LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மத்தியப்பிரதேச சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை ஈடுபடுத்த திட்டம்!

மத்திய பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை ஈடுபடுத்த பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன.

மத்திய பிரதேசத்தில் கடந்த மூன்று முறை அதாவது 15 ஆண்டுகளாக பா.ஜ.க.ஆட்சி நடைபெற்று வருகிறது. 4-வது முறையாகவும் ஆட்சியைத் தக்கவைக்க திட்டமிட்டு, அதற்கென பல்வேறு வியூகங்களை பா.ஜ.க.வகுத்து வருகிறது. இதற்கிடையில், காங்கிரசும் அங்கு ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது. 

கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், மக்களை கவரும் வகையில் தனது தேர்தல் பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை களமிறக்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது. 

இது குறித்து மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பு நிர்வாகி ரஜ்னிஷ் அகர்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது:

 “மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்திலும், கட்சி விளம்பரத்திற்காகவும் மேஜிக் நிபுணர்களை வாடகைக்கு அமர்த்த திட்டமிட்டு உள்ளோம். மேஜிக் நிபுணர்கள் கிராமம், நகரங்களின் சந்தைப் பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் வாக்காளர்களை கவர மேஜிக் காட்சிகளை நடத்துவார்கள். 

கடந்த 1993-2003க்கு இடைபட்ட 10 ஆண்டுகளில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இருந்த மோசமான சாலைகள், மின் விநியோகம் மற்றும் அடிப்படை வசதிகளின் மோசமான நிலை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும்” 

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 23 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.