பிரிட்டானியாவில் இருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் ஈழத் தமிழ்ப்பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பிரிட்டானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவி பயிற்சிக்காக, விண்வெளி ஓடத்திற்கு அழைத்துச் செல்ல தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பிரிட்டானியாவில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் விண்வெளி தொடர்பான கல்வி கற்று வருகிறார்கள். செயற்கைக் கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண் வெளியில் நில அளவை செய்வது போன்ற விண்வெளி தொடர்பாகக் கல்வி கற்கின்றனர்.இவர்களில் அதீத திறமை வாய்ந்த 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப, பிரிட்டானிய விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து இருந்தது.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட இருவரில் ஒருவர், ஈழத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான சியோபன் ஞான குலேந்திரன் ஆவார். மற்றவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டியோனா ஆவார். இருவரும் விண்வெளி ஓடத்தில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். சியோபன் ஞானகுலேந்திரன் தமிழ்ப்பெண் என்பதால் தமிழர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
|