|
|||||
பூகம்பம், சுனாமி தாக்கியதில் இந்தோனேஷியாவில் 500 பேர் பலி! |
|||||
ஒரை நேரத்தில் பூகம்பமும், சுனாமியும் தாக்கியதில் இந்தோனேஷியாவில் 500 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவில் தான் உலகிலேயே அதிக அளவில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் நடக்கின்றன. இயற்கையின் கோரதாண்டவத்தால் பலு, டோங்காலா, மமுஜூ ஆகிய 3 நகரங்களை சுனாமி விழுங்கி உள்ளது. டோங்காலாவில் இதுவரை மீட்புக்குழுவினரால் நுழைய முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான மக்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவின் மத்தியப் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளியாக பதிவானது. இந்த பூகம்பத்தால் பலு, டோங்காலா நகரங்கள் அதிர்ந்தன. இதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் பலு கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து சுனாமி பேரலை தாக்கியது. சுனாமியால் கடற்கரையை ஒட்டிய வீடுகள், கட்டிடங்களில் கடல் நீர் புகுந்தது. அங்குள்ள பிரமாண்ட மசூதி சுனாமி அலையில் இடிந்து தரைமட்டமான வீடியோக்கள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பூகம்பம், சுனாமியால் தகவல் தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டதால், உடனடியாக தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இந்த பயங்கர பூகம்பத்தில் பலு நகரத்தில் மட்டுமே 500-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏராளமான மக்களைக் காணவில்லை. சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பலரின் சடலங்கள் தொடர்ந்து கரை ஒதுங்குவதால், அந்நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது. சாலைகளிலும், திறந்தவெளி இடங்களிலும் சடலங்கள் குவியல் குவியலாக சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளிலும், சேறு, சகதிகளிலும் குழந்தைகளின் சடலத்துடன் பலர் கதறி அழும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், திறந்தவெளியில் வைத்தபடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். பலு விமான நிலையத்தின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகளுக்காக மட்டும் இங்கு விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 4ம் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனே செய்யும்படி இந்தோனேஷிய அதிபர் ஜகோ விடோடோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணியில் ராணுவம் ஈடு்பட்டுள்ளது. பலு நகரம் மட்டுமின்றி டோங்காலா, மமுஜூ ஆகிய நகரங்களிலும் கடல் நீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. டோங்காலா மக்கள் கதி என்னவென்றே இதுவரை தெரியவில்லை. அங்கும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தோனேஷிய மீட்புக்குழு மையத்தின் செய்தித் தொடர்பாளர் நுக்ரோஹோ ஜகார்தாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘16 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள டோங்காலாவில் இதுவரை மீட்பு குழுவினரால் நுழைய முடியவில்லை. அங்குள்ள நிலைமை எதுவும் தெரியவில்லை’’ என்றார். இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ப… |
|||||
by Mani Bharathi on 30 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|