கண்ணின் பசப்போ- தென்றற் காற்று இடையிற் புகுந்ததனால் வந்த கண்ணின் பசலையோ; ஒள் நுதல் செய்தது கண்டு- தனக்கு அயலிலுள்ள ஒளிபொருந்திய நெற்றி பசந்தது கண்டு; பருவரல் எய்தின்று - துன்பமடைந்தது. பொருள்களைக் காணுந் தன்மையில்லாத நெற்றி கைகளைத் தளர்த்த வளவிற் பசந்துவிட்டது. ஆனால், அத்தன்மையுள்ள நானோ கைகளைத் தளர்த்த பின் சிறுகாற்று ஊடறுக்கு மளவும் பசவாது வெறுமனே கண்டுகொண்டிருந்தேன், எனத் தன் மென்மைக்கேலாத வன்மையையும் அதன் வன்மைக் கேலாத மென்மையையும் ஒப்புநோக்கி வெட்கிப் போயிற்றென்பதாம். இங்ஙனம் அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலனழியும். ஆதலால், யாம் விரைந்து சென்று அவளை யடைதல்வேண்டுமென்பது கருத்து.
கலைஞர் உரை:
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.
சாலமன் பாப்பையா உரை:
குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!.
Translation
The dimness of her eye felt sorrow now,
Beholding what was done by that bright brow.
Explanation
Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?.
Transliteration
The dimness of her eye felt sorrow now,
Beholding what was done by that bright brow
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்