LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விருதுநகரில் வெகு சிறப்பாக நடந்த 2--ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால்  இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.‌

மாநிலம் முழுவதும் நடைபெற்ற தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற 970 மாணவ மாணவியர் இதில் பங்கேற்றார்கள். அவர்களுக்கான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. 
 
முதல் நாள் தொடக்க விழா நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். பேராசிரியர்கள் பர்வீன் சுல்தானா, பாரதி கிருஷ்ணகுமார் உள்படப் பல்வேறு தமிழ் ஆளுமைகள் நிகழ்வில் பேசினர்.  
 
இரண்டாம் நாள் காலை குறள் வினாடி வினா போட்டியும் மாணவர்களுக்கான கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, சிறுகதைப்போட்டி, நடனப் போட்டிகள்  நடைபெற்றன, திருக்குறளில் உள்ள பல்வேறு குறட்பாக்களை எடுத்து அதன்மூலம் மாணவர்கள் நாடகமாகவும் கதையாகவும் நடனமாகவும் விளக்கியது, பங்கேற்ற மாணவர்களை ஆச்சர்யப்படுத்தியது. 
 
பிற்பகலில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் 'தமிழ் ஓசை' இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 'அழகே தமிழே' என்ற தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தா சிறப்புரை ஆற்றினார். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. 
 
இந்த இரண்டு நாள்களில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வழங்கிப் பாராட்டு தெரிவித்தார். 
 
 
by   on 05 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
தெக்கத்தி மண்ணின் படைப்பாளி  இரா.நாறும்பூநாதன்  காலமானார். தெக்கத்தி மண்ணின் படைப்பாளி இரா.நாறும்பூநாதன் காலமானார்.
சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா? சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?
தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத்  தமிழக அரசு திட்டம் இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத் தமிழக அரசு திட்டம்
நிதிநிலை அறிக்கை இலச்சினையில்  ரூ  - தமிழக அரசு அதிரடி நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூ - தமிழக அரசு அதிரடி
6  முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.