|
|||||
மருத்துவ உலகில் சாதனை புரிந்த தமிழர்களை கவுரவிக்கும் மாபெரும் விருது விழா பிரிட்டனில் நடக்கிறது! |
|||||
மருத்துவ உலகில் சாதனை புரிந்த தமிழர்களை கவுரவிக்கும் மாபெரும் விருது விழா, பிரிட்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் நடக்கிறது. இது குறித்து பிரிட்டனில் உள்ள உலகத் தமிழ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: '‘2018-ம் ஆண்டுக்கான உலகளாவிய சிறப்பு மருத்துவ விருதுகள் வழங்கும் விழாவை கொண்டாட உள்ளோம். அந்த வகையில் கடந்த 70 ஆண்டுகளில் பிரிட்டனில் மருத்துவத் துறையிலும், பொது சுகாதாரத் துறையிலும், நேஷனல் ஹெல்த் சர்வீஸ் மிகப்பலத்தை கொண்டுள்ளது. நமது நாட்டின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் மேம்படுத்தி உள்ளது. எனவே இதனை சிறப்பிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனில் 24 வது உச்சி மாநாட்டை கூட்டும் WTO - UK நிகழ்வில் இந்த மிகச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விருது விழாவை பிரம்மாண்டமான நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பிரமாண்ட விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 14 -ம் தேதி பிரிட்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான விழாவிற்கு NHS- ன் பங்குதாரர்கள், ஹெல்த்கேர் நிறுவனங்கள் மற்றும் மருத்து கூட்டமைப்புகள் என அனைவரையும் வரவேற்கிறோம் இந்த விழாவின் மூலம் மிகத் தனித்துவம் வாய்ந்த இந்தியா - பிரிட்டன் உறவுகளை மேப்படுத்துவதுடன் பல புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று நம்பிக்கை கொள்கிறோம்” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
|||||
by Mani Bharathi on 12 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|