பெற்றோரை இழந்த மாணவியினெ படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள காளிதிம்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி, தனது தாய் தந்தை மறைவுக்குப் பிறகு தன்னுடைய சகோதரரைப் படிக்க வைப்பதற்காக கல்லூரி படிப்பினை நிறுத்தி விட்டு கூலி வேலைக்குச் சென்றார்.
இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில் மாணவியின் பேட்டியை ஊடகங்களில் பார்த்ததாகவும் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாணவியின் விருப்பத்துக்கு ஏற்ப அவரது கல்லூரிப் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவரது சகோதரரின் படிப்பு மற்றும் இதர செலவுகளையும் அரசே ஏற்க உள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
|