதும் தடுத்து நிறுத்தியவர் பெருந்தலைவர் காமராசர் . ஒரு சமயம் சென்னைக்கு அருகில் காந்தி சிலைத் திறப்பு விழா நடைபெற்றது . காமராசர் தலைமை வகித்தார் . முதலில் பேச வந்தவர் காமராசரைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார் . அலங்கார நடையில் காமராசரின் சாதனைகள் , திறமை , அரசியல் அனுபவம் , தியாகம் ஆகியவற்றை விலாவாரியாக விவரித்துக்கொண்டிருந்தார் . இதை காமராசரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை . சீக்கிரம் பேச்சை முடிக்கும்படி குறிப்புக் காட்டினார் . அப்போதும் அவர் பேச்சை நிறுத்தவில்லை . காமராசரால் தாங்க முடியவில்லை . “ நீங்க பேசியது போதும்னேன் ” என்று கூறியபடி காமராசர் எழுந்து மைக்கைப் பிடித்துக் கொண்டார் . “ இவரு பேசினதை எல்லாரும் கேட்டீங்க . இவருக்கு என்மேல் பிரியம் அதிகம் . அதனால இல்லாதது பொல்லாததையெல்லாம் எடுத்துப்பேசுகிறார் . அதுக்காகவா இங்க கூட்டம் போட்டிருக்கோம் . காந்தி சிலையைத் திறக்கப் போறோம் . அவரோட பெருமைகளைப் பத்தி பேசுவோம் .” கர்ம வீரர் காமராசரின்பெருந்தன்மையைக் கண்டு கூட்டமே வியந்தது . ஒருமுறை பெருந்தலைவர் ஓர் ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார் . செருப்பு அறுந்து விட்டது . புதுச்செருப்பு வாங்குவதற்காக ஒரு கடைக்குப்போனார் . உடனே செருப்பைக் கொடுக்காமல் தாமதப்படுத்திக் கொண்டிருந்தார் . காமராசர் விரைவுபடுத்தினார் . அப்போதுதான் கடைக்காரர் உண்மையைச்சொன்னார் . “ அய்யா உங்களோட சேர்ந்து போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை , பெரியவங்க வந்திருக்கீங்க போட்டோ ஸ்டூடியோவுக்கு ஆள் அனுப்பியிருக்கேன் ; கொஞ்சம் பொறுங்க ” காமராசருக்கு கோபம் வந்துவிட்டது . இந்த வேலையெல்லாம்வேணாம் . நீங்க நெனைக்கிற மாதிரி நான் ஒண்ணும்பெரிய ஆளு இல்ல . சாதாரணமான ஆளுதான் . இப்படி விளம்பர ஆசையெல்லாம் வேணாம்னேன் . போட்டோ பிரியர்களாக அலையும் தலைவர்கள் மத்தியில் தனித்து விளங்கினார் தலைவர் காமராசர் . ஒருவரிடம் தற்பெருமை எங்கு முடிவடைகின்றதோ , அங்கு தான் ஒழுக்கம் துவங்குகின்றது . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|